Monday, September 23, 2019

 புதுச்சேரி வானொலி நிலையம்.....   காலங்கள் மாறி விட்டன  வானொலி கேட்பது குறைந்து விட்டது. இருப்பினும்  நான் இன்னும் வானொலியின் ரசிகன்தான்.

நினைத்து பார்க்கிரேன் . புதுவை கடற்கரை  சாலையில்  வானொலி நிலையம். அது ஒலி  பரப்பும் நேயர் விருப்பமும் பக்தி பாடல்களும்  மனதில் பசுமரத்து ஆணி போல் பதிந்துள்ளது.

காலையில் நம் மண்டையி அடித்து எழுப்பி விடும்  பக்கத்தின் பாடல்களில் சில....தட்டுங்கள் ர்    முக்காடு போட்டுக்க முஸ்லீம் பெண்னே      கந்தன்  திருநீறணிந்தால் கண்டா பிணி ஓடி விடும் ... மனசை விட்டு அகலா பாடல்கள். 

நேயர் விருப்பம்  மதியம் ஒரு மணி முதல் ஒன்று முப்பது வரை . வயிற்றுக்கும் செவிக்கும் உணவு / 

நிறைய பேருக்கு தெரியாது  காலையில் அரை மணி நேரம் ஹிந்தி வகுப்பு நடை பெரும் . புது வை தமிழ் அறிஞர்களின் ஒருவரும் பட்டிமன்ற  பேச்சாளருமான  திரு ராமசாமி அவர்கள் வகுப்பு  எடுப்பார். எனது சகோதரன் சீனுவாசன் ஒரு மாணவனாக அதில் பங்கேற்றான். 

அப்போது நிலையத்தில்  இருந்த ரேடியோ அண்ணா  சிதம்பரம்  திருமதி கங்கா  மணி  பாலு மற்றும் சிலர் எங்கள் குடும்ப நண்பர்கள். மேலும் நிலைய கலைஞர்கள்  திரு வைத்தியநாதன்  ஆணையம் பட்டி கணேசன் ஆகியோரும் பழக்க்கம். ஒரு கொசுறு செய்தி  திரு வைத்தியநாதன் அவர்களின் புதல்வர்கள் தான் பிக் பாஸ் மோகன் வைத்யா  வீணை இசை கலைஞர் ராஜேஷ் வைத்யா

புதுவை எல் ஐ சி கிளையில்  அப்போது கதிரவன் என்று ஒருவர் இருந்தார். இலக்கியத்தில் மிகுந்த ஆர்வம் ம்கொண்டவர். அவர் புதுவை வானொலிக்கு ஒரு நாடகம் எழுதி அது ஒளிபரப்பாகியது. அவர் என்னையும் ஊக்கப்படுத்தி ஒரு நாடகம் எழுக சொன்னார். நானும் எழுதினேன். என்னால் கூட அதை நாடகம் என்று ஏற்க மனமில்லை. இன்னும் அது அப்படியே இருக்கிறது.  இன்னொரு கொசுறு செய்தி  அந்த கதிரவன் சார் வைரமுத்து திரைக்கு வருவதற்கு முன் என்னை அவரிடம் அறிமுக படுத்தி வைத்தார்.. 

இப்போதுகூட  நான் பணியாற்றியபோது உடன் பனி புரிந்த திருமதி ஸ்ரீ ப்ரியா கணவரும் வானொலியில் பனி புரிகிறார்.  மற்றொரு இடது சாரி சிந்தையாளர் ராம் ம்குமார் கூட அங்கு பனி புரிகிறார்ட்.    என்னுடைய புதுச்சேரி  வானொலி நிலையத்தின் தொடர்பு நீடித்து கொண்டிருக்கிறது.  வாழ்க புதுச்சேரி வானொலி நிலையம்  .. 


    . 

Sunday, September 22, 2019

ஒருமுறை  எனது காரில் சென்னை  சென்று திரும்பி வந்து கொண்டிருந்தோம். ஒரு கேசட் போட்டு பாட்டு கேட்டுக்கொண்டே வந்தோம்.  . ஏன்  தெரியவில்லை டிரைவர் கடுப்படித்து கொன்டே வந்தார்/ பொறுத்து பொறுத்து பாத்தேன்  பின் அவரிடம் என்ன உங்களுக்கு பிரச்சனை  என்று கேட்டதும்  பின்ன என்ன சார்  இந்த பாட்டெல்லாம் போட்ட  நான் எப்படி வண்டி  ஓட்றது , ஒரே தூக்கமா வருது என்றா. நான் பாட்டை நிறுத்தி விட்டேன்

அந்த பாடல்கள்      காலங்களில் அவள் வசந்தம் ,  நிலவே என்னிடம் நெருங்காதே   பாடாத பாட்டெல்லாம் பாட வந்த ஆள் . பிறகு அவரே என்னிடம் சார்கோ ச்சிக்காதீங்க  எனக்கு பீ பீ சீனிவாஸ் பாட்டுன்னா உசுரு சார்  ஆனா வண்டி ஓட்டும் போது  அர்த்தமில்லாதம் லாப திபோன்னு கத்துற பாட்டுதான் சார் எங்களுக்கு தூக்கம் வராது இருக்கும் என்றா. இது எப்படி இருக்கு. 

 பீபி  சீ னுவாஸ் பாடல்களை  ரசிக்கும்போது  கிருஷ்ணா ஸ்வீட்ஸ்   மைசூர் பா  சாப்பிடும்போது  நாக்குல கரையுமே  அந்த மாதிரி  காதுல கரையும் . உண்மைதானே ..
மண்டை கொழம்புது  மகாதேவா ..

நீண்ட நாள் கழித்து என் நண்பன் ஒருவனை சந்தித்தேன். இருவருமே திரை இசையில் ஆர்வம் உள்ளவர்க. பேச்சு இசையை பறி வரும்போது  என்னமோ எனக்கு இளையராஜாவை ரொம்ப பிடிக்கும்  காரணம் அவர் பாடலில் நம் மண் சார்ந்த இசை இருக்கும் என்று சொன்னேன்.. பின் எங்கள் உரையாடல் வேறு தளத்திற்கு சென்றது . பிறகு நண்பன் உனக்கு பிடித்த அடிக்கடி முணுமுணுக்கும் பாடல்கள் சில யோசிக்காமல் சொல் என்றான்.  நான் சொல்ல ஆரம்பித்தேன்   . 
முதல் பாடல்  உன்னிடம் மயங்குகிறான் உள்ளத்தால் நெருங்குகிறான் என்ற பாடல் அதன் ஆர்ப்பாட்டமில்லாத இசையினால் பிடிக்கும். ஏழு சுவரங்களுக்குள் எத்தனை பாடல்  என்ற இனிமையான குரலுக்காகவும் கருத்துக்காகவும் பிடிக்கு.ம்       அடுத்து  கங்கை நதி ஓரம் ராமன்  நடந்தான்  என்ற பாடலும்  வைகை காற்றே நில்லு என்ற பாடலும் இனிமைக்காக பிடிக்கும்.  யார் அந்த நிலவு பாடல் சிவாஜி ஸ்டைலுக்காக பிடிக்கும்  இவையெல்லாம் தனிமையில் எப்போதாவது என்னையும் மீறி முணுமுணுக்கும் பாடல்கள் என்று சொல்ல  நண்பன் இடைமறித்து  இதில் இளையராஜா இசை அமைத்த பாடல் எது என்று கேட்க திரு திரு  என்று முழித்தான். எம் எஸ் வீ  கே வீ  மஹாதேவன்  இளையராஜா   போன்ற இசை மேதகைகளின் பாடல்கள் எனக்கு ரொம்பவே பிடிக்கும். ஆனால் இளைய ராஜாவின் இசை என்னை வேறு உலகிற்கு கொண்டு செல்லும் ,

அதை நண்பன் மறுத்து  எல்லோருடைய இசையும் சிறந்ததுதான் சில பாடல்கள் நம் உணர்வுடன் கலந்து விடுகின்றன . இதே மாதிரி நீ வேறு சிலரிடமும் கேட்டு பார். இப்படித்தான் இருக்கும் என்றான்.  நண்பன் சொன்னது சரியா.

எனக்கு மண்டை கொழம்புது.  உ ங்களுக்கு இது பற்றி கருத்திருந்தால் பதிவிடுங்கள்  .  

Sunday, September 1, 2019

கடிதம் எழுதும் தினம்.

ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் முதல் தேதி  கடிதம் எழுதும் தினமாக கொண்டாடப்படுகிறது. இன்றைய கால கட்டத்தில் கடிதம் எழுதுவது என்பது ஏறக்குறைய மறந்தே போன விழயம்.   நேரு தன மகளுக்கு எழுதிய கடிதம் பிரசித்து பெற்றது. கலைஞர் உடன் பிறப்பிற்கு எழுதும் கடிததிற்கு பெரும் வாசக வட்ட மே உண்டு. 

சுமார் நாற்பது ஐம்பது வருடங்களுக்கு முன்  கடிதம் தான் முக்கிய தொடர்பு சாதனம்.  அப்போது வரும் கடிதங்களில் தங்கள் குடும்ப சரித்திரம் மட்டுமல்லாமல் பக்கத்துக்கு வீடு பக்கத்துக்கு தெருவில் உள்ளவர்களின் நலன்விசாரிப்புகள், வீட்டில் வளர்க்கு செல்ல பிராணிகளின் நிலை , அந்தநதன்ஊர் வெதர் ரிப்போர்ட் போன்றவை கட்டாயம் இடம் பெரும். 

எங்கள் வீட்டில் தபால் கார்டுகளை ஒரு கம்பியில் சொருகி வைத்திருப்போம். அந்த வருடத்தில் வந்த அத்தனை கடிதங்களும்  அதில் சொருகி இருக்கும். வருடத்திற்கு ஒரு முறை விஜயம் செய்யும் ஒரு உறவினர்  ஓய்வாக அமர்ந்து அத்தனை கடித்தங்களை படித்து ஒரு வருட விழயங்களை தெரிந்து கொள்வார்.  

தொழில்  நுட்பம் வந்தாலும்  கையால் எழுதப்படும் அந்த கடிதம்  நம் உணர்வுகளை அப்படியே  எதிரொலிக்கும். 

எதனை வாட்ஸ் அப்  எஸ் எம் எஸ்  செய்திகளில்  நேசத்திற்கு உரியவரின் செய்தி வந்தாலும் அன்று ஒரு கடிதம் கையால் எழுதி வரும்போது அதை ஓராயிரம் முறை படித்து பார்த்து மகிழ்வு அடைவது போல் இருக்காது. .  

நானும்  அலுவலக நண்பர் ஒருவரும் இனிமேல் நாமும் கடிதம் எழுதலாம் என்று சில வருடங்களுக்கு முன் ஒரு முயற்சி எடுத்தோம். அது  இன்றைய கால கட்டத்தில் வெளியாகும் புதிய திரைப்படம் போல  ஆரம்பித்த சுவடே தெரியாமல்  மறைந்து விட்டது.  .  

இப்போதெல்லாம் எழுதும் வேலை குறைந்து விட்டதால்  நம் கையெழுத்தே மறந்து விட்டது.  அதற்காகவாவது வாரம் ஒரு முறை கடிதம் எழுதி பழக்கத்தை தொடங்குவோம்.