Monday, December 31, 2012

puththaandu vaazhthukkal



                       புத்தாண்டு  வாழ்த்துக்கள்

                        நாளும் நாம் வளமும் நலமும்  பெற
                        அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த
                        புத்தாண்டு வாழ்த்துக்கள்.

                        

Monday, December 24, 2012

dhariyaimaai sol nee manithan thaanaa

தைரியமாய் சொல்  நீ மனிதன்தானா ???.

        டில்லி கற்பழிப்பு சம்பவம்  நாட்டையே உலுக்கி கொண்டிரிக்கிறது .
         ஒவ்வொருத்தர்
ஒவ்வொன்று சொல்லி கொண்டிருக்கிறார்கள்.
       
         நம்ம தத்து பித்து  உளறுவாயன்  மன்னிக்கவும் ஓலக நாயகன்  அவரும்
         அவர் பங்கிற்க்கு  செப்பியிருக்கிறார்.  எப்படி தெரியுமா ?  பத்திரிக்கையில்
          அவர் சொன்னபடியே

                          அந்த பஸ் என்னுடைய பஸ்  --  அந்தப்பெண்  என்னுடைய
                           சகோதரி   --  கற்பழித்த -- அந்த நபர் என்னுடைய சகோதரன் .
                            கற்பழிப்பு குற்றத்திற்கு தூக்கு தண்டனை  தேவையில்லை .


          அடப்பாவி  மக்கா -   பெற்ற தாயே   குற்றப்பின்னணி உள்ளவனை
           தன மகன் என்று சொல்ல கூச்சப்படுவாள் .  ஆனால் அதி மேதாவி நீயோ
           அவனை உன் சகோதரன் என்று சொல்கிறாயே  வெட்கமாயில்லை.

            நடை பெற்ற சம்பவம்  சினிமா ஷூட்டிங்  அல்ல . பாதிக்கப்பட்ட
பெண்ணின்  உறுப்புகள்  சிதைக்க  பட்டிருக்கிறது .  கடந்த சில நாட்களாக
உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறாள்  அந்த பெண்.

 இன்று எதேச்சையாக கேபிள் டிவியில்  நாடோடி மன்னன் படம் பார்த்தேன் .
50 வருடங்களுக்கு முன்னாள் எடுத்த படம் . அதில் ஒரு காட்சியில் மக்கள் திலகம்   அரசனாக ஒரு சில அறிவிப்பை வெளியிடுவார். அதில் முக்கியமான
ஒன்று

                         கற்பழிப்புக்கு தூக்கு  தண்டனை . மற்ற குற்றங்களுக்கு
                         மன்னிப்பு உண்டு . கற்பழிப்பு குற்றத்துக்கு மன்னிப்பே கிடையாது
                          என்பார் .

அந்த மக்கள் திலகம் எங்கே . எதோ தன்னை அறிவு ஜீவியாக  பாவித்துக்கொண்டு  தனக்கும் புரியாமல் மற்றவருக்கும் புரியாமல் பேசிக்கொண்டிருக்கும்   நீ எங்கே .  நாளை  பாவங்களை ரட்சிக்கும் ஏசு பிறந்தநாள்.   அந்த ஏசுகூட இந்த பாவத்தை மன்னிக்க மாட்டார்

   பரலோகத்தில் இருக்கும் எங்கள் பிதாவே  இந்த பாவிகளை
   மறந்தும் கூட மன்னித்து விடாதே . ஆமென் .


Sunday, December 23, 2012

ivar pola yaar endru oor sollavaendum

 24 டிசம்பர்  மக்கள் திலகம் நினைவுதினம்.  இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்லவேண்டும் இவர் போல  யாரென்று  ஊர் சொல்லவேண்டும். சொல்லியபடியே வாழ்ந்தவர்.  

 நினைத்து  பார்க்கிறேன்.  1965-66 களில்  எங்க வீட்டு பிள்ளை  திரையுலகை கலக்கி பேயோட்டம் ஓடிய படம்.  புதுவை  அஜந்தா திரை அரங்கில் 100 நாள் ஓடி  100வது நாளைக்கு  மக்கள் திலகம்  மட்டும் ஏனைய  கலைஞர்களும் 
மேடையில் தோன்றினார்கள். 

அரங்கம் நிறைந்து  பின் தெருவெல்லாம் திருவிழா கூட்டம் . அப்போது புதுவை  இன்று போல் வளர்ச்சி அடையவில்லை. அஜந்தா திரை அரங்கிற்கும் முத்தியால்பேட்டை ஊருக்கும் இடி சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு வீடுகளே இருக்காது. மக்கள்  கூட்டம்  முத்தியால்பேட்டை  மணி கூண்டிலிருந்து  காந்தி ரோடு பெருமாள் கோவில் வரை  நீண்டிருந்தது .
திரை அரங்கினில் உள்ளேதான் கலைஞர்களுக்கு  பாராட்டும் பரிசளிப்பும் கூடியுள்ள  கூட்ட்டத்தை  கண்ட காவல் துறையினர்  உடனே  வெளியே 
ஏற்பாடு செய்தனர் 

எனது அப்பா  ராதா  அங்கு மேலாளராக  பனி புரிந்ததால்  நிகழ்ச்சி அனைத்தும் அவர் பொறுப்பிலே .  அதனால் எனக்கும் அரங்கினில் செல்ல  சிறப்பு அனுமதி கிடைத்தது.  நிகழ்ச்சி முடிந்ததும்  திரை அரங்கினின் மேல்பகுதியில் 
கலைஞாகள் மற்றும் சிறப்பு  அழைப்பாளர்களுக்கு  விருந்து.   mgr  sarojadevi
nagesh matrum  சில பேருடனும்  நானும் உட்கார்ந்து சாப்பிட்டேன்.  அன்று 
என் சக மாணவர்கள் மத்தியில் எனது மதிப்பு ஜிவ்வென்று ஏறியது .

இருந்தாலும் அன்றைக்கு  எனக்கு ஒரு அலட்சிய மனோபாவமே இருந்தது. 
ஏனென்றால்  அப்போதே நான் நடிகர் திலகத்தின்  தீவிர விசிறி.  மக்கள் திலகத்திற்கு  அளிக்கப்படும் அந்த மாபெரும் மரியாதைகள்  அந்த வயதில் 
நடிகர் திலகத்திற்கு எதிரானது போன்று  எனக்கு தோன்றியது. 

ஒருபக்கம் அத்தனை கூட்டத்திற்கு மத்தியில் நான் மக்கள் திலகத்துடன் இருக்கிறேன்  என்ற பெருமையாய் இருந்தாலும்   ஒரு  சிவாஜி ரசிகன் அப்படி 
அங்கு  நிற்கலாமா  என்ற குற்ற உணர்சியுடன்  நின்றேன்.  

அதை இப்போது நினைத்தாலும்  அவமானமாக இருக்கிறது.  எப்பேர்பட்ட மனிதர் அவர்.  ஒரு முறை வெளிநாட்டினர் மக்கள் திலகத்தை சந்தித்து 
தமிழ்படம் பார்க்க வேண்டும்  என்ற விருப்பத்தை தெரிவித்தனர் . 
எல்லோரும்ம் அவர் படத்தைதான் போடுவார் என்று நினைத்தனர். மாறாக 
அவர்களுக்கு தில்லான மோகனம்பா ள்  படத்தை திரையிட்டு காண்பித்தார். 
அதோடு மட்டுமில்லாமல்  நம்முடைய தமிழனின் திறமையை அறிய 
தம்பி சிவாஜி யின்  படம்தான் சரியாக இருக்கும் என்றும் கூறினார் 

இன்றளவும் நான் சிவாஜியின் தீவிர விசிறியாய் இருந்தாலும்  மக்கள் திலகம்  என் இதயத்தின் ஓரிடத்தில்  சிம்மாசனம் போட்டு உட்கார்ந்திருக்கிறார். .

                                                                  ---

சம்மதமா  நான் உங்கள் கூட வர சம்மதமா என்று பாடியவரை ஞாபகம் .
இருக்கிறதா . அவருக்கும் இன்று அதாவது 24 டிசம்பர் நினைவுதினம். 
யார் தெரிகிறதா  திருமதி பானுமதி ராமகிரிஷ்ணாதன். 

Saturday, December 22, 2012

irukkum idaththaivittu illatha idam thaedi

இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி ---


       இரண்டு ஒட்டகங்கள்  பேசிக்கொள்கின்றன .

               அம்மா நமக்கு ஏன்   கால் எல்லாம் குச்சி குச்சியாய்   இருக்கு.

                மகனே நாம் பாலைவனப்பகுதியில் வேகமாக நடப்பதற்கு கடவுள்
                இம்மாதிரி படைத்திருக்கிறார்

                 அம்மா நமக்கு ஏன்  முதுகில அசிங்கமா  ஒரு முண்டு இருக்கு

                 மகனே நாம் நீண்டதுரம் பயணிக்கும்போது , கொழுப்பை சேகரிக்க
                 ஆண்டவன் நமக்கு  அளித்தது .

                  அம்மா நமக்கு ஏன்  பல்லு இப்படி அசிங்கமா இருக்கு .

                  மகனே பாலைவனத்தில் இருக்கிற  செடி கொடிகளின் இலைகளை
                 தின்ன  ஆண்டவன்தான்  இப்படி ஒரு பல்லை  அளித்திருக்கிறான் .

                 அம்மா அப்புறம் ஏம்மா  நம்மை  கூண்டில  அடைச்சி  வச்சிருக்காங்க .

                 ???????.

             என்  வீட்டில் நானும் என் மகளும் பேசிகொண்டிருக்கிறோம் .

                     எங்கப்பா போயிட்டு வந்தே
                      ஒரு கூட்டத்திற்கு போயிட்டு  வந்தேம்மா .
                      எதைபத்தி பேசினாங்க அப்பா.
                       மக்கள் ஒற்றுமையை பற்றி .
                      மக்கள் ஒற்றுமை நம் ஊர்ல இருக்காப்பா
                       என்னம்மா இப்படி கேட்டுட்டே  நம்மூர்தான் உதாரணம் அம்மா.
                       இங்கதான் முஸ்லிம் முருகர் கோயில்னு ஒன்னு இருக்கு.
                        வேளாங்கண்ணிக்கு  பொய் மொட்டை அடிச்சுக்கிற  இந்துக்கள்
                        நாமூர்ல இருக்காங்க. ஏம்மா நாம கூட அடிகடி
                        வேளாங்கண்ணிக்கு  போவேமே நினைவு இல்லையா.
                        அது மட்டும் இல்லைம்மா மனற்குல வினயாகர் கோயிலுக்கு
                         எல்லோரும் வராங்களே .

                அப்புறம் ஏம்ப்பா  மக்கள் ஒற்றுமையை பற்றி இங்க வந்து பேசினாங்க .

           ??????????

Wednesday, December 19, 2012

mayan padithathum viyanthathum

 மயன்காலேண்டர்  மாயன் நாட்காட்டி -- உலகம் அழியப்ப்போகிறது  என்று எல்லா இடங்களிலும் பேச்சு அடிபட்டு கொண்டிருப்பதால்  அது என்ன என்று
தெரிந்து கொள்ளும் முயற்சியில் இனையத்தில் உலவி வந்தேன் . படித்த செய்திகள் வியப்பின் உச்சத்திற்கே  இட்டு சென்று விட்ட து .

கமலஹாசன் ஒரு  படத்தில்  காயேஸ் (chaos )  theory  பற்றி சொல்லிருப்பார்.
அதே போல சில தொடர்புகள்  நம்மை அதிர வைக்கிறது.

MELGIBSON,   INDIANA JONES, ENTHIRAN, WWW WRESTLING  MAN, ROCKET,
THAMIZHAN , THAMIZHAN MAYAN THODARBU  விமானங்கள்  பல்லவ கால சிற்பங்கள்  அமெரிக்கன்   DOLLER   EURO, GEORGE WASHINGTON, RAJINI BAABA SYMBOL,  இந்திய ஆன்மிகம்  ஒற்றைக்கண்   குறியீடு , மயனின் கால்பந்தாட்டம்   சாத்தான்   சனி   உலக வெப்பம் ஒரு கடைந்தெடுத்த   பொய்
இப்படி ஒன்றுக்குள்   ஒன்று   எப்படி தொடர்பு படுத்தப்படுகிறது  என்பதை படிக்கும் போது  ஒரு மர்ம கதையை படிப்பது போல் உணர்ந்தேன் .

 இதை படிக்க இந்த தளத்திற்கு செல்லுங்கள் .

                  KELVIYUM NAANEPATHILUMNAANAE.BLOGSPOT.IN.
அவசியம் படிங்க .  வியப்பையும், மர்மத்தையும்  வரலாற்று நிகழ்வையும்
ஒரு சேர உணர   அவசியம் படிங்க.

Friday, December 14, 2012

kumki thirai vimarsanam

கும்கி  பட பாடல்கள் , சிவாஜி பேரன், பிரபு சாலமன்  கூட்டணி எதிர்பார்ப்பை
கூட்டி இருந்தது,

சினிமா  என்பது ஒரு  visual  மீடியா என்பதை அழுத்தம் திருத்தமாக பதிவு செய்து இருக்கிறது  கும்கி படம். என்ன ஓர்  location. இப்படி ஒரு பசுமையான காட்சி கள் சமீபத்தில் .எந்த படத்திலும் வந்ததாக தெரியவில்லை.  

விக்ரம்  பிரபு - சிவாஜி பேரன்--, பிரபு மகன் -- நடிப்பில் துளிகூட சிவாஜி சாயலோ  பிரபுவின் சாயலோ இல்லை என்பதிலிருந்து தான் ஒரு சிறந்த நடிகர்தான் என்று நிருபித்து இருக்கிறார்.

கதாநாயகி  லக்ஷ்மி மேனன்  பாந்தமான முகம் . அளவான தைத்த சட்டை போல் அவரின் பாத்திரம் காண கச்சிதமாய் பொருந்துகிறது.

தம்பி  ராமைய்யா  கலகலபூட்டினாலும்  அந்த இடத்தில் வடிவேலு இருந்திருந்தால்  காமெடி காட்சிகள் உட்ச்த்திர்க்கு சென்று இருக்கும்.

பாடல்கள்.  ஆஹா  அந்த அருவி, மலை முகடுகள் , புல்வெளிகள்  அதிக ஆர்ப்பாட்டமில்லாத நடன அசைவுகள், இதமான பாடல் வரிகள் எல்லாவற்றிற்கும் மேலாக தேர்ந்த இசை . கேட்டு, பார்த்தால் தான் அதன் சுகம் புரியும்.

கதை களம் வித்தியாசமானது. ஆனால் கரு அருதப் பழசான  காதல் தான்.
எனினும் இயல்பான ஆபாசமற்ற  கண்ணிய காதல்  தென்றலாக வீசுகிறது.

படத்தின் உச்சகட்ட காட்சி யாரும் எதிர்பாராறது .

பிரபு சாலமன்  நம்மை மலை பகுதிகளுக்குள் கையை பிடித்து இழுத்து செல்கிறார்.

கும்கி மனதிற்கு மட்டுமல்ல  கண்ணுக்கும் குளுமையாக உள்ளது.

       திரை அரங்கில்  சிவாஜி ரசிகர்கள்  வைத்து இருந்த ஒரு  banner
        என்னை  கவர்ந்தது

         -------  1952ல்    நடிகர் திலகத்தின்            பராசக்தி
                      30 வருடங்கள் கழித்து
                      1982 ல்   இளையதிலகத்தின்         சங்கிலி
                      60 வருடங்கள் கழித்து
                      2012ல்  jr.இளைய திலகத்தின்       கும்கி

         தாத்தா , அப்பா போல   இவரும்  பெயர் பெறுவார் .


                     
                         

Wednesday, December 12, 2012

naadu paarthathu undaa?

இன்று இணையத்தில் உலாவிக்கொண்டிருக்கும்போது  ஒரு நண்பர் எழுதிய ஒரு உண்மை சம்பவத்தை  காண நேர்ந்தது . இப்படியும் ஒரு மனிதரா ?
கண்கள் பனித்தன  நெஞ்சம் நெகிழ்ந்தது ( இந்த வார்த்தைகள்  வேறு எதற்கோ
வேறு ஒருவரால் பயன்பட்டது) இருந்தாலும் இந்த பதிவை படித்தபோது  உண்மையிலேயே ----- என்ன சொல்ல  எனக்கு வார்த்தை வரவில்லை.  இதோ அந்த நண்பரின் பதிவை  கீழே தருகிறேன்

காமராஜர் சொன்னது..."நான் தப்பு பண்ணிட்டேன். தெரியாம செய்திட்டேன். மன்னிச்சுடு!"...

இது கட்டுக் கதையல்ல. கண்ணீரால் நிறைந்த நிஜம். நேற்று திருச்சி வேலுசாமி அவர்கள் எழுதிவரும் ஒரு புதிய புத்தகத்தை தொகுக்கும் வேலையில் இருந்தேன். அந்த காலம் இப்படியும் இருந்தது என உறக்கமின் றி தவித்தேன்…
அப்போது காமராஜர் முதல்வர். பழை ய சட்டமன்ற விடுதியில் மண் ணாங் கட்டி என்பவர் கீழ்மட்ட ஊழிய ராக இருந்தார். சட்டமன்ற ஊறப்பினர் கள் கேட்பதை வாங்கிவந்து தருவார். முதல் தளத்தில் முன்பாகவே இருக்கும் முக்கையா தேவர் அறையிலேயே இருப்பார். ஒரு முறை ‘ஏம்பா மண்ணாங்கட்டி அவசரமாக வெளியில போறேன்.
குளிச்சு முடிச்சு ரெடியாகுறதுக்குள்ள இட்லிய வாங்கி வந்துடு’ என்று 100 -ருபாயை கொடுத்தார் முக்கையா தேவர். சொன்னபடியே அவர் ரெடியாகி காத்திருந் தார்.
ரொம்ப நேரம் ஓடியது. தலையில் சுமையுடன் தட்டு தடுமாறி வந்தார் மண்ணாங்கட்டி. பார்த்தது ம் ’ஏன்யா. நான் அவசரமா வெளியில போகனும் னு காத்துகிட்டு இருக்கேன். இட்லி வாங்க இவ் வளவு நேரமா என்று எகிறினார் மாயாண்டி தேவர். மண்ணாங்கட்டிக்கு கோபம். என்னங்கய்யா நீங்க. இங்க ஆஸ்ட்ல அவ்வளவு இட்லி இல்லைன்னு சொல்லிட்டாங்க. மவுண்ட் ரோடெல்லாம் போய் அலைஞ்சு 100 ருபாக்கும் இட்லி வாங்குறது லேசுபட்ட காரிய மா’என்று பதிலுக்கு சத்தம் போட்டார். அதுதான் மண்ணாங்கட்டி என்ற வெகுளி. அப்பாவி. அவ்வளவு வெள்ளந்தி….
அப்படியான மண்ணாங்கட்டியின் தலையில் ஒருநாள் இடி விழுந் தது. அந்த உத்தரவை படித்து காட் டச் சொல்லி வீட்டில் அழுது புரண் டு கதறினார். ’அரசாங்க உத்தியோ கத்தில் எழதப்படிக்கத் தெரியாத வர்கள் எல்லாம் இனி வேலையில் இருக்க கூடாது. பணியில் இருந்து நீக்கப்படுகிறார்கள்’ என்று காம ராஜர் போட்ட உத்தரவு தான் அந்த கடிதம். 2  நாள் கழித்து பழைய சட்ட மன்ற உறுப்பினர் விடுதிக்கு ஓடி வந்தார். முக்கையா தேவரிடம் தரையில் விழுந்து கதறி அழுகிறார்.
என்னவென்று கேட்கிறார். ’இப்படி ஒரு உத்தரவு வந்திருக்கிறதே. என் குடும்பம் எல்லாம் நடுத்தெருவுக்கு வந்துடுச்சே. எப்படியாவதுகாப்பாத்துங்க ஐயா’ என்று பித்து ப் பிடித்தவராக அழுகி றார். ஏதாவது சமாதானம் சொல்லனு மே என்று ’முதல்வர் ஆபிசுக்கு போன் போடுடா. கேட்டுடலாம்’ என்றார். அப்போது எல்லாம் நேரடியாக தொலைபேசும் வசதி இல்லை. ஆப்ரேட்டரிடம் கூறி விட்டு காத்திருக்க வேண்டும். முதுல்வர் அலுவலகத்தில் யாராவது உதவியளர் எடுப்பார்கள்.
மண்ணாங்கட்டி புக்செய்த நேரம் உடனே தொடர்பு கிடைத்தது. மறு முனையில் முதல்வர் காமராஜ். யார் நீங்கள் உங்களுக்கு என்ன வேண்டும் என்கிறார். அய்யா நான்தான் அசம்பிளி ஆஸ்டல் பியூன் மண்ணாங்கட்டி பேசுறங்க ஐயா என்றபடியே அருகில் இருந்த முக் கையா தேவரை பார்க்கிறார். அவருக்கு முதர்வர் அலுவலகத்தி ல் இருந்து
யாராவது உதவியாளர்கள்தான் டெலிபோனை எடுத்திருப்பார்கள் என்ற நினைப்பு. ‘எழுதப்படிக்க தெரியாதவங்க எல்லாம் முதல் வரா இருக்கறப்போ நான் பியூனா இருக்கக்கூடாதான்னு கேளுடா” என்கிறார்.
மறுமுனையில் இருந்த காமராஜரிடம் அதை அச்சுபிசகாமல் ‘ஐயா, எழுதப்படிக்க தெரியாதவங்க எல்லாம் முதல்வரா இருக்கிறப்போ நான் பியூனா இருக்ககூடாதான்னு’ தேவர் ஐயா கேட்க சொல்றாரு ங்க என்கிறார் மண்ணாங்கட்டி. பிறகு பேச்சில் லை….
அடுத்த 30 நிமிடத்தில் உயர் அதிகாரிகள் 3-பேர் அங்கே வந்து விட் டார்கள். முதல்வருக்கு போன் செய்தது யார்? என்றார்கள். நான்தான் ஐயா என்று முன்னே வருகிறார் மண்ணாங் கட்டி. உங்களை கை யோடு அழைத்துவரச் சொல்லியிருக்கிறார். உடனே புறப்படுங்கள் என்று நிற்கிறார்கள். அப்போதுதான் நாம் பேசி யிருப்பது முதல்வரிடம்  என புரிகிறது. முக்கையா தேவருக்கும் பதட்டம். மண்ணாங் கட்டி ’ஐயா நீங்களும் வாங்க’ என்று அழுகிறார். பின்னாடியே வருகிறேன். நீ போப்பா என் று அனுப்பி வைக்கிறார். கோட்டையில் உள்ள முதல்வர் காமரா ஜை நோக்கி வாகனம் பறக்கிறது.
முதல்வரின் அறையில் உள்ள ஷோ பாவில், கண்ணத்தில் கைவைத் தபடி கவலைதோய்ந்த முகத்தோடு உட்கா ர்ந்திருக்கிறார் காமராஜர். கதவு திறக்கப்படுகிறது. மண்ணாங் கட்டி முதலில் நுழைய அதி காரிகள் சற்று ஒதுங்கி கதவோரம் நின்று கொண் டார்கள். நீங்க தான் மண்ணாங்கட்டி யா…என்கிறார். ஆமாங்க ஐயா. நான்
தெரியாம பேசிட்டேன். என்னை மன்னிச்சுடுங்க ஐயா என்றபடியே கீழே விழுந்தார். அந்த கலாச்சாரம் காமராஜருக்கு பிடிக்காது. அதி காரிகளை பார்க்க உடனே எழுப்பி நிற்க வைக்கிறார்கள். அவரை வா… வாண்னேன். வந்து பக்கதில உட்காருங்கன்னேன் என்றழைக்கிறார். மண்ணாங்கட்டி தயங்கி நிற்கிறார். காமராஜர் முறைக்க தயங்கி தயங்கி பக்கத்தில் சென்று உட்காருகிறார்.
மண்ணாங்கட்டியை முதுகில் தட்டிக்கொடுத்து முகத்தையே உற் றுப் பார்த்த முதல்வர் காமராஜ், பட்டென்று கையெடுத்துகும் பிட்டுநான் தப்பு பண்ணிட்டேன். தெரி யாம செய்திட்டேன். மன்னிச்சுடு. அந்த தவறை நீதான் புரியவைச் சே… ரெண்டு நாளா உங்க வீட்ல சோறு தண்ணியில்லி யாமே.
சமைக்கலயாமே…. உங்களுக்கு ரெண்டு பொம்பள புள்ளைங்க … எல்லாத்தையும் இப்பதான் தெரிஞ் சுகிட்டேன்..எவ்வளவு பெரிய தப்பு செய்திருக்கேன்.. நான் அப்படி ஒரு உத்தரவு போட்டிருக்க கூடாது. ‘இனிமே புதிதாக வேலைக்கு வருபவர்களுக்கு எழுத படிக்க தெரிந் திருக்க வேண்டும்’னு போட்டிருக்க வேண்டும். நான் செய்தது
தவறுதான் என்று தட்டிக்கொடுத்து ஆதறவுசொல்ல மண்ணாங் கட்டி கதறி அழுகிறார். காமராஜருக்கும் பேச்சு இல்லை…
அடுத்து அங்கேயே ஒரு உத்தரவு தயாராகிறது. காமராஜர் கையொப் பமிடுகிறார். மண்ணாங்கட்டிக்கு மீண்டும் அரசு வேலை. அதிகாரிக ளை பார்த்து ‘இவரை அழைத்துக்கொண்டு போங்க. வேலை கொடு த்தாச்சு. இனி கவலைப்படாதீங்கன்னு அவரோட மனைவி, குழந்தை ங்ககிட்ட சொல்லுங்க’ன்னு அதிகார குரலில் உத்தரவிடுகிறார். பிற கென்ன நினைத்தாரோ சற்று தயங்கி’போகிறபோது வெறு ம் கையோட போகாதீங்க. ஓட்டல்ல எல்லாருக்கும் சாப் பாடு வாங்கிட்டு போய் கொ டுங்க. ரெண்டு நாளா அவர்கள் சாப்பிட்டிருக்கமாட் டர்கள்’ என கண்டிப்போடு கூறுகிறார் அந்த அதிகாரிகளிடம்.
மண்ணாங்கட்டிக்கு பேச வார்த்தைகளின்றி கையெடுத்து கும்பிட்ட படியே வெளியேற, முதல்வர் காமராஜரும் எழுந்து கையெடுத்து கும்பிட்டபடியே அனுப்பிவைத்தார்.
ஒரு ஏழையின் கண்ணீர் வலி..இன்னொரு ஏழைக்குத்தான் தெரியு ம். ஆமாம் காமராஜர் ஏழையாகவே, எழைகளுக்காகவே இருந்தா ர்..
நன்றி – தமிழால் இணைவோம், முகநூல்
 .
இப்ப சொல்லுங்க இப்படி ஒரு தலைவரை நாடு பார்த்ததுண்டா . அவரை என் தலைவன்  என்று சொல்லி அவரின் கொள்கையினை  பின்பற்றுவதில் நான் மிகவும் பெருமை கொள்கிறேன்.

    

Tuesday, December 11, 2012

bharathi

பாரதி            11.12 2012

 ஒப்பனை இல்லா  கவிஞன்
  ஒப்பற்ற கவிஞன்
  வீட்டை மறுதலித்து
   நாட்டை நேசித்த உத்தம கவிஞன்

   அடிமை  தேசத்தை  விடிவிக்க
    கவிதை ஆயுதம் எடுத்தான்
    கண்ணம்மா வை  காதலித்தான் 
    கயவர் மீது கவிதை சாட்டை வீசினான்
   
     தரித்திரத்தில் தவழ்ந்தான் ,
      சரித்திரத்தில் வாழ்கிறான்

       புதுவையின் தத்து புதல்வன்
       புதுமையின்  வித்தானவன் .

       அந்த அக்னி குஞ்சுக்கு இன்று பிறந்த நாள் .

        பாரதியை மறந்த  குருடர்களாய்  இருந்தாலும்
        பாரதியின்  பார்வையிலாவது  பாரதத் தை  பாப்போம் . 

Friday, December 7, 2012

viswaroopam

கமல் திறைமையான கலைஞர் தான்  அதில் சந்தேகம் இல்லை.  ஆனால்  திரையுலகில் இப்போது வருகிறவர்கள் கூட அவரை தாண்டி உயரமான இடத்துக்கு சென்று கொண்டிருகிராகர்கள் வியாபார ரீதியான வெற்றி படங்களை தருவதி.ல் ..

ஒரே நாளில் தொலைகாட்சியிலும்  திரை அரங்கங்களிலும்  தனது விஸ்வரூபம் படம் வெளியாகும் என்ற அதிர்ச்சி செய்தியை கசிய விட்டிருக்கிறார்.(அதிர்ச்சி நமக்கல்ல )கமல்.

சினிமா வட்டாரத்தில்  மாஸ் ஒபெனிங் என்ற  சொல் வுண்டு . அதாவது படம் திரையிடப்பட்ட அன்று  மிகப்பெரிய ஜனத்திரள் இருக்கும்  முதல் மூன்று நாட்களில்லேயே  கணிசமான வசூலை தயாரிப்பாளர் பெற்றிடுவார் . ஆனால் இந்த மாஸ் ஒபெனிங்  எல்லா நடிகர்களுக்கும் கிடைக்காது,

மாஸ் ஒபெனிங்  உள்ள நடிகர்கள்  முதலிடம் ரஜினி , பின் அஜீத் விஜய் சூர்யா  தான். இதில் கமலுக்கு இடம் கிடையாது.  கமல் படம்  முதல் நாள் அவரது ரசிகர்களால் நிரம்பி வழியும் பின் படத்தின் ரிசல்ட்  பொறுத்து  வசூல் அமையும்.  கமல் உலக நாயகனாய் இருந்தாலும்  இதுதான் படத்தின்  வசூல் நிலை.

சரி விழயத்துக்கு வருவோம் . விஸ்வரூபம் மிக நவீன தொழில்  நுட்பம் பயன்படுத்தப்பட்டு  மிக அதிகமான் பொருட்செலவில்  தயாரிக்கப்பட்ட படம்  .
கமல் இதில்  தான் சம்பாதித்தது அனைத்தையும்  முதலீடு செய்திருக்கிறார் .
கமலின் செலவை பார்த்து இரு விநியோக கம்பனிகள்  அதிலிருந்து விலகிவிட்டன  அதில் ஒன்று ஜெமினி கம்பெனி . போட்ட பணத்தை சிறிது  லாபத்துடன்  எடுக்க வேண்டுமானால்  வேறு எதோ வகையில் தான்  திரையிட வேண்டும்.  எனவே தான் கமல் ஒரே நேரத்தில் டிவி மற்றும் திரை அரங்குகளில் திரையிட எண்ணியுள்ளார் . இது சம்பந்தம்மாக டாட்டா  SKY
நிறுவனத்திடம்  ஒரு இணைப்புக்கு ஆயிரம் ரூபாய்  என்று பேசி இருப்பதாக தகவல் .

சுயநலத்திற்காக செய்தாலும்  ஒரு புதிய பாதைக்கு வழி வகுத்துள்ள  கமலுக்கு  நம் பாராட்டுதல்களை தெரிவிப்போம் 

Monday, December 3, 2012

sandhangal neeyaanaal


 சிப்பி இருக்குது முத்து இருக்குது  திறந்து பாக்க நேரமில்லைடி   ராஜாத்தி
 என்ற பாடலை இன்று கேட்க நேர்ந்தது .

 சில பாடல்கள் கேட்க  நன்றாக இருக்கும்  காட்சி அமைப்பு சகிக்காது .
 சில பாடல்கள் காட்சி ய மைப்பு பிரமாதமாக இருக்கும் . பாடல் சொதப்பி விடும். ஆனால் மேலே கூறிய பாடலில்  இசை, காட்சி அமைப்பு, நடிக நடிகையின் திறமை, பாடல் வரிகள் அத்தனையும் சரிவிகித கலவையாக
சேர்க்கப்ப்பட்டு இருக்கும்.

இந்தப்பாடலில் கமழும் ஸ்ரீதேவியும்  தூள் கிளப்பி இருப்பார்கள். பாடலை ஒரு முறை கேட்டு பாருங்கள். கொடுத்த சந்தங்களில்  என் மனதை நீயறிய  நான் உரைத்தேன்  என கமல் பாடும்போது  அதுவரை உற்சாக மூடில் இருந்த ஸ்ரீதேவி சட்டென்று  மௌனமாகி  கண்ணில் நீர் தளும்ப  கமலின் மீது  சாய்வார் . பின்  விரல் கோர்த்து  நடப்பார் .  கண்ணியமான  நயமான காதல்
காட்சி . 

Sunday, December 2, 2012

thamizh ariv

தமிழ் அறிவோம் :

          கீழே குறிப்பிட்டுள்ள சொற்கள் எந்த  ஆங்கில வார்த்தையை  ,குறிக்கிறது
          தெரியுமா.

                 உட்படுசினம்                      உள்ளழற்சி                 உள்ளரவம்

                 உள்ளிடல்                            மிகுஉனர்ச்சி               கை அரவு

                 இழு விசை                           மறுகுதல்                     அலமரல்

                  நிலை திரிதல்                     விதிர் வ்திர்த்து          பதறுதல்

                           விடை   :

                           (TENSION)

                      தினமணி  பத்திரிக்கையில்  சில ஆங்கில வார்த்தைகளுக்கு
                      வாசகர்களிடமிருந்தே  தமிழ்ச் சொல்  கேட்டு பெறுகிறார்கள்.
                       மிக அதிகமான வாசகர்களால்  தெரிவிக்கப்பட்ட  வார்த்தை

                                                மனக்கொதிப்பு

                       பெரும்பாலான வாசகர்கள்  டென்ஷன் என்ற ஆங்கில வார்த்தைக்கு   மனக்கொதிப்பு என்றே தமிழ் ஆக்கம் செய்திருக்கிறாகள்.

                       மேலே குறிப்பிட்ட அனைத்து வார்த்தைகளும் நமது பழைய
 இலக்கிய நூல்களில் இருந் து  ஆதாரத்துடன்  அனுப்பி இருந்தார்கள் .

 அவர்கள் அடுத்து கேட்டுள்ள வார்த்தை     PARANOIA
    நம் நண்பர்கள் இதற்கான  தமிழ் வார்த்தையை தெரியபடுத்தலாமே.

             

Saturday, December 1, 2012

நீர் பறவை  திரை விமர்சனம் .

       எதிர்பார்புகளுடன்  சென்ற எனக்கு ஏமாற்றமே.

        சுவாரசியமே இல்லாத திரைகதை.  கொட்டாவி விட செய்யும் காட்சி அமைப்புகள் . எல்லாவற்றிற்கும் ஒரே முக பாவம் காட்டும் கதாநாயகன் .
காதலை மைய்யப்படுத்துவதா , இலங்கை கடற்படையினரால்  தமிழக மீனவர்கள் சுடப்படுவதை பற்றியா ,  சிறுபான்மை மக்களை  பற்றியா,
கடல் வாழ் மீனவர்களை பற்றியா  இல்லை சாதீய பிரச்சனையா  எதை எடுத்துகொள்வது என்ற தடுமாற்றத்தில்  இயக்குனர்  எல்லாவற்றிலும்
கொஞ்சம் கொஞ்சம் எடுத்து  நம்மை பாடாய்  படுத்திஇருக்கிறார் .

சில நல்ல விழயங்கள் சொல்ல வேண்டுமானால்  ஒளிப்பதிவை  சொல்லலாம்.
 சரண்யா நடிப்பை சொல்லலாம்.

இப்படத்திற்கு வரி விலக்கு  கேட்டு இயக்குனர் உண்ணாவிரதம் இருந்ததாகவோ  அல்லது இருக்கப்போவதாகவோ  என் நண்பன் என்னிடம் கூறினான் .  அந்த செய்தி உண்மையாக இருந்தால்   அவரது கோரிக்கைக்கு
செவி சாய்த்து  இன்னும்   கூடுதல் சலுகையாக  படத்தை இலவசமாக
பார்க்க வழி செய்யலாம் .  என்னை போன்றவர்களின் பணமாவது மிச்சப்படும்.

இதனால் அறியப்படுவது யாதெனில்    அதி மேதாவித்தனம் ஆபத்தானது .

Friday, November 30, 2012

நடுவில கொஞ்சம் பக்கத்த காணோம்      திரை விமர்சனம்.

     படத்தின் தலைப்பே  வித்தியாசமாக இருந்ததால்  அரை மனதுடன்
      படத்திற்கு சென்றேன்.  ஆனால் ஒரு சிறு நம்பிக்கை. பீட்சா படத்தின்
      நாயகன்  விஜய் சேதுபதி கதாநாயகன்  என்பதுதான் அது.

      முற்றிலும் புதுமுகத்தை கொண்டு ஒரு நகைச்சுவை காவியத்தை
       இயக்குனர்  ஸ்ரீதரால்  மட்டுமே கொடுக்க முடியும்.  என்ற  எண்ணத்தை
       உடைத்து இருக்கிறார்  புதிய இயக்குனர்.

       படத்தில் பங்கேற்ற அணைத்து பாத்திரங்களுமே  ஒரு துளி கூட மிகை இல்லாமல்  தெளிவாக நடித்துள்ளனர்.

       மறு நாள் தான்  காதலித்த  பெண்ணுடன் வரவேற்பு அதற்க்கு மறுநாள்
திருமணம் என்ற நிலையில்  கிரிக்கெட் விளையாட சென்ற கதநாயகனுக்கு
மண்டையில் அடி பட்டு  temporary memory loss  ஏற்பட அதை மறைத்து அவன்  நண்பர்கள்  திருமணத்தை முடிக்க படும் பாடே படத்தின் கதை. ஒரு வித்தியாசமான  கதை களம்.

        கிளைமாக்ஸ்  காட்சியில் என்னை மறந்து சிரித்தேன்.

       தமிழ் சினிமா உலகத்தரத்திற்கு  நிச்சயம் உயரும் என்பது   சமீப  கால
       இளம் இயக்குனர்கள் தேர்வு செய்யும் கதையின் கருதான்.

     நல்ல படம் 

Friday, November 23, 2012

aasiriyar

சரியா தவறா எனக்கு தெரியலே .

எனக்கு நினைவு தெரிந்த நாள் முதலே  ஆசிரியர் தொழில் புனிதமானது என எண்ணம் கொண்டவன் நான். எவ்வளவு கண்டிப்பு இருந்தாலும் தம் மாணவர்களிடம் தனி அன்பு செலுத்துவதும்  பாடத்தை ஒழுங்காக நடுத்துவதும் தான்  நான் அறிந்த வரையில் ஆசிரியரின் பணியாக இருந்தது .
மாணவர்கள் எவ்வளவு அட்டகாசம் செய்தாலும் அதனை பொறுத்துக்கொண்டு  அமைதியாக தன கடமையை ஆசிரியர்கள் ஒழுங்காக
செய்து வந்தனர்.  ஆனால் இன்றைய நிலை என்ன.  ஆசிரியர்கள் தன்பணியின்
ஊடே  வேறு சில வணிகங்களிலும் ஈடுபட்டு வரும்   காட்சியை  பார்க்கிறோம் ,கேட்கிறோம். நான் எல்லா ஆசிரியர்களையும் சொல்லவில்லை . எனக்கு நிறையஆசிரிய நண்பர்கள் உண்டு. அவ்வளவு ஏன் எங்கள் வீட்டிலேயே  ஆசிரியர்கள் உள்ளனர்.  என் ஆசிரிய நண்பர்களில் சிலர் சொந்த பணத்தை செலவழித்து  மாணவர்களுக்கு தேவையான  உதவிகளை செய்து வருகின்றனர். தன்  பணி  நேரம் தவிர்த்து  சுயமாகவே  சிறப்பு வகுப்பு எடுக்கின்றனர் .  எதற்கு இவ்வளவு பீடிகை என்கிறீர்களா ?   காரணமாத்தான்.

புதுவையில் ஒரு ஆசிரியர் வெட்டி கொலை செய்யப்பட்டிருக்கார் .
கொலைக்கான காரணம் தெரியவில்லை .  பத்திரிகை செய்திகள்   அந்த  ஆசிரியர் நில  வணிக தொழிலில் ஈடுபட்டிருந்ததாகவும்  அதன் காரணமாக
கொலை நடந்திருக்கலாம் என்று சந்தேகிக்கபடுகிறது  என்று செய்திகள்
தருகின்றன  மேலும் அவரது கை பேசியில்  நிறைய  பெண்களின் தொலை பேசி எங்கள் இருந்ததாகவும்  அந்த கோணத்தில் விசாரணை நடப்பதாகவும்
செய்திகள் தருகின்றன. எது உண்மை என்று நமக்கு தெரியாது.  ஒரு ஆசிரியர் கொலை செய்யப்பட்டிருப்பது  வேதனையான விழயம்தான்.  ஆனால்
ஆசிரியர் சங்கத்தினர்  ஆசிரியருக்கு பாதுகாப்பு வேண்டும் என்று வகுப்பை
புறக்கணித்து போராட்டம்  நடத்தியதாக  ஊடகங்கள் தெரிவித்தன .

என் எண்ணத்தில் தோன்றிய எண்ணம் இதுதான்.

இதுவரையில் பத்திரிக்கையில் வந்த செய்தியின் அடிப்படையில், இது  தனி  மனித விரோத போக்கின் காரணமாக  நடந்ததாக தெரிகிறது.  இதற்க்கு எதற்கு
ஊழிய சங்கங்கள் வகுப்பை  புறக்கணித்தன.

ஆசிரிய பணியில் இருப்போர் ( எல்லோரும் அல்ல )  பணி நேரம் போக  மீதி நேரத்தில்  வட்டிக்கு விடுதல் , நில வணிகம்  இன்னும் பல பணிகளை செய்யலாமா

ஆசிரிய பணி  காரணமாக இந்த கொலை  நடந்திருந்தால்  போராட்டம்  ஒரு
அர்த்தம் உள்ளதாக இருந்திருக்கும் .

சட்டம் ஒழுங்கு சரியாக இல்லை என்று போராட்டம் நடத்தினால்  அதில் ஒரு அர்த்தம் உண்டு.  சமுதாய நோக்கமும் உண்டு .

தனி நபர் விரோதம் , குற்றவாளிகள்  சட்டம் ஒழுங்கு பிரச்சனை என்ற அளவில்  தான்  என்னால் பார்க்க முடிகிறதே தவிர  ஆசிரியர் பாதுகாப்பு பிரச்சனை  என்று யோசிக்க முடியவில்லை. யார் சரி யார்தப்பு  யாரை கைது செய்ய வேண்டும் என்பது சட்டம் சார்ந்த பிரச்னை.  ஒரு உயிர்பலி  வேதனையான விழயம்தான் .  இருந்தாலும் சங்க அணுகுமுறை சரி இல்லை என்பதே  என் வாதம்
--- சரியா தப்பா  நீங்கள் சொல்லுங்கள்  எதுவாய் இருந்தாலும் .

 . 

Thursday, November 22, 2012

intha yosanai saathiamaa

இது சாத்தியமா?

 சமீபத்தில் ஒரு பத்திரிக்கை செய்தி பார்த்தேன்.
 ஒரு வருடதிற்கு  சுமார் ஒரு லட்சம் மாடுகள்  தமிழகத்திலிருந்து  அண்டை மாநிலத்திற்கு இறைச்சிக்காக  கடத்தப்படுகின்றன  என்பதுதான் அந்த செய்தி.

பயோ கேஸ்  மூலம் எரிவாயு  கிடைக்கும் என்பது நம் அனைவருக்கும் தெரியும்.

மின் தட்டுப்பாடு இப்போது நம் முன் உள்ளமிகப்பெரிய பிரச்சினை . அணு நிலையங்களை பயன்படுத்துவது நிலக்கரியை பயன் படுத்துவது ஆகட்டும்
அது ஒரு பக்கம் நடக்கட்டும் .  மாட்டின் சாணத்தின் மூலம்  எரிவாயு பயன்படுத்துவது  சாத்தியம்தானே .

இறைச்சிக்காக மாடுகளை விற்பதை விட  அரசே அதைபராமரித்தால்
ஒரு லட்சம் மாடுகளின் சாணம் சிறிது அளவாவது  எரிபொருள் பயன் பாட்டை  குறைக்கும் அல்லவா.

மேலும் அரசே கால்நடை வளர்ப்பை  ஊக்க்கப்படுத்தினால் .  இன்னமும்
எரிவாயுவை சேமிக்கலாம் அல்லவா .

Wednesday, November 14, 2012

thuppakki thirai vimarsanam.

என்னை போன்ற ஆட்களுக்கெல்லாம்  தீபாவளி அன்று படம் பார்த்தால்தான் தீபாவளி  கொண்டாடியது போல் இருக்கும்.  இந்த வருடமும் நான் தீபாவளி கொண்டாடினேன் .  ஆம் துப்பாக்கி படம் பார்த்தேன்.

 துப்பாக்கி  முதலிலேயே சொல்லி விடுகிறேன் இது முருகதாஸ் படம். விஜய் தன பங்கை சரியாக செய்திருக்கிறார்.  திரைகதை ஒரு பர பர  விறு விறு . புத்திசாலித்தனம் நிறைந்த   மசாலா படம்.  லாஜிக் ஓட்டைகள்  இருந்தாலும்.
அது தெரியாதவாறு  சுவையான மசாலாவை அள்ளி தெளித்திருக்கிறார்  முருகதாஸ் .

காஜல்  அழகு பதுமையாக பல்வேறு சுகமான முகபாவங்களை வெளிப்படுத்தி
ரசிக்க செய்கிறார்'  விஜய் காஜல்  காதல்  கூழாங்கல் இருக்கும் தெள்ளிய நீரோடையில் கால் நனைப்பது  போன்ற அனுபவத்தை தருகிறது.

சத்யனும் ஜெயராமும் சுட சுட பொங்கலில் நெருடும் முந்திரியை போல சுவை  கூட்டுகின்றனர் .
பல இடங்களில் கைத்தட்டல் காதை பிளக்கிறது . அந்த காட்சியை விவரித்தால் படம் பார்க்கும் சுவாரிசியம் போய்விடும்.

நடனம் விஜய்க்கு மட்டுமே கை வரும் கலை.  அதை இதிலும் நிருபித்திருக்கிறார் .

தமிழில் jamesbond  படங்கள் மாதிரி வராதா என்ற என்போன்றவர்களின் ஏக்கம் இப்படத்தின் மூலம் ஒரளவு  சரி செய்யப்பட்டிருக்கிறது.  

                                                                                                                                                     

படத்திற்கு  மதிப்பெண்  என் பார்வையில்

                            direction                                                                                 30               60
                            விஜய்    கஜோல்                                                           10              -----
                            மாறுபட்ட சிந்தனை  கதைகளம்                            10               100
                            பொழுதுபோக்கு அம்சங்கள்                                     10
                                                                                                                          -----
                                                                                                                            60
                                                                                                                           ----       

Monday, November 12, 2012

vara vara kaadhal kasakkuthaiyaa

காதல் - வேலை அற்றோரின் பொழுது போக்கு  - பொழுது போகாதோரின் வேலை. இன்னும் என்னன்னமோ  காதலை பற்றி சொல்லி இருக்கிறார்கள் .  ஆனால் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கிராமத்தில்  ஒரு காதல் நிறைய பேரின் வாழ்க்கையை சின்னபின்னமாக்கி உள்ளது. 

காதல் எதோ ஒருகட்டத்தில் எல்லோருடைய வாழ்க்கையிலும் வசந்தத்தை வீசியிருக்கும். அது ஒரு தலை காதலாக இருக்கலாம் ,இரு மன காதலாக இருக்கலாம் சொல்லப்பட்ட காதலாக இருக்கலாம் , சொல்லப்படாத காதலை இருக்கலாம். 

இந்த காதல் சாதிப்பது என்ன . காதலுக்கு சமுதாய அந்தஸ்து இருக்கிறதா 
 எல்லா காதலும் திருமணத்தில்  முடிகிறதா. திருமணத்தில்  முடிந்தது சுகமாக தொடர்கிறதா . சுகமாக தொடர்வது எத்தனை சதவிகிதம். இப்படி எல்லாம் கேள்வி கேட்டால் காதலுக்கு எதிரி என்று சொல்லிவிடுவார்கள். 
காதல் ஜாதி மத பேதங்களை ஒழிக்கும் என்பார்கள்.  நடைமுறையில் இது  
பெருமளவு சாத்தியப்பட்டு இருக்கிறதா.  எல்லா காதலும் கல்யாணத்தில் 
முடிவதில்லை . அதனால் என்னகெட்டு விட்டது. காதல் என்பது ஒரு சுகானுபவம் . காதல் நிறைவேறவில்லை என்றாலும்  ஒருவரின் உள் மனதில் இன்னொருவரின் நலத்திற்காக வேண்டும் எத்தனயையோ காதல்களை நான் பார்த்திருக்கிறேன்.  

காதலர்கள் இரு வேறு இடங்களில் திருமணம் செய்து கொண்டுவிட்டாலும்  வருடங்கள் எவ்வளவு ஆனாலும்  எப்போதோ 
சந்திக்கும்போது  நலமா என வினவும் போது  கிடைக்கும் ஆனந்தம் இருக்கிறதே  அப்பாப்பா அது காதல்.  

மறுக்கப்பட்ட காதல், நிராகரிக்கப்பபட்ட காதல், தோல்வி அடைந்த காதல்  இன்னும் எத்தனையோ வகை காதலன்  காதலிகள் வேறு ஒருவருடன் இல்லறத்தை நல்லறமாகத்தான்  நடத்தி கொண்டிருக்கிறார்கள் .  எப்பவாவது இதயத்தின் ஒர்ரத்தில் ஒரு சிறு வலியுடன்.  எதற்கு இவ்வளவு  பீடிகை  என்கிறீர்களா .வாருங்கள் தர்மபுரி 
காதலுக்கு போவோம். 

தாழ்த்தப்பட்ட ஒருவனை இன்னொரு ஜாதியை சேர்ந்த பெண் திருமணம் செய்து விட்டாளாம் . அதற்காக பெண்ணின் தந்தை தற்கொலை செய்து கொண்டாராம் . பொங்கி எழுந்த அவரது ஜாதியை சேர்ந்த மக்கள் ஒன்று 
சேர்ந்து அந்த தாழ்த்தப்பட்ட இளைஞனின்  ஊரை  சேர்ந்தவர்களின் வீட்டை  மற்றும் உடைமைகளை நாசம் செய்து விட்டனர் . பெருத்த சேதம் 
என்கிறது பத்திரிக்கை செய்தி.  அரசியல் வாதிகளுக்கு  லட்டு மாதிரியான 
தகவல். நாம் அரசியலுக்கு போக வேண்டாம்.  ஜாதி பிரச்சினைக்கும் போக வேண்டாம் . 

இவ்வளவு  எதிர்ப்பை மீறி வெற்றிகரமாக  திருமணம் செய்து கொண்ட 
அந்த ஜோடி  நடந்து முடிந்த கலவரங்களுக்கு பிறகு  நிம்மதியாய் 
வாழ்வை தொடங்க முடியுமா .   கிட்டத்தட்ட  200 வீடுகள் சூரையாடபட்டிருபபதாக  தகவல். மாணவசெல்வங்களின்  சான்றிதழ்கள்,
மதிப்பெண் பட்டியல்  புத்தகங்கள் , வாகனங்கள்  இன்னும் அந்த குடும்பத்தினர்  சேர்த்து  வைத்திருந்த  நகை மற்றும் அவர்களது சேமிப்புகள் அத்தனையும் கொள்ளையடிக்க பட்டு உள்ளது.  இவர்களின் காதலுக்கும் அவர்களின் உடமைக்கும் என்ன சம்பந்தம் .

இவர்களின் இந்த காதலால் விளைந்த விளைவுகள் .

    1. உறவினர்களின் வெறுப்பு  2)  வெறுப்புடன் கூடிய  பகை உணர்வுகள் .
     3.  நூறுக்கு மேற்பட்ட குடும்பங்கள்  தங்கள் வசிப்பிடங்களை விட்டு 
          அனாதையாக  ஒரு பொது இடத்தில சமைத்து  சாப்பிட்டு  உறங்கி  என்ன வாழ்கை இது என்று நொந்து  போனது. 4) எல்லாவற்றிற்கும் மேலாக  ஒரு வித பயத்துடன் எந்த நேரம் எது நடுக்குமோ என்ற அச்சத்துடன் வாழ்வது .  அமைதி ஏற்பட்டாலும்  அது நிலைக்க வேண்டுமே  என்ற தவிப்பு . இன்னும் சொல்லிகொண்டே போகலாம். 

இந்த காதல் ஜோடி என்ன செய்திருக்க வேண்டும் . பெற்றோர் சம்மதம் கிடக்கும் வரை பொறுத்திருக்க வேண்டும் . அவர்களுக்கு  தெரியாதா இப்படி எல்லாம் நடக்கும் என்று.  காதலில் வெற்றி பெற இவ்வளவு 
இழப்பு தேவையா .  இன்னும் ஒரு படிமேலே   இப்படி ஒரு காதல்  தேவையா . 

காதலின் சின்னம் தாஜ் மஹால். நம் அனைவருக்கும் தெரியும் .
அனால் நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்   mumtaaj  sha jehaanin
பதினொன்றாவது மனைவியோ  பதினாறாவது மனைவியோ .

வர வர காதல் கசக்குதையா --






Thursday, November 1, 2012

ippadiyum kooda

இன்றுமாலை  உறவினர்கள் சிலர் எங்கள் வீடிற்கு வந்திருந்தனர் .
அவர்களுடன் உரையாடியதில் சில  விஷயங்கள்  எனக்கு பிடிபடவே இல்லை.

அவர்கள் இரண்டு நாள் மழையை பற்றியும்,நீலம் புயலை பற்றியும் பேசியபோது  அவர்கள்எடுத்த முன் எச்சரிக்கை  நடவடிக்கை பற்றி 
ஒவ்வுருவரும்  கூறினர் . 

தானே புயல் அனுபவத்தை கொண்டு  தான் முதலிலேயே 6 பாக்கெட் 
பால் வாங்கி விட்டதாகவும், இன்னொருவர்  5 பாக்கெட் மெழு வர்த்தி 
வாங்கி வைத்துவிட்டதாகவும், மற்றொருவர்  வண்டிக்கு பெட்ரோல் 
மொத்தமாக போட்டு விட்டதாகவும் , மேலும் ஒருவர் இன்வேர்ட்டர் ஐ  சரி செய்து விட்டதாகவும்  என்று ஒவவொருவரும்  ஒரு முன் எச்சரிக்கை 
நடவடிக்கை பற்றி கூறினார். நான் கூட பரவாயில்லையே  மக்கள் தெளிவாகத்தான் இருக்கிறார்கள் என்று நினைதேன். 

ஆனால் அடுத்து பேசியதுதான்  என்னை  அதிர்ச்சி அடைய செய்தது.

நாம் இவ்வளவு பாடு பட்டது  வீணாபோச்சே . கொஞ்சம் கூட சேதம் இல்லாமல் புயல்  எங்கோ  போய்  விட்டதே . பால் பாக்கெட் வேஸ்ட் .
பெட்ரோலில் காசைமுடக்கி விட்டேன் . கடன்காரங்க வழக்கமா  போற 
கரண்டை கூட  கொஞ்ச நாழி மட்டும் நிறுத்தி  மத்தபடி சரியா கொடுத்துட்டானே .  நான் டிவி க்கு  கரண்ட் இருக்கதுன்ன்னு  தேடிபிடித்து 
என் பழைய ரேடியோவை கண்டுபிடித்து அதுக்கு நாலு battery  வேறு போட்டு  ம்  ம்   எல்லாம் சுத்த வேஸ்ட்என்று    இந்த ரீதியில் புலம்பல்கள்  

அப்ப்பாடா  ஒரு வழியாக புயல் கடந்தது என்று ஒருசாரார்   மகிழ்ந்து  கொண்டு  இருக்க இன்னொருபக்கம் .  இப்படி ஓர்  விசாரம்.

எனக்கு மண்டை கொழம்புது  நீங்களாவது ஏதாவது சொல்லுங்களேன் .


    


Saturday, October 27, 2012

pizza thiraipadam oru paarvai

இன்று மாலை என் நண்பன் போன் செய்து  pizza padam paarthu vaa  என்று கட்டளை
இட்டான். நானும் அவனும்  வித்தியாசமான படங்களை தேடி பார்க்கும் குணம்
கொண்டவர்கள் . உலக படம் முதல் உள்ளூர்  படம் வரை  பார்த்து விடுவோம்.
சில படங்கள் வித்தியாசங்கள் என்ற பெயரில் கழுத்தறுத்து தொலையும் .
சிலபடங்கள்  காட்சி அமைப்பில் வித்தியாசம் கொண்டிருக்கும்.

நண்பன் இட்ட கட்டளையை சிரமேற்கொண்டு  மாலை காட்சிக்கே சென்று விட்டேன்.  நானும் பேய் படத்தில் என்ன வித்தியாசம் இருக்கப் போகிறது என்று  நினைத்து கொண்டே  படத்திற்கு சென்றேன்.  ஆனால் படம் பார்க்காமல் இருந்திருந்தால் ஒரு யூகிக்க முடியாத கதையையும் கிளைமாக்ஸ்  காட்சியையும்   காணத் தவறியவனாய் இருந்திருப்பேன் .

நகைச்சுவை இல்லை, பிரபலங்கள் இல்லை, களியாட்டங்கள் இல்லை
இருந்தும் நம்மை திகிலுடன் படம் முழுக்க கை பிடித்து அழைத்து செல்லும்
இயக்குனருக்கு ஒரு சபாஷ் நிச்சயமாய் போடலாம்.

மசாலா மனம் இல்லாத இந்த pisssa  எருமைதயிரில் சாதம் பிசைந்து வத்தக்குழம்பு  ஊற்றி  சாப்பிட்டது போல்  இருந்தது.

அசைவ பிரியர்களுக்கு  வைரமுத்து பாஷையில் சொல்ல வேண்டும் என்றால் உப்பு கருவாடு ஊற வைத்த சோறு ..

JAMES BOND ORU PAARVAI

ஆவலுடன் எங்களைபோன்றவர்களால் எதிர்பார்க்கப்படும்   JAMES BOND இன்
புதிய  படம்  நவம்பர் ஒன்றாம் தேதி வெளியாக உள்ளது.  தமிழ் கதா நாயகர்களின்  படங்களின் சில   CHARACTER  போன்று  ஆங்கில படத்தின்  JAMESBOND CHARCTER  மிகவும் பிரசித்தி பெற்றது.

ஏறக்குறைய 20 படங்களுக்கு மேல்  பாண்டின்  படம் வந்திருக்கும். ஐந்துக்கும் மேற்பட்ட  நடிகர்கள்  BOND ஆக நடித்துள்ளனர்.  ஆனால் என்னை கவர்ந்தது
ROGER MOORE தான் . SEAN COONERY PARAVAAYILLAI...  ON HER MAJESTYS SECRET SERVICE  என்ற  ஒரு படத்தில் மட்டும்  GEORGE LAZENBY BOND ஆக  நடித்திருப்பார் .

இதோ  JAMESBOND  படத்தின் பட்டியல் .


TitleYearActorDirector
Dr. No1962Sean ConneryTerence Young
From Russia with Love1963
Goldfinger1964Guy Hamilton
Thunderball1965Terence Young
You Only Live Twice1967Lewis Gilbert
On Her Majesty's Secret Service1969George LazenbyPeter R. Hunt
Diamonds Are Forever1971Sean ConneryGuy Hamilton
Live and Let Die1973Roger Moore
The Man with the Golden Gun1974
The Spy Who Loved Me1977Lewis Gilbert
Moonraker1979
For Your Eyes Only1981John Glen
Octopussy1983
A View to a Kill1985
The Living Daylights1987Timothy Dalton
Licence to Kill1989
GoldenEye1995Pierce BrosnanMartin Campbell
Tomorrow Never Dies1997Roger Spottiswoode
The World Is Not Enough1999Michael Apted
Die Another Day2002Lee Tamahori
Casino Royale2006Daniel CraigMartin Campbell
Quantum of Solace2008Marc Forster
Skyfall2012Sam Mendes

ரமணி சந்திரன்  MILLS AND BOON   ராஜேஷ்குமார்  கதைகளை போன்று 

மேல் அட்டையை கிழித்துவிட்டு பார்த்தால்  எல்லாம் ஒன்று போலத் தான் தெரியும்  ஆனால் நாம் விரும்பி படிப்பதில்லையா , அதைப்போலத்தான்  

JAMESBOND படமும் .விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது   ரமணிச்சந்திரன் மில்ல்ஸ் அண்ட் பூன் ராஜேஷ்குமார்  கதைகள் ஒரு பருவத்தை தாண்டிய பிறகு  சுவாரசியம் இருக்காது. ஆனால்  JAMESBONDஎல்லா காலத்திலேயும் 
எல்லா பருவத்திலேயும் விறுவிறுப்பாகவும் கம்பீரமாகவும் நடைபோடுவார்.
 
ஆர்வத்துடன் வரவேற்போம்   DANIEL CRAIG ஐ  மன்னிக்கவும்  JAMESBOND ஐ .











airtel super singer GRAND FINALE

மிகுந்த  எதிபார்ப்புக்கிடையே  நேற்றுநள்ளிரவு வரை நடந்த AIRTEL SUPER SINGER GRAND FINALE  உப்பு சப்பு இல்லாமல்  நடந்து முடிந்தது . கடந்த வருடம்
முதலிடம் குறித்த சர்ச்சைகள் இருந்தாலும் நிகழ்ச்சி  சுவாரசியமாக இருந்தது.
மாலை 7 மணி அளவில் தொடங்கிய நிகழ்ச்சி நள்ளிரவு ஒரு மணியை தாண்டியும் ஓடிக்கொண்டிருந்தது. பாடும் திறமையில்  எல்லோருமே சிறப்பாக பாட நிகழ்ச்சியில் விறுவிறுப்பு என்பது மருந்துக்கு கூட இல்லை.

சிறப்பம்சமாக  ரஹ்மான்  கலந்து கொண்டது  ஒரு திடீர் அதிசயம் கலந்த
ஆச்சரியம் . ஆனால் ஏனோ தானோவென்று  ஓரிரு  வார்த்தைகளில்  பாடகர்களை  பற்றி கூறியது   தன்னடக்கம் என்பதா அசுவாரசியம் என்பதா .
என்னசொன்னாலும் அந்த ஆஸ்கார் நாயகன்  அரங்க்கினுள்  நுழைந்ததும்
அணைத்து தரப்பினரும்  ஒரு பரவச நிலையில் எழுந் து நின்று அவரை வரவேற்றது  ஒரு கண் கொள்ளா காட்சி,

போட்டியாளர்களில்  நான்கு மற்றும் ஐந்தாம்  இடத்தை பிடித்தவர்களின் பெயர்களை கூறும்போது , நமக்கு மட்டுமல்ல  போட்டியாலர்களுக்கே  கூட அதிர்ச்சியாக இருந்ததை  தொலைகாட்சியில் பார்க்க முடிந்தது.  ஏனெனில்
சுகன்யா என்ற  போட்டியாளர்  முதல் மூன்று இடங்களில் ஒன்றை பிடிப்பார்
என்பது தொடர்ந்து நிகழ்ச்சியை பார்த்து வந்த பெரும்பாலோரின்  கருத்தாக
இருந்தது.

பிரகதி என்ற போட்டியாளர்  இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டார் ஆம் தள்ளப்பட்டார் . ஏனெனில் 13 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளின் நிகழ்ச்சி
என்று சொல்லப்பட இந்த போட்டியில்  பிரகதி  வயது 15 என்று யாரோ சொன்னதாக தகவல். மேலும் ஒரு பதிவரின் முகநூலில்  பிரகதி 15 ஆவது
பிறந்த நாளை கொண்டாடும்  போட்டோவையும்  இணையத்தில் நான் பார்த்தேன். அதன் காரணமாக அவர் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கலாம்  என்பது என் யூகம் .

முதல் இடத்தை பிடித்த சிறுவன்  ஆதேஷ்  நிச்சயமாக முதல் இடத்துக்கு தகுதியானவன் தான் . மிக அழகாக ,இசைக்கும் வார்த்தைக்கும் கச்சிதமாக
பொருத்தி மிக அனாசியமாக உச்ச ஸ்தாயில்  பாடலை பாடிய நேர்த்தி
சூப்பர்   அவன் தெரிவு செய்த பாடல் வந்தே மாதரம்  சபையினரை  அவன் பாட்டுடன்  உணர்வு பூர்வமாக  ஒன்ற செய்து விட்டது  மட்டுமில்லாமல் .
வெற்றி சிகரத்திற்கும் இட்டு சென்று விட்டது.
 ORU NIGAZHCHIKKU COMPERE  பண்ணுவது என்பது ஒரு கலை. மிகுந்த சமயோசித புத்தியுடனும், சபை அறிந்து பேசுவதிலும்  விருவிருப்பான
பேசும் தேவை . ஆனால் நேற்றைய நிகழ்ச்சியில்  கூலிக்கு  மாரடித்தது  போல்
இருந்தது.

இறுதியில் வெற்றி பெற்றது விஜய் டிவி யின் வியாபார நுணுக்கமும் ,விளம்பரதாரரின்  வசூலும்   SMS  மூலம் காசு பார்த்த தொலை பேசி நிறுவனங்களும் தான்.

ஆனால் ஒன்றை மறுக்க முடியாது  இளம் சிறார்களின் குரல் வளத்தை மிக சரியாக வெளிச்சம் போட்டு காட்டிய  விஜய் டிவி யின் இந்த  ப்ரோக்ராம்
வரவேற்கப்பட வேண்டிய ஒன்றே.


Wednesday, October 24, 2012

pothysil oru pozhudhupothysil oru pozhudu

விஜயதசமி அன்று நாங்கள் தீபாவளிக்கு புது துணிகள் எடுப்பது எங்கள் குடும்ப வழக்கம். அதன்படி இன்று காலை சுமார் 10 மணி அளவில்  குடும்பத்தினர் அனைவருடன்  போத்திஸ்  கடைக்கு சென்றோம். 
 போக்குவரத்து  நெரிசலை எதிர்பார்த்து சென்ற எங்களுக்கு  அண்ணா சாலையில் போக்கு வரத்து சீராக   ஒழுங்குபடுத்த பட்டிருந்தது  மிகுந்த ஆச்சரியத்தை கொடுத்தது. 

உள்ளே நுழைந்ததும்  கனிவான வரவேற்பு.  யாருக்கு என்ன தேவை 
என்பதை கேட்டு அந்த பிரிவிற்கு அனுப்புவதில் தொடங்கி  கவுண்டரில் பில் போடுவது வரை ஒரு அழகான ஒழுங்கு முறை கடை பிடிக்கபடுகிறது .  
நூற்றுக்கனக்கான  மக்கள் உள்ளே இருந்து ம்  துணிவகைகளை தேர்வு 
செய்வது  எளிதாக இருந்தது. வகை வகையான மாதிரிகள் நம்மை அசத்துவது என்னவோ  நிஜம்.  விலையும்  நியாயமாகவே  பட்டது.

இதற்கு முந்தைய  வருடங்களில்  நான்கு  அய்ந்து  கடைகளை தேடி 
செல்ல வேண்டும். அந்த கடைகளிலும்  ஓர்  அளவே  சரக்குகள் இருக்கும் .
கூட்டம் காரணமாகவோ அல்லது வேலை  பளு காரணமாகவோ  அல்லது முதலாளிகளின் மேல் உள்ள எரிச்சலின்  காரணமாகவோ  
ஊழியர்கள் நம் மீது  கடுப்பு கலந்த  அன்பினை பொழிவார்கள் . ஏதும் வாங்கவில்லை என்றால் நம் காதுபட வசவும் பொழிவார்கள் . 

இந்த   தொல்லைகள்  எதுவும் இல்லாமல் நிதானமாக தெரிவு செய்ய முடிந்தது.  வந்திருந்த அனைவருக்கும் சர்கரைபொங்கல்   வழங்கப்பட்டது , அதுமட்டும் இல்லாமல்  மாலை  வெண் பொங்கலாம் ,
இரவு கேசரியாம் .   அத்தனை வசதிகளையும் கொடுத்து  தன்  ஆக்டோபஸ் 
கரங்களை நீட்டி  அணைத்து மக்களையும் கபளீகரம்  சப்தமில்லாமல்  
செய்து கொண்டிருக்கிறது இந்த  மெகா ஷாப் . 


வெல்லக்கட்டியை எறும்புகள் மொய்ப்பது போல அண்ணா சாலையும் 
திருவிழா முடிந்த  திடலை போல நேரு வீதி காட்சி அளித்ததும்  மனதை என்னவோ  செய்தது.   

போதீசுக்கே  புதுவை இந்தகதி என்றால்  

. .

Saturday, October 20, 2012

50th year indo china warindo china war 50th year

இந்தியசீனப்போர்  1962 ஆம் ஆண்டு நடைபெற்றது. ஏறக்குறைய ஒரு மாதம் நடந்த இந்த போர்  நவம்பர் மாதம்  முடிவுற்றது.

அப்போது நாங்கள் பள்ளி மாணவர்கள். இந்தியர்களை சீனர்கள் தாக்க்குகிரார்கள்  என்பது மட்டுமே எங்களுக்கு தெரியும் , அதன் காரணம் 
எதுவும் தெரியாது. எங்களுக்கு தெரிந்தது எல்லாம்  நேரு,  சூ என்  லாய் 
தலை லாமா ஜான்  கென்னடி  என்றசில தலைவர்களின்  பெயர்கள் மட்டுமே. 

ஆனால் தேச பக்தி என்ன என்பது பற்றி அப்போது உருவான எழுச்சி 
என் கண் முன்னே இப்போதும் பளிச்சென தெரிகிறது. 

சிங்க நாதம் கேட்குது சீன நாதம் ஓடுது  என்ற பாடலை நாங்கள் 
அனைவரும் பாடிக்கொண்டு வீதிகளில் வளம் வந்தது, அனைவரிடமும் 
உண்டி ஏந்தி  காசு கேட்டு அந்த காசை  பாது காப்பு அதிகாரிகளிடம் கொடுத்தது  ஒரு சீனனாவது  கிடைத்தால்  உடைக்க வேண்டும் என்ற எண்ணம் உதித்தது போன்றவை  நெஞ்சில் என்றென்றும் நீகாத  நினைவுகள். 

 சீனா   commun ist country. அதனால் தானோ  என்னவோ  communist  களை 
 இன்றுவரை  என்னால் ஏற்க  முடியவில்லை.

Friday, October 12, 2012

maatran vimarsanamMAATRAN VIMARSANAM. CHE PADAM


சூர்யாவின் மாற்றான்  படத்தை காண இன்று காலை முதலே தயாராகி விட்டேன் .  சூர்யா  காஜல்  கே வீ  ஆனந்த்  கூட்டணி வலுவான கூட்டணி அல்லவா .  நீண்ட நாட்களுக்கு  பிறகு ரத்னா   தியேட்டர்  சென்றேன்.பரவாயில்லை ஒலி  ஒளி  அமைப்புகள் கச்சிதம்.

கதை சுலபமாக  ஊகிக்க கூடியதுதான் . ஆனால் காட்சி படுத்தியிருக்கும் விதம் மிக அருமை.  சூர்யா  அப்பப்பா  என்ன ஒரு ஈடுபாட்டுடன்   உழைப்பு
நடனம் அமர்க்களம் என்றால்  சண்டை காட்சியோ  அனல் . குறிப்பாக  ராட்சச
 ராட்டினங்களில் நடைபெறும் சண்டை காட்சி அசத்தல் . ஏறக்குறைய அனைத்து  காட்சிகளிலும் சூர்யாவே வியாபித்திருந்தாலும்  துளி கூட அலுப்பு தட்டவில்லை . சிவாஜி  எம் ஜி யார்  கமல்போன்றவர்களுக்கு மட்டுமே இது சாத்தியம் .  hats off  soorya.

அடுத்து காஜல் . எந்த கோணத்தில் பார்த்தாலும்   அழகு பதுமையாய் தெரிகிறார் . ஆபாசம்  கவர்ச்சி  இரண்டிற்கும் என்ன வித்தியாசம் என்பவர்கள்
 இந்த படத்தில்  KAAJALAI  பாருங்கள்.  துளிகூட முகம் சுளிக்க  வைக்காத  அழகு.


கே வீ  ஆனந்த்    DHONI  மாதிரி  எலிகாப்டர்  ஷாட்   அடித்திருக்கிறார் .
PHOTOGRAPHY  கலை இத்தனை அழகானதா .  நாணி கோணி  என்றொரு பாடல்
காட்சி . உலகின் மொத்த அழகையும்  ஒருதிரைக்குள் கொண்டு வரும்  ரசவாத
வித்தை செய்து காண்பித்திருக்கிறார் .

சோலை புஷ்பங்களே என்  சோகம்  சொல்லுங்களே பாடல் காட்சியில் நடித்தவரை  நினைவிருக்கிறதா . அமாம் இங்கேயும் ஒரு கங்கை தாராதான் .அம்மா வேடத்தில் அசத்தியிருக்கிறார்.

இரண்டு சூர்யாக்களும்  குழந்தையில் இருந்து பெரியவர் ஆகும் வரை  ஒரு பாடல் காட்சி மிகவும் நயமாக  செதுக்கபட்டிருக்கிறது.  கலீல் கிப்ரான் , பாரதியார்  பகத் சிங் , செல்போனில் CHE QUARA  படம்  என்று   ஒரு சூர்யாவின் கேரக்டரை  நளினப்படுதியிருக்கிறார்  இயக்குனர்.

உயிர்ருக்கு போராடிக்கொண்டிருக்கும் சூர்யா உதவிக்கு காரில் செல்பவர்களை   கூப்பிட  யாரும் கவனிக்காமல் போக, ஒரு ஆட்டோ அருகில் வரும்போது சூர்யா  அண்ணே காப்பதுங்கன்னே  என்று கூற ஆட்டோ
டிரைவர்  உதவிக்கு வரும்போது  தியேட்டரில் எழுந்த ஆரவாரம்  டைரக்டர்
சொல்ல வந்ததை  அழகாக சுட்டிக்காட்டியது.

இன்னொரு அழகான காட்சி. ஒரு  சூர்யா மங்காத்தா
 படம் போக எத்தனிக்க
ஒட்டிக்கொண்டிருந்த  இன்னொரு சூர்யா நண்பன் படம் பக்க இழுக்க  இருவரும்  சேர்ந்து  கர்ணன் படம் பார்ப்பது  சில நொடிகளே வரும் ஒரு  ஹைக்கூ .. ஹோட்டலில்  காஜல் சூர்யாவிற்கு  இரண்டு ரூம் மேனேஜர்  தர
ஒரே ரூம்  போதும்  என்று சூர்யா சொல்லிவிட்டு , உன் மேல் எனக்கு நம்பிக்கை இருக்கிறது என்று  KAJALAI  பார்த்து சொல்வத  அழகு .

ஆனால் படம் முடிந்து வெளியில் வரும் போது , ஒரு பிரம்மாண்ட பொருட்காட்சியை  கண்டு ரசித்து  வெளியில் வரும்போது  ஒரு வெறுமை  தோன்றுமே  அதை மாதிரியே ஒரு பீலிங் .
   


Tuesday, October 9, 2012

october 10 postal day

எதேச்சையாக செய்தித்தாளை புரட்டும் போது  அக்டோபர்  10  postal thinam  என்று
தெரியவந்தது. தபால் என்ற சொல் இன்றைய தலைமுறைக்கு தெரியுமா என்று தெரியவில்லை.  ஆனால் எனக்கு சிறுவயது முதல் இன்று வரை தபால்
என்பது பல்வேறு அனுபவங்களை கொடுத்துள்ளது.

பள்ளி நாட்களில் நாங்கள் வாய்ஸ் ஆப்  அமெரிக்கா , ருசியன் எம்பசி
இன்னும் பல பெயர் தெரியாத தூதரகங்களுக்கு  ஒரு கடிதம் எழுதுவோம்.
ஒரு சில நாட்களில்  அந்தந்த ஊர்களில் இருந்து  கட்டு கட்டாக  வழு வழு பேப்பரில் நிறைய புத்தகங்கள் வரும் .  தபால்காரர்  நம் பெயரை கூப்பிட்டு
அந்த கடிதங்களை நம்மிடம் கொடுக்கும்போது   எங்களுக்கு ஒரு கர்வம் வரும் பாருங்கள்  அதை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது . மதியம்  வீட்டிற்கு வரும் அப்பா  அம்மாவிடம் தபால் எதாவது  வந்ததா என்று கேட்க , உங்களுக்கு ஒன்னும் இல்லீங்க , ஜெயராமனுக்குதான் வந்தது என்று சொல்லும்போது நான் அப்பாவை ஒரு பார்வை பார்பேன் பாருங்கள் , நாங்களும் வளர்ந்துட்டோமில்லே  என்ற  தொனி  அதில்  இருக்கும்.

எங்கள் உறவினர்  வருடத்திற்கு ஒரு முறை எங்கள் வீட்டுக்கு வருவார் . அவரின் முதல் வேலை என்ன தெரியுமா ? ஒரு கம்பியில் சொருகி இருக்கும்
அத்தனை பழைய கடிதங்களையும் ஒரு வரி விடாமல் படிப்பார் . அந்த வருடத்தில் நிகழ்ந்த அத்தனை செய்திகளையும் அந்த கடிதங்கள் மூலமாகவே
தெரிந்து கொள்வார் .

இப்போது நாம் தபால்கரர்களையே பார்க்க முடிவதில்லை. அன்றைய தினத்தில்  தபால்காரருக்கு நம் அனைவரின் குடும்பத்தை பற்றியும் தெரியும் .
காணும் பொங்கல் அன்று  தபால் கரருக்குத்தான்  முதல் மரியாதை.

கல்லூரியில்  இடம் கிடைத்துவிட்டது ,  lic ல்  வேலை  கிடைத்துவிட்டது
என்ற தபாலை இன்று காணும் போதும் என்ன சுகம் தெரியுமா . தபால்கார தெய்வமாக  அல்லவா தெரிந்தார் .

ஒரு முறை எனது நெருங்கிய நண்பருக்கும் எனக்கும் அலுவலகத்தில் ஒரு சிறிய  பிரச்சினை . நண்பர் கேரளாவை சேர்ந்தவர் .நாங்கள் பணி  புரிவது சிதம்பரத்தில்.  பிரச்சனையின் காரணமாக  அன்று மதியமே நண்பர்  கேரளாவிற்கு  யாருடனும் சொல்லிகொல்லாமல்  சென்று விட்டார். என் மீது
கோபத்தின் காரனமாககத்தான் என்பது எனக்கு மட்டுமே தெரிந்த  ரகசியம்.
ஒரு வாரம் ஓடிவிட்டது  நண்பர் அலுவலகத்திற்கு வர அறிகுறியே தென்படவில்லை . எனக்கோ ஒரு குற்ற உணர்ச்சி . அப்போதுதான்  இந்த தபால்  விரிசல் விட இருந்த எங்கள் நட்பை பாறையாக இறுக்கியது. எப்படி தெரியுமா ? நட்பின் வலி என்ன என்பது அந்த ஒரு வாரத்தில் நான்  உணர்ந்தேன் .  நீண்ட யோசனைக்குப்பின்  ஒரு தபால் கார்டை எடுத்து
இரண்டு வரி எழுதினேன் .

             " உன் உயிர்  என் உயிர் என்றது ஆனபின்
                என்னிடம் கோபம் கொள்ளுவதேன் .

பொன் எழில் பூத்தது  புது வானில் வெண் பனி தூவும் நிலவே நில்  என்ற பாடலின் வரிகள்தான் மேலே உள்ளவை.

கடிதம் கிடைத்தவுடன்  நண்பரின் பதில் கடிதம் என்ன தெரியுமா?
                    நிம்மதி அடைந்தேன்   நாளை வருகிறேன்.
அந்த தபால் இன்னமும் என்னிடம்.

ஒரு புரிதலுக்கு அந்தக்கால தபால் வழிவகுத்தது . ஆனால் இன்று   எத்தனையோ  நவீன தொடர்பு  சாதனங்கள் இருந்தபோதும்  தற்போது  நான் இழந்த சில உன்னதமான  நட்புகளை  மீண்டும்  பெற  அந்தகால தபால் வராதா
என்ற ஏக்கம்தான் என்னுள் இன்னும் நிறைந்திருக்கிறது.

இன்னொரு சுவாரசியமான  கடிதம் . ஒரு முறை   நான் நண்பர்களுடன்
பெட்டிக்கடையின் அருகே நின்று கொண்டிருந்தேன் . நண்பர்கள் அனைவரும்
என்னை தவிர  புகை பிடித்துகொண்டிருந்தார்கள் . ஆனால் என் துரதிர்ஷ்டம்
எனக்கு வேண்டிய ???? ஒருவர்  ஒரு முறை முறைத்து  கொண்டே சென்றார்
பயந்து போன நான்  reply cardல்

                    மன்னிக்க மாட்டாயா  உன் மனம் இறங்கி  என்று எழுத

வந்த  reply  "    இந்த ஒரு முறை மட்டும் "   என்று  கை எழுத்து இல்லாமல்
வந்தது.  இந்த தபாலும்  எத்தனை ஆண்டுகள் ஆனாலும்  சுவை குன்றவே  குன்றாது .

        எங்களின்  உணர்வுகளின் ஊடே  ரத்த நாளங்களில்  அத்தனை உணர்ச்சிகளுடன்  பின்னி பிணைந்து விட்ட இந்த தபால்  -- தபால் தினம்
வாழ்கவே .

 கடைசியாக  சில வருடங்களுக்கு முன் தபால் எழுதும் பழக்கத்தை தூண்ட  என் நண்பர் மனோவுடன் சேர்ந்து சில நாட்களுக்கு மட்டும்  கடிதம்  எழுதினேன் . பின் கால சக்கரத்தில்   sms  email  endru naanum maarikkondirukkiraen..






Monday, October 1, 2012

solla thudikkuthu manasu

 நேற்றைய நீயா நானா  நிகழ்ச்சி -- எது   சந்தோசம் என்ற கேள்விக்கு  பலர் பலவிதமான  பதில்களை கூறினர் . அத்துடன் அவர்கள் பெற்ற  உச்சகட்ட
சந்தோசம் பற்றியும் கூறினார்.  ஆனால் ஒரு நண்பர் சொன்ன செய்தி என்னை
அதிர்ச்சியின்  உச்சத்திற்கே  கொண்டு  சென்றது .

தன் மகளின் மஞ்சள் நீராடு விழாவை  சிறப்பாக நடத்தியது குறித்து அவர் மிகவும் சந்தோஷப்பட்டார் . பொதுவாக ஒரு பெண்  பூப் பெய்து விட்டால்
அவளின்குடும்பதினர்  சடங்கு என்கின்ற பெயரில்  ஊரை கூடி  விழா  எடுப்பது
வழக்கமான ஒன்றுதான் . அதன்  உள் அர்த்தம்  எனது மகள் திருமண பந்தத்திற்கு தயாராகி  விட்டாள்   என்பதுதான்

காலப்போக்கில் மஞ்சள் நீராடு விழா  என்பது தன்  அந்தஸ்தை வெளிப்படுத்தும்  ஒரு நிகழ்வாக மாறி விட்டது.

ஆனால் இந்த நண்பர்  அந்த விழாவை , தன் பெண்ணை  helicopter ல்
அழைத்து வந்து  விழாவை நடத்தினாராம். அதற்க்கு அவர் பட்ட சிரமங்களையும்  சொன்னார்  helicopter வாடகை   fire service permission, helipad
pondravaigalukka  மெனக்கட்டதையும்  சொன்னார்.  எனக்கு அட பைத்தியக்கார
என்றுதான் சொல்ல தோன்றியது.  டி வீ யில்  அந்த  வீடியோ   காட்சியையும்
காண்பித்தார்கள் .

உளவியல் ரீதியாக பிஞ்சு மனங்கள்  சஞ்சலத்தில் இருக்கும் போது
இப்படி ஒரு விழா தேவை இல்லை என்பதே என் கருத்து . இதில்  helicopter ல்
வைத்து விழாவை நடத்தி அதில் சந்தோசம் கண்டார் என்று சொன்னால் ????

எங்கே போய் கொண்டிருக்கிறோம்  நாம்?

Thursday, September 13, 2012

IRUBATHIN THODAKKAM

இன்று மதியம்  LIC  புதுவை கிளை ஒன்றில் பணி புரியும் நண்பர்கள் (இரு பாலரும்)  தாம் பணியில் சேர்ந்த இருபதாம் வருட தொடக்க நாளை  மிக விமரிசையாக  அனைவருக்கும்  மதிய  உணவுடன்  சிறப்பித்து மகிழ்ந்தனர் .

 அந்த  மகிழ்வில் நானும் பங்கு பெற்றேன்.  என்ன ஒரு சிறப்பான ஏற்பாடு .
  சுமார் 100 பேருக்கு மேல் கலந்துகொண்ட அந்த உணவு விருந்தில் சிறப்பு அம்சமே   பல்வேறு நிலைகளில் இருக்கும் பணியாளர்கள்  ஒரு சேர உணவு
உண்டது அதுவும் மகிழ்வுடன் கலந்துரையாடி உண்டது   LIC ல்  ஒரு  அற்புத
காட்சி.

 அனைவரின்  முகங்களிலும்  சந்தோஷ ரேகை . சாத்தியமாகுமா  என்பதை
சாத்தியமாகி இருக்கிறார்கள்  நண்பர்கள். சிட்டென பறந்து  உணவு பரி மாறுதல் ,  சட்டென  முகமலர்ந்து  வரவேற்ற பாங்கு  அழகான ஒருங்கிணைப்பு  அத்தனையும் நிகழ்ச்சிக்கு மெருகூட்டியது.

தாம்பூல பை கொடுத்திருந்தால்  அது நம் வீட்டு  திருமண நிகழ்ச்சி போல் இருந்திருக்கும் .

இதுபோன்ற நிகழ்வுகள் அடிக்கடி நிகழுமாயின்  குழுமனப்பான்மை பெருகி  தாம்  பணிபுரிகின்ற  நிறுவனம் நிச்சயம் மென் மேலும் வளரும்.

இரும்புகோட்டையை  போல் உள்ள நம் LIC   நிறுவனம் தற்போது திட்டமிட்டு
பல் வேறு தாக்குதலுக்கு ஆளாகிறது . இந்த கோட்டையின்  நம்பிக்கையை காப்பது  நம் அனைவரின் கடமை .  அதிகாரிகள், வளர்ச்சி அதிகாரிகள் ,முகவர்கள் , ஊழியர்கள்  என அனைவரும் இணைந்து  இப்படி ஒரு தொடக்கத்தை  துவங்க காரணாமாய் இருந்த  நண்பர்களே  நீங்கள் மேலும் மேலும் வளரவேண்டும் .


  உங்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி.

   இ து தொடரட்டும் சுகமாக ...






     

Monday, September 3, 2012

punch punch

இன்று கடற்கரையில் என் பழைய நண்பர்களை பார்த்தேன். அனைவரும்
அமர்ந்து  சில மணி நேரம் நிறைய   விஷயங்கள்  பேசினோம் . இதில் என்ன
சுவாரசியம் என்கிறீர்களா? உரையாடல்களின் ஊடே திரைப்படங்களின்  பஞ்ச்
வசனங்கள் சரளமாக வந்து விழுந்து உரையாடல்களை உற்சாகமாக ஆக்கியது..    திரைப்பட வசனங்களுக்கு இவ்வளவு தாக்கமா.  அப்படி என்ன பஞ்ச் வசனம் என்கிறீர்களா.  இதோ  எங்கள் பேச்சின் இடையிடையே  வந்த
திரை வசனங்கள்.

1.   ஆணியே புடுங்க வேண்டாம்
2.    பத்த வச்சிட்டியே பரட்டை
3.    போகணும்னு மட்டும்தான் தோணுது எங்க போறதுன்னு தெரியலையே
4.     என் பேச்சை நானே கேட்க மாட்டேன்.
5.     அது
6.      நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்.
7.      சாந்தா ஏன் பாட்டை நிறுத்து விட்டாய்  பாடு  சாந்தா பாடு
8.      முருகன் ஒரு மா மேதை
9.       தெய்வமே கலங்கி நின்ன அதுக்கு யாரால மாமா ஆறுதல் சொல்ல
         முடியும்.
10.     பேச்சு பேச்சாத்தான் இருக்கணும்
11.     பிங்கலன் ஒரு அப்பாவி
12.     சித்தப்பா உடன் பிறந்தே கொல்லும்  வியாதி 
13.      நான் ஒரு தடவை  சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி
14       தமிழ்லே எனக்கு  பிடிக்காத வார்த்தை
15      மாப்பிள்ளை என்ன செய்றாரு  போண்டா   சாப்பிடுறாரு
16.     ஆனந்தா  என் கண்களையே உன்கிட்டே ஒப்படைக்கிறேன்
17.     வரும்  ஆனா வராது
18.     அவனனவன்  பத்து பதினைஞ்சு   friends ய்  வைச்சிக்கிட்டு  சந்தோஷமா
           இருக்கான்  நான் ஒரே ஒரு friend அ  வச்சிக்கிட்டு  ஐயையோ
19           ஆண்டவன் தடுக்கிறத யாராலும் கொடுக்க முடியாது.
20       நீயெல்லாம் நல்ல வருவடா
21       என்னத்த சொல்லி  என்னத்த செய்ய
22       எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்
 இதெல்லாம் நாங்கள் ஒருவரை பற்றி ஒருவர் விசாரித்துகொண்டு இருக்கும் போது  விழுந்த வார்த்தைகள் .  எந்த மாதிரி இன்னும் எத்தனை  வசனங்கள்  இருக்கோ  உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்களேன்.
மேலே உள்ளவைகள் எந்த படத்தில் வருது யார் பேசியது என்று உங்களால்
முடிந்தால் எனக்கு தெரிவிங்கலேன் .