Sunday, December 10, 2017

11-12-1974


சில நாட்கள் நம் நினைவினில் அழுத்தமாக பதிந்திருக்கும் . 11.12.1974 இந்த நாள் என் வாழ்க்கைப்பாதையில்  ஒளியேற்றிய  நாள் . ஆம் அன்றுதான் நான்
ஆயுள் காப்பீட்டு கழகத்தில் பணியில் சேர்ந்த நாள்.  அதுவரை சராசரி இளைஞனாக  பாடப்புத்தகங்களை கொஞ்சமாகவும்  மற்ற  புத்தகங்களை நிறையவும் படித்துக்கொண்டும் , திரைப்படங்களை பார்த்துக்கொண்டும்  அரசியலில் ஐயா காமராஜர் வழியில் ஈடுபட்டும் இருந்த என்னை  ஒரு வழியாக  செதுக்கிய  பெருமை  எல் ஐ சி நிறுவனத்தையும்  நான் சார்ந்த அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தையும் சாரும்.   சரி  11.12 74  அன்று நடந்த நிகழ்வு  ஒரு பார்வையாளனாக இன்று என் கண் முன் விரிகிறது.   

காலை 9.30  மணி  என்னை கையைப்பிடித்து  என் அப்பா சிதம்பரம் கிளைக்கு நான் பணியில் சேர  அழைத்து கொண்டு வருகிறார். சிதம்பரம் என் அம்மாவின் ஊர் என்பதால் ஏற்கனவே எனக்கு பரிச்சயமான ஊர்.  என் தோற்றத்தை பற் றி சொல்லியாக வேண்டும்.. ஒல்லியான  தேகம். போதாக்குறைக்கு  கண்ணியமாக தெரிய வேண்டும் என்பதற்காக  தலை முடி ஓட்ட வெட்டப்பட்டிருந்தது.  ஏராள அறிவுரைகளுடன்  பயமும் வியப்பும் கலந்த தோற்றம்.  என்னை பார்க்க   எனக்கே  என்னை   பிடிக்கவில்லை.

அப்பா  கையில் ஒரு மஞ்ச பை . அதனுள் என் பணி  ஆணை ,. ஸ்டென்சில் பண்ண காகிதத்தில். இப்போதைய  இளைஞர்களுக்கு ஸ்டென்சில் பேப்பர் என்றால் தெரியுமா? 

அலுவலகம் முதல் மாடியில்  . அங்கே இருந்த நாற்காலியில் அமர்ந்தோம் .
சற்று தூரத்தில் எதிரே ஒருவர் அமர்ந்து கொண்டு அன்றைக்கு வந்த அலுவலக தபாலை பிரித்து  அடுக்கி வைத்துக்கொண்டு  அதன் மேல் சிகப்பு மையில் என்னென்னவோ எழுதி எழுதி வைத்தார். அவர் பக்கத்தில் இருவர் ..

இருவரும் டீக்காக உடுத்தி இருந்தனர்.  ஒருவர் சிரித்த முகத்துடனும்  ஒருவர்
சீரியஸாகவும்  அவருடன் கடிதத்தை பார்த்து கொண்டிருந்தனர். 

ஒவ்வொருவராக  அலுவலகம் வந்து கொண்டிருந்தனர். என் அப்பா ஒவ்வொருவருக்கும்  வணக்கம் சொல்லி கொண்டிருந்தார் . சிலர் பதில் வணக்கம் சொன்னார்கள்  சிலர் தலையை மட்டும் அசைத்தார்கள்  சிலர் அந்த வணக்கம் நமக்கல்ல  என்ற ரீதியில்  சென்றனர்.  ஆனால் ஒருவர் கூட எதற்கு வந்திருக்கிறீர்கள் என்று  கேட்கவில்லை. 

ஒருவர் உள்ளெ நுழையும் போதே மாப்பிளே  நேத்து என்னாச்சி தெரியுமா  என்று  கேட்டுக்கொன்டே வந்தார். மலர்ந்த சிரிப்பும் வாய் நிறைய வெற்றிலையும்  ஜிப்பா  வேஷ்டியுடன் வித்தியாசமாக இருந்தார்.
போகும்போதே யார் இந்த கொழந்தை என்று சொல்லியவாரே  போனார்..  அவர் பெயர்  ABS  என்று அறிந்தேன்.  அப்போதே நான் வடிவேலு மாடுலேஷனில்  என்னது குழந்தையா என்று மனதிற்குள் கேட்டுக்கொண்டேன் .

அடுத்து வேஷ்டி சட்டையுடன்  கையில் புத்தகங்களுடன்  ஒருவர். புத்தகங்கள்  எல்லாவற்றிலும் சிவப்பு அட்டை. அரிவாளுடன் படங்கள். புரிந்து விட்டது  எப்போது சீனா இந்தியா மேல படையெடுத்தது அப்போதிலிருந்து சிவப்பு எனக்கு அலர்ஜி .(இன்று வரை) இவருடன் வேலை என்று நினைக்கும்போதே  பயமாய் இருந்தது.  இவர் பெயர்  RBS.

அடுத்து  கல்லூரி கதவை திறந்தது போல் வரிசையாய் இளைஞர்கள் .எனக்கு மிகவும் சந்தோசம்  . அவர்கள் அனைவரும்  எனக்கு சில மாதங்களுக்கு முன் பணியில் சேந்தவர்கள் .

மணி பத்து : அனைவரும் அவரவர் இருக்கையில் அமர்ந்து பணியை தொடங்கினர். அரசு அலுவலகத்தில் சரியான  நேரத்திற்கு  யாரும்  வரமாட்டார்கள்  என்கின்ற  பேச்சு  சரியில்லை என்பதை  அன்று உணர்ந்தேன்.

நானும் என் அப்பாவும்  அதிகாரியை நோக்கி சென்றோம் . அப்போது கடைசி தபாலை பிரித்து  பக்கத்தில் இருந்தவர்களிடம்  அவர்  இன்னைக்கு ஒருத்தர் பாண்டிச்சேரியில் இருந்து பணியில் சேர்வார் என்று லெட்டர் வந்திருக்கு  என்று கூற , அவர்கள்   பாண்டிச்சேரியிலிருந்தா ?? எந்த மாக்கான் வரப்போகுது ,நிதானமா இருக்குமா  என்று சொல்லிக்கொண்டே  என்னைப்பார்த்து  யார் என்று கேட்க ...    நான்தான் அந்த  மாக்கான்  நிதானமாத்தான் வந்திருக்கான் என்று சொல்ல  என் அப்பா என் கையை பிடித்து இழுத்தார். அவர்கள் மூவரும் இதை எதிர்பார்க்காததால் சற்றே நிதானித்து உடனே  வெல் கம்  என்றார்கள்.  சில நிமிடங்களிலேயே  மிகவும் பரிச்சயமாகி விட்டார்கள் . என் அப்பாவை அமரச்சொல்லிவிட்டு  என்னை ஜாய் னிங் ரிப்போர்ட் தர சொன்னார்கள் .  நான் திரு திரு என்று முழிக்க  RBS .
என்பவர் தானே  டைப்  செய்து   இரண்டு கடித்தை கொடுத்தார்.  முதல்  கடிதத்தை பார்த்தவுடன் எனக்கு பயங்கர அதிர்ச்சி.  ஏனென்றால் அது சங்கத்தில் சேருவதற்கான  கடிதம் .  இரண்டாவது என்னுடைய ஜாய் ய்னிங்
கடிதம். . என் தயக்கத்தை  புரிந்து  கொண்ட  அவர்கள் என்னை  சமாதானம் செய்து  கையொப்பம் பெற்றார்கள்.  ஜாய்நிங்  ரிப்போர்ட் கொடுப்பதற்கு முன்  சங்கத்தில் சேர்ந்த பெருமை எனக்கும்கூட கிடைத்தது. 

பிறகு ஒவொருவராக எனக்கு அறிமுகம் செய்தார்கள்.  அதில் ஒருவர்  மிகப்பெரிய மீசையுடன்  படு பந்தாவாக  இருந்தார். ஒரு ஊழியர் என் காதில் ரகசியமாக இவரை அனுசரித்து போ அவர் இந்த பகுதிகாரர்  என்றார். . அப்போது  ஒரு சுவாரஸ்யம் . எனது மாமா நான் வந்திருப்பதை அறிந்து  என்னை பார்க்க அலுவலகம் வர  அந்த பந்தா மீசை  ஆசாமி ஓடி போய்  என் மாமாவை வரவேற்க  எங்க அக்கா பையன்தான் அது என்று என்னை நோக்கி சொல்ல  உடனே  தம்பி சொல்லவேயில்லையே  என்று சொல்லி  என்னுடனே வந்தார் . அவர் பந்தா சற்று குறைந்திருந்தது. காரணம் எங்க மாமா வி ன் ஊர் சிதம்பரம் அருகே  உள்ள கவரப்பட்டு கிராமம் . ஆம் வாண்டையார் கிராமம்தான் . நானும் அவர்  பார்வையில்  உள்ளூர்காரன் .ஆகிவிட்டேன் .

முதலில் இருவரை பற்றி சொன்னேன் அல்லவா . அதில் ஒருவர்  ரவீந்திரன் என்கிற ரவி  இன்னொருவர்  வேதா  என்கின்ற வேத ராமன்..  இன்று வரை என் அன்பிற்கும் மரியாதைக்கும் உரியவர்கள். . 

சிதம்பரம் எல் ஐ சி கிளை  நண்பர்கள் அனைவரும் எனக்கு ரோல்  மாடெல்கள் .பாசமுடன்  என்னை அண்ணாச்சி என்று அழைக்கும்  சிங்காரவேலு சார் , படி
மார்க்சிசம் படி என்று  என்று மார்க்சிசம் படிக்க வைத்த வேலுசாமி சார்,
தன்  கடைசி காலம் வரை எனக்கு ஆசானாகவும் வழிகாட்டிய  RBS  அவர்கள் ., அப்போதே முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் தீவி ரமாக இருந்த  ரமணன்,,
அன்றைய  காங்கிரஸ்  இடதுசாரி எதிர்ப்பு நிலை கொண்ட ஜெயராமன் , நான் அன்போடு வாத்தியாரே என்ற அழைக்கும்  சுப்பாராயான் அவர்கள் (தற்போது  இடதுசாரி)   அமைதியான வயதில் மிக இளையவரான உத்திராபதி , வட்டார வழக்கில்  ராஜ் நாராயனையே  மிஞ்சும்  பாலசுப்ரமணியன் என்னும்  PBS
குட்டி சாய்  என்று என்னை அழைக்கும்  அப்போதைய நவீன இளைஞன் கல்யாணராமன்  ஸ்ரீரங்கத்து ஆசார ரங்கராஜன் , என் போல் சினிமா மோகம் கொண்ட சேகர்  ஆசிரியராக இருந்து எல் ஐ சிக்கு வந்தபின்பும் ஆசிரியர் போல்  குணம் கொண்ட V.V.   என்று அத்தனை பேரையும் நினைத்து பார்க்கிரேன் .

இன்று அனைவரும் வெவேறு ஊர்களில்  வெவ்வேறு பதவிகளில் வெவேறு  சூழ்நிலையில் . ஆனால் எங்கள் அனைவரையும்   ஒருங்கே  இணைப்பது   சிதம்பரம் கிளையில் பணி  புரிந்த மகிழ்வான நாட்களும்  எங்களை சரியாய் வழிநடத்தி சென்ற  எங்களது பெருமைக்குரிய சங்கமான  AIIEA வும் தான். .

பழைய நெனைப்புடா பேராண்டி பழைய நெனைப்புடா. ..


  

Sunday, November 12, 2017

இந்தியாவில் புதுச்சேரியை சிறந்த பிரதேசமாக ஆக்குவது


மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய .................... அவர்களே   சான்றோர்களே
அமர்ந்திருக்கும் அன்பு உள்ளங்களே  உங்கள் அனைவருக்கும் என் அன்பு வணக்கத்தை  கூறி  என்னுடைய கருத்தை பதிவு செய்கிரேன் .

யோசனையோ அறிவுரையோ கூறும் அளவிற்கு எனக்கு தகுதி இருக்கிறதா என்று எனக்கு தெரியாது  ஆனால் சிறு துரும்பும் பல் குத்த உதவும் என்ற ஆன்றோர் வார்த்தைக்கு ஏற்ப  என் உரை யை  தொடங்குகிரே ன்.


தாகத்தை தனித்தவருக்கு ஆயி மண்டபம்,  சுதந்திர தாகத்தை தணிக்க  கவி பாடிய மீசை முண்டாசுக்காரனின்  இருப்பிடம் , நெருப்பு கவி பாவேந்தரின் பிறப்பிடம் , முஸ்லிம் முருகன் கோயில்  என்பதில் இருந்தே அறியும் மத நல்லிணக்கம்  ஆன்றோர்கள் வசித்த ஆன்மீக பூமி  நிறையான மருத்துவம்  அறிவுடன் கூடிய கல்வி  என ஏராள பெருமையும் அழகையும் கொண்ட நம் புதுவை பிரதேசத்தை மேலும் எப்படி முதன்மை மாநில ஆக்குவது.
புதுச்சேரியை சிறந்த பிரதேசமாக ஆக்குவது எப்படி  .. அழகுக்கு அழகூட்டுவது  எப்படி.

      சொர்கமே  என்றாலும் அது நம்மூரு போலாகுமா . இது மேலும்  மேலும் சொர்கமாக்க  நாம் எப்படி சிந்திக்க வேண்டும் என்று என்னுள் தோன்றிய சிறு பொறியை  எண்ண ஓட்டத்தை பேச்சு வடிவில்  உங்கள் முன் பகிர்கிறேன்.

முதலில் புதுச்சேரியின் முக்கிய பிரச்சனை போக்கு வரத்து . இதை சீர் செய்ததாலே  பாதி  பிரச்சனை தீர்ந்து விடும் .  அழகும் அதிகரிக்கும்  புதுவையோ சிறு மாநிலம்
வாகனங்களின் பயன்பாடு அதிகம்  வீதிகளின் அகலம் குறைவு.

மேம்பாலம் கட்டுவதற்கு சாத்திய கூறு உள்ளதா என்று தெரியவில்லை.
ரோப் கார்  முறையை புதுவையில் செயல் படுத்த  முயற்சி எடுக்கலாம். அதாவது  தரையிலிருந்து  ஒரு முப்பது நாப்பது அடி உயரத்தில்  புதுவையை சுற்றி உள்ள புல்வார்களில்  ரோ ப்  கார்  அமைக்கலாம்    ஒரு கிலோ மீட்டர் இடைவெளி விட்டு  ஒவ்வொரு பகுதியிலும்  ரோப் கார் மேல் ஏற சாய் தள படிக்கட்டு அல்லது தானியங்கி படிக்கட்டு அமைக்கலாம்.  இதன் மூலம் கணிசமான அளவு   நெரிசலை தவிர்க்கலாம்.

வெளிநாடுகளில் உள்ளது போல் போக்கு வரத்தை  கண்காணிக்க  சி சி டி வி
கேமராவை  வீதிக்கு வீதி  அமைத்து   அதன் மூலம் போக்கு வரத்து விதி மீறல்களையும்  குற்ற செயல்களையும்  கணிசமாக குறைக்கலாம்.

கடல் வழி போக்கு வரத்தை  சிறிய அளவில் தொடங்கலாம் .

சுற்றுலாத்துறையை மேம்படுத்த  கடலுக்குள்   அருங்காட்சியகம்  அமைக்கலாம். ஏனென்றால்  நான் சென்ற  வருடம் பத்தரிகையில் வந்ததாக ஒரு செய்தி கேள்வி பட்டேன்.  புதுவை கடலில்  அறிய வகை வெளிநாட்டில் வளரக்கூடிய மீன்கள்  தென்படுவதாகவும்    பருவ நிலை சூழ்நிலை இம்மாதிரி அறிய வகை மீன்களுக்கு புதுவை  கடல் சாதகமா க  இருக்கிறது என்ற செய்தியும் அறிந்தேன். .

சூரிய மின்சக்தி  பயன்பாடு  புதுவையின் அழகை பலமடங்கு ஒளியூட்டும் .

பார்கிங்  முறை படுத்தப்பட்டால்  புதுவை அழகாக காட்சியளிக்கும்.  சென்னை
போன்ற நகரங்களில்  உள்ள மால்களில்  ஒன்பது அடுக்கு மாடியில் சாய்தள  கார் பார்கிங் முறை உள்ளது  அதே போல்  புதுவையின் முக்கிய இடங்களை கண்டறிந்து  அதே போன்று  நாமும் கட்ட முயற்சிக்கலாம் .


ஆக்கிரமிப்புகளை  முறைபடுத்துதல் நகரின் அழகை மேலும் மெருகூட்டும்

புதுவை சிறிய மாநிலமாக இருப்பதால்  கடல் நீரை குடிநீராக்கும்  திட்டத்தை முயற்சிக்கலாம் .

இப்போது நான் சொல்லுவது சிரிப்பாக கூட இருக்கலாம். ஆனால் நடை முறை சாத்தியமே.   அதாவது முக்கிய  சாலைகளுக்கு  அல்லது நகருக்குள்  சைக்கிளில் மட்டுமே செல்ல வேண்டும் ,  இதன் மூலம் சைக்கிள் வாடகை கடை பெருகும் . வேலை vaaiப்பு அதிகரிக்கும்  பெட்ரோல் டீசல்  பயன்பாடு குறையும்  எல்லாவற்றிகும் மேலாக  உடல் ஆரோக்கியம் காக்கப்படும்.


இப்பெல்லாம்  சூப்பர் டூப்பர்  தல தளபதி எல்லாம் நம்மூர்ல  சண்டை போட்டுட்டு பாட்டு பாடிட்டு  போயிடறாங்க . சினிமா ஷூட்டிங்க தாங்க  சொல்றேன்.   அவங்க வேற இடத்துல  ஆடரதுக்கு  பதிலா  ஒரு திரைப்பட நகரை உருவாக்கி  அங்கே ஷூட்டிங்கை வச்சுக்கலாம் ,.  பிரெஞ்சு இந்தியா கலாச்சாரத்தை உள்ளடக்கிய வகையில்  திரைப்பட நகரை   உருவாக்கலாம்

பொது மக்களை  எல்லா  செயல்பாடுகலிலும்  தங்களை முழுமையாக  ஈடுபடுத்தி கொள்ளும் வகையில்  திட்டமிட்டால்  நிச்சயம் புதுவை ஒரு முன்மாதிரியாய் திகழும்.

அரசாங்கத்தையே எல்லாவற்றிகும் எதிர்பார்க்காமல்  நாமே  நம் பகுதியை அழகு படுத்தி கொள்ளலாம் .  புதுவை பிரதேசத்தில்  ஏராளமான குட்டிகுட்டி  நகர்கள் உதயமாகிறது. அவர்களுக்கென ஒரு சங்கமும் செயல் படுகிறது.
அவைகள் தங்கள் பங்களிப்பை  அளிக்கலாம்.

சமீபத்தில் நான் வியந்த செய்தி ஒன்று .  மீதமான உணவுகளை  ஒரு பொது இடத்தில் பிரிட்ஜில்  வைத்து விடுவார்களாம். அது தேவை படுபவர்கள் எடுத்து கொள்வார்களாம். ஒரு தனி மனிதன் செய்யும் இந்த செயலை குடியிருப்போர் நல சங்கங்கள் செய்ய முடியாதா.  இது உணவு பொருட்களுக்கு மட்டுமல்ல
முருந்து மாத்திரை  துணி மணிகள் போன்றவைகளுக்கும் பொருந்தும் .

தனி  ஒருவனுக்கு உணவில்லையெனில்  ஜகத்தினை அழித்திடுவோம்  என்ற ஆவேசத்தை குறைக்க  நம்மால் முடிந்த  சிறு முயற்சி தானே இது

அத்தியாவசிய  அரசு துறைகள்  இருபத்து நான்கு மணி நேரமும்   ஷிப்ட் முறையில்  இயங்க  வழி செய்ய வேண்டும் . இதன் மூலம் வேலை வாய்ப்பு பெருகும் .

தன்னார்வலர்களும்  பொது சேவை மனம் உள்ளவர்களும்  இணைந்து  எந்தெந்த வழியில்  சின்ன சின்ன  விழயங்களில்  கவனம் செலுத்தலாம்.
உதாரணமாக.    குழாய்  உடைத்து கொண்டு  தண்ணீர் வெளியேறும்போது  நாம் பார்த்து கொண்டே செல்கிறோம் . நிறைய பேருக்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லை. அரசியல் வாதிகள்  மேடை போட்டு பேசுகிறார்கள். இணையத்தில் இயலாமையை சிலர் பகிர்கிறார்கள். இம்மாதிரி  தருணங்களில்  யாரை தொடர்பு கொள்ள வேண்டும் என்று ஒவ்வொரு தெரு முனையிலும் விவரம் இருந்தால் நாம் சும்மா கடந்து செல்லாமல்  அந்த துறைக்கு தகவல் தெரிவித்து விடலாம். 


புதுவையில் சண்டே மார்கெட் மிக பிரபலம் . இதையே  பிரம்மாண்டமாக
நகரத்தின் வெளிபகுதிகளில் அ மைத்து   அரசே நிர்வகிக்கலாம், அல்லது தனியாரிடம் ஒப்படைக்கலாம் . புத்தகங்கள்  பழைய பொருட்கள்  மற்றும் அனைத்து பழைய பொருட்களும்  வாங்க விற்க ஒரு சந்தை அமைத்தால்  போக்கு வரத்து குறையும்  வியாபாரம் பெருகும்  வேலை  வாய்ப்பு .   அதிகரிக்கும்.. 

குழந்தைகள் குதூகலிக்கும் வகையில்  சின்ன சின்ன மிருக காட்சி சாலை அமைக்கலாம்.

எல்லாவற்றிக்கும் மேலாக இது நம் மாநிலம் இதன் வளர்ச்சியில் என் பங்கும் உண்டு என்று நினைத்து ஒவ்வொரு  குடிமகனும் நினைத்து செயல் பட்டால் .
சொர்கத்தின் சொர்கமாகவே புதுவையை மாற்றலாம். 

நல்லதொரு வாய்ப்புக்கு நன்றி பாராட்டி  இதற்கு  காரணாமான.   சான்றோர்களுக்கு வணக்கம் கூறி  விடை  பெறுகிறேன்..