பண்ணபுரத்தாரே என்ன இப்பிடி .பண்ணீட்டீங்க .
நேற்று மாலையில் இருந்தே இரவு இசைஞானி யின் எம் எஸ் வி அஞ்சலி நிகழ்ச்சியை காண ஆவலாய் இருந்தேன். நிகழ்ச்சியை முழுவதும் பார்த்தேன். ஆனால் ====??
முதலிலேயே சொல்லி விடுகிறேன் நான் இளையராஜாவின் வெறித்தனமான ரசிகன். அதற்காக எம் எஸ் வி பாடல் பிடிக்கவில்லை என்ற அர்த்தமில்லை.
எம் எஸ் வி பாடல்கள் என்னுடைய இளம்பருவத்தில் இரவின் மடியில் தேனாக காதில் பாய்ந்த காலங்கள் உண்டு. .
நேற்றைய நிகழ்ச்சியில் இளையராஜாவின் பேச்சு என்னை அவ்வளவாக
ரசிக்க செய்யவில்லை. என் பார்வையில் அந்த நிகழ்ச்சி அஞ்சலி நிகழ்ச்சி மாதிரி இல்லை.
எம் எஸ் வி பாடல்களில் அற்புதமாக பாடிய டி எம் எஸ் அவர்கள் பாடல் ஒன்று கூட பாடப்படாதது தற்செயலா அல்லது திட்டமிட்ட புறக்கனிப்பா .
ஒரு பாடலை குறிப்பிட்டு அது கே வி மகாதேவன் இசை அமைத்தது என்று
சொன்னார். அது அவசியமா அல்லது அந்த பாடலையே தவிர்த்திருக்கலாமே.
ஆஸ்தான இசை அமைப்பாளரை நீக்கி விட்டு எம் எஸ் வி யை ஒப்பந்தம் செய்த கேள்வியை கேட்டு அவர் வீட்டில் எம் எஸ் வி அறை வாங்கினார் . என்ற தகவல் நினவஞ்சலி யில் தேவையா. .
ஒரு பாடலை குறிப்பிட்டு விட்டு இம்மாதிரி பாடலை இன்றைய சூப்பர ஸ்டார்களுக்கு போட முடியாது என்ற சொன்ன ராஜா ,, ரஜினிக்கு
சஹானா சாரல் தூறுதே என்ற பாட ல் போடப்பட்டதை மறந்து விட்டாரா.
வீடு வரை உறவு , பேசுவது கிளியா ஒ ஒ மாம்பழத்து வண்டு போன்ற பாடல்கலை பற்றி குறிப்பிட்டது எப்படி எம் எஸ் வி க்கு அஞ்சலி என்று புரியவில்லை. ஒரு பாடலை குறிப்பிட்டு கவிஞர் தாமரை மனதில் வைத்து என்று எழுதியுள்ளாரே
அதில் கிளாரிட்டி இல்லை என்று ராஜா என்னமோ சொன்னார். அதற்கு இன்று காலை முகநூலில் கவிஞர் மகுடேஸ்வரன் என்பவர் விளக்கம் அளித்துள்ளதாக எனக்கு ஒரு பதி வு வந்தது. . அதன் விளக்கம் வருமாறு
நீரில் சூழ்ந்து இருந்தாலும் தா மரையோ அதன் இலைகளோ தண்ணீருடன் ஒட்டாது . அதை போன்று எனக்கு சுற்றங்கள் இருந்தாலும் என் மனது அவர்களுடன் ஓட்டாது . அதன் காரணமாக தாமரை மனதில் வைத்தேன் என்று எழுதியிருப்பதாக கவிகன்ர் மகுடேஸ்வரன் கூறியுள்ளார்.
இந்த கேள்வி அந்த நிகழ்ச்சியில் அவசியமே இல்லையே. .
இன்னொன்றையும் ராஜா குறிப்பிட்டார் . எம் எஸ் வியை வைத்து தொடர்ந்து
படம் எடுத்தவர் ஒருநாள் ராஜாவிடம் வர ராஜா அவரிடம் தான் ஒப்புக்கொள்ளமுடியாது என்று தெரிவித்தாக கூறினார். ஆனால் பின்னாளில் அவருக்கு சில பல படங்கள் பண்ணி இருக்கிறாரே என்ற எண்ணம் என் நினைவிற்கு வந்தது.
எல்லாவற்றையும் விட காமராஜர் ஆட்சியில் அரிசி பஞ்சம் வர comunist ஆன
பாவலர் சுப்ரமணியன் அரிசி வேண்டும் சுப்ரமணியம் அரிசி வேண்டும் என்று பாடினார்கலாம்.
பண்ணையாரே மன்னிக்கவும் , பன்னைபுரத்தாரே இவையெல்லாம் இந்த நிகழ்ச்சிக்கு தேவையா.
சரி அப்ப இருந்த அரிசி பஞ்ச காமராஜ் ஆட்சியும் பாவலர் சிந்தனைகளும்
இப்ப எப்படி இருக்கிறது . காமராஜ் ஆட்சியை விட சிறப்பாக இருக்கிறதா .தங்கள் பொது உடமை சித்தாந்தம் எந்த அளவில் உள்ளது.
நேற்றைய நிகழ்ச்சியை பற்றி இவ்வளவு உங்களை விமர்சித்தாலும் உங்கள் இசையில் எனக்கு தீராத காதல் உண்டு ..
இசை கேட்டால் புவி அசைந்தாடும் அது இறைவன் அருளாகும் . அந்த இசை ஆண்டவன் அருளால் உங்களிடம் அபரிதமாக இருக்கிறது எனவே தங்களின் வார்த்தைகளை விட தங்களின் இசை எங்களை தனி உலகத்திற்கு அழைத்து செல்கிறது என்று கூறி தொடரட்டும் உங்களது இசைப்யணம் என்று முடிக்கிறேன்.