Saturday, December 22, 2012

irukkum idaththaivittu illatha idam thaedi

இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி ---


       இரண்டு ஒட்டகங்கள்  பேசிக்கொள்கின்றன .

               அம்மா நமக்கு ஏன்   கால் எல்லாம் குச்சி குச்சியாய்   இருக்கு.

                மகனே நாம் பாலைவனப்பகுதியில் வேகமாக நடப்பதற்கு கடவுள்
                இம்மாதிரி படைத்திருக்கிறார்

                 அம்மா நமக்கு ஏன்  முதுகில அசிங்கமா  ஒரு முண்டு இருக்கு

                 மகனே நாம் நீண்டதுரம் பயணிக்கும்போது , கொழுப்பை சேகரிக்க
                 ஆண்டவன் நமக்கு  அளித்தது .

                  அம்மா நமக்கு ஏன்  பல்லு இப்படி அசிங்கமா இருக்கு .

                  மகனே பாலைவனத்தில் இருக்கிற  செடி கொடிகளின் இலைகளை
                 தின்ன  ஆண்டவன்தான்  இப்படி ஒரு பல்லை  அளித்திருக்கிறான் .

                 அம்மா அப்புறம் ஏம்மா  நம்மை  கூண்டில  அடைச்சி  வச்சிருக்காங்க .

                 ???????.

             என்  வீட்டில் நானும் என் மகளும் பேசிகொண்டிருக்கிறோம் .

                     எங்கப்பா போயிட்டு வந்தே
                      ஒரு கூட்டத்திற்கு போயிட்டு  வந்தேம்மா .
                      எதைபத்தி பேசினாங்க அப்பா.
                       மக்கள் ஒற்றுமையை பற்றி .
                      மக்கள் ஒற்றுமை நம் ஊர்ல இருக்காப்பா
                       என்னம்மா இப்படி கேட்டுட்டே  நம்மூர்தான் உதாரணம் அம்மா.
                       இங்கதான் முஸ்லிம் முருகர் கோயில்னு ஒன்னு இருக்கு.
                        வேளாங்கண்ணிக்கு  பொய் மொட்டை அடிச்சுக்கிற  இந்துக்கள்
                        நாமூர்ல இருக்காங்க. ஏம்மா நாம கூட அடிகடி
                        வேளாங்கண்ணிக்கு  போவேமே நினைவு இல்லையா.
                        அது மட்டும் இல்லைம்மா மனற்குல வினயாகர் கோயிலுக்கு
                         எல்லோரும் வராங்களே .

                அப்புறம் ஏம்ப்பா  மக்கள் ஒற்றுமையை பற்றி இங்க வந்து பேசினாங்க .

           ??????????

No comments:

Post a Comment