Monday, December 22, 2014

kakkanji

இவர் யாரென்று தெரிகிறதா===

சத்தியமூர்த்தி  காமராசரை அரவணைத்து கொண்டது போல்  மதுரை வைத்திநாத ஐயர்  இவரை அரவணைத்தார்..

தோழர் ஜீவாவின் தலைமையில்  திருமணம் செய்து கொண்டவர்.

காமராசரின் காலத்தில் உள்துறை, பொதுபணித்துறை, விவசாயம் , மது விலக்கு  அரிசன நலம் போன்ற முக்கிய அமைச்சர் பதவிகளை வகித்தவர்.
(இவருக்கு பிறகு  திராவிட கழக ஆட்சியில்  ஒரு தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்தவருக்கு  இவ்வளவு முக்கியமான துறைகள் கொடுக்கப்பட்டது இல்லை. )

சுமார் பத்தாண்டு காலம் தொடர்ந்து பதவிகளில் இருந்தாலும் சொந்த வீடில்லாதவர்.

நோயுற்றபோது அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றவர். ( இவரின் நிலை கண்டு  பதறிய  மக்கள் திலகம் வேண்டிய உதவிகளை செய்ததாக செய்தி-- ஆனால் கக்கன் அதை உறுதியாக மறுத்து  மக்கள் திலகத்திற்கு நன்றி செலுத்தினார்.                                                                                                                                        

பொது வாழ்வில் நேர்மையின் இலக்கணமாய் வாழ்ந்தவர். -- திரு கக்கன். அவர்கள்.

ஐயா என் போன்றவர்களால் உங்களை மறக்க முடியுமா.  நீங்கள் பயணித்த பாதையில்  ஒரு சில அடிகளாவது  நாங்களும் பயணிக்க  ஆசி கூறுங்கள்.  





Tuesday, December 2, 2014

baalya ninaivugal

சற்றே பின்னோக்கி ---

வளரும் பருவத்தில்  விளையாட்டும் நம்முடன் சேர்ந்து தானே வளர்ந்தது.
எத்தனை எத் தனை விளையாட்டுகள்  .கிட்டிபுல் , கோலிகுண்டு, ஆபியம் மணி ஆபியம் என்று சொல்லி பச்சை குதிரை தாண்டுவது  பேய்பந்து என்று பந்தால் ஒருவரை ஒருவர் அடித்து கொள்வது  என்று இன்னும் சொல்லிகொண்டே போகலாம்.  இதெல்ல்லாம் இப்ப எதற்கு என்கிறீர்களா?  விஷயம் இருக்கு.

இரண்டுநாட்களுக்கு முன் ஒரு நண்பரை  சந்தித்து பேசிகொண்டிருந்தேன்..பேச்சு பழங்கால இலக்கியம் பற்றியும்  அந்தகால விளையாட்டுகள் எப்படி  வாழ்வுடன்  இணைந்திருந்தது  என்பது பற்றியும் இருந்தது. அப்போது நண்பர்  ஒரு இதழில் தான் படித்த செய்தியை என்னுடன் பகிர்ந்து கொண்டார்.

நாமெல்லாம் சிறு வயதில்  மேலே கொக்கு பறக்கும்போது  அனைவரும் அண்ணாந்து பார்த்து இரண்டு கை விரல்களையும்  ஒன்றின் மீது ஒன்றை  தேய்த்து   கொக்கே கொக்கே பூ போடு  என்று விளையாடியது ஞாபகம் இருக்கிறதா . அந்த விளையாட்டை பற்றிதான்  இந்த பதிவு.

மடையான் மடையான் பூபோடு    மடிக்கு இரண்டு பூபோடு  .என்பதுதான் பாடல்.
மடையான் என்பது  கொக்கு போன்ற ஒரு பறவை. அது கார்திகை  மாதத்தில்
இடம் பெயர்ந்து  தமிழக பகுதி குறிப்பாக  காவிரி டெல்டா  பகுதிக்கு இரை  தேட  வயல் பகுதிக்கு வரும்.

அப்போது வானத்தில் மடையான்கள் பறக்கும் போது  சிறுவர்கள்  மடையான் மடையான் பூப்போடு   மடிக்கு இரண்டு பூபோடு  என்று சொல்லி நகத்தை உரசிக்கொல்வார்கள்.    இதில் மடி  என்பது  மடையான் பறவையின் எச்சம் .
மடையான் பறவையின் எச்சம் வயல்களுக்கு மிக சிறந்த உரம் . எனவேதான்
மடையன்கள் கூட்டம் கூட் டமாக  பறக்கும்போது  எங்களது வயல்களுக்கு அதிக உரம் போடு என்பதாக அந்த விளையாட்டு இருக்கும். சிறுவர்கள் கூட்டமாக   கூச்சல் இடும்போது  பறவைகள் அச்சத்தினால் எச்சம் அதிகம் இடும் என்பது எதிர்பார்ப்பு.

இந்த . விளையாட்டில் இப்படி ஒரு பொருளா என் நான் வியந்தேன். 

Wednesday, November 26, 2014

தோழர்  80 சதவிகிதம்  உண்மை. ஒரு ஆலிவூட்  இயக்குனர் , அடுத்தவர்  கனவுகளையும் திருடலாம்   என்ற  கருவை வைத்து  ஒரு திரைப்படம் தயாரித்தார் . அது சாத்தியமா இல்லையா என்று  தெரியாது.  ஆனால் உங்களுக்கு அந்த ரசவதாம் நன்றாகவே  வந்திருக்கிறது. பதவிக்கு மரியாதை.  தங்களின் கதை படிக்கும்போதே  காட்சியாக விரிகிறது. இயல்பான நடை.நன்று .

நிற்க ,  இந்த கதையை உங்கள் அனுமதியுடன்  என் நோக்கில் முடிக்க  ஒரு முயற்சி  இதோ.   "  நடைபயிற்சி  முடித்து  வீடு திரும்பும் போது வாசலில்   
அலுவலக நண்பர், என்னைபார்த்து   இந்தா  ரொம்ப நாளா  நீ கேட்ட  புத்தகம்           THE RISE AND FALL OF  THE THIRD REICH  என்னிடம் ஒரு புத்தகத்தை கொடுத்தார்.  உள்ள வாங்க ஒரு காப்பி  குடிச்சுட்டு போலாம்னு சொன்னேன். அதுக்கு  நேரமில்லை  உடனே போகணும்னு சொல்லிட்டு என் பதிலுக்கு கூட காத்திராமல்  சென்று விட்டார்.  உள்ளே நுழைந்ததும்   தொலைபேசி   அலற , அதில்  சிலவருடங்களுக்கு முன்னே பணியில்  சேர்ந்த ஒரு நண்பர்  சார்  நல்ல இருக்கீங்களா  என்று கேட் டு விட்டு, வருகிற 23  ஆம் தேதி  பல்கலை அரங்கில்  உலக தமிழர்  இணைய   மாநாடு  சார், எல்லாபகுதியில் இருந் தும் கணித அறிஞர்கள் கலந்டுகிறாங்க . பயன் உள்ளதா இருக்கும்  சார் ரெண்டு   பேரும் போவம்  சொல்லிட்டு தொலைபேசியை  வைத்து விட்டார்..   நான் தொடர்ந்து வீட்டில்  செய்ய வேண்டிய வேலைகளை  தொடர்ந்தேன்.  மீண்டும்  அழைப்பு மணி  என் கைபேசியிலிருந்து.  அலுவலக  சகோதரி  ஒருவர்   வழக்கம் போல் சினிமா சம்பத்தப்பட்ட  சந்தேகம் . சார்,   மாதமோ ஆவணி  மங்கையோ மாங்கனி  என்ற பாடலில் வரும் ஹம்மிங் குரல் SPB  தானே.  இல்லம்மா  நினைப்பது  நிறைவேறும்  நீயிருந்தால் என்னோடு  என்ற பாட லை பாடிய   m.l. ஸ்ரீகாந்த்  குரல்மா   என்று  சொல்லி  பரஸ்பர விசாரிப்புகளுக்கு பின்  உரையாடல் முடிவிற்கு வந்தது.  அதன் பின் அலுவலகம் எதிரில் உள்ள  தேநீர் கடையின் பையன் பள்ளியில் தான் பெற்ற பரிசுகளை  என்னி டம் காட்ட  நேரில் வந்தது , இன்னும் பலர்   வந்தது  எனக்கு மிகவும்  மகிழ்வை தந்தது.  சென்ற வருடம் நான் என் மனைவியை பார்த்த பார்வையில் இருந்து முற்றிலும் வேறுபட்ட பார்வை  இன்று நான் பார்ப்பது. காரணம் ஒப்பனை  இல்லா  நட்புகள், எந்த வித எதிர்பார்புமிண்றி  என் பலகீனங்களை அப்படியே ஏற்றுகொண்ட  நட்புகள்  எதுவென்று எனக்கு குட்டு வைத்து புரியவை ய்த்த சென்ற  ஆண்டு பிறந்த நாளை  வாழ்த்துகிறேன். 

Tuesday, November 11, 2014

மழைகால மேகம் ஒன்று

காலங்கள் மாறும்போது....

இதோ மழை சீராக பெய்து கொண்டிருக்கறது. என் பள்ளி நாட்களின் நினைவிற்கு செல்கிறேன் .

வாகன வசதிகள் இல்லாத காலம் . உள்ளூர் செய்திகள் வராத பத்திரிகைகள்.
தொலைக்காட்சி, கைபேசி , இணையம் சாத்தியம் இல்லாத காலம்.
மழை காலம் தொடங்கும்போது  மேக  மூட்டம் வருகிறதா என்று .   மாணவர்கள் வானத்தை பார்த்தபடியே பள்ளி செல்வோம்.

மேகத்தை கண்டு  விட்டால்  பாதி  கிணறு தாண்டிய சந்தோசம். பாதி கிணறு தாண்டியதால் என்ன சந்தோசம் என்று கேட்காதீர்கள் . அன்று எங்களுக்கு அது அப்படித்தான்.  பள்ளி சென்றதும், வகுப்பு தொடங்கியதிலிருந்து  வகுப்பின் வாசலையே பார்த்து கொண்டிருப்போம்.  நேரம் எங்களது பொறுமையை சோதிக்கும் . அவர் வருவாரா  மாட்டாரா என்று  காசை சுண்டி பாப்போம். இரு விரலை ஒன்றை  தொடு என்று ஜோசியம் பாப்போம்.  காக்கா  ஏதாவது  கத்துகிறதா என்று பாப்போம். நாலைந்து காகா கத்தும் . பாவம் அது மழைலே நனைஞ்சி குளிரால் கத்தும் . ஆனாலும் காக்கைகளை கரித்து கொட்டுவோம். காக்கை கத்தினால் யாரவது  வருவார்கள் என்ற நம்பிக்கை ஊட்டப்பட்டு வளர்ந்தவர்கள்  நாங்கள். ஊஊம்  அவர் வரமாட்டார் .

நாங்கள் சோர்ந்து பாடத்தை கவனிக்க தொடங்கும் பொது , திடீரென்று பிரசன்னமாவார்.  உடனே எங்கள் ஒட்டு மொத்த பார்வையும்  அவரின் கையை நோக்கி பயணிக்கும். ஏதாவது பேப்பர்  வைத்திருக்கிறாரா என்று.
அவர்  ஆசிரியரை நோக்கி  சீராகத்தான் செல்வார். எங்களுக்கு அவர் மெதுவாக போவது போலவே தோன்றும்.  அவர் தன கையிலுள்ள பேப்பரை ஆசிரியரிடம்  கொடுத்து கையொப்பம் பெற்றுக்கொண்டு போய்விடுவார்.

இந்நேரம் அவர் யார் என்று நீங்கள் யூகித்திருந்தால்  உங்களுக்கு நீங்களே சபாஷ் போட்டு கொள்ளுங்கள்.    ஆம் பள்ளியின் கடை நிலை ஊழியர்தான் அவர். அவர் கையில் எடுத்து வந்தது ஒரு சுற்றறிக்கை . அன்றைய நிலையில் சுற்றறிக்கை என்றாலே  பள்ளி விடுமுறை பற்றிதான் . இப்போது புரிந்ததா எங்களின் தவிப்புகள் . எங்கள் ஆசிரியர்கள் ஒரு சாடிஸ்ட் {சாடிஸ்ட் என்ற வார்த்தைக்கு உடனடியாக தமிழ் அர்த்தம் தெரிய வில்லை} சுற்றறிக்கையை உடனே படிக்க மாட்டார். தண்ணி குடிப்பார். பக்கத்துக்கு வகுப்புல  கோமதி டீச்சர் வந்துட்டங்களானு பாத்துட்டு வா  என்று யாரையாவது அனுப்புவர். அவரால்  அந்த   சுற்றறிக்கையை  எவ்வளவு தாமதபடுத்தி  படிக்க முடியுமோ அவ்வளவு தாமதப் படுத்துவார். அதில் இ ன்றும் நாளையும் பள்ளி வ்டுமுறை
என்று இருக்கும். ஆனாலும் மறக்காமல்  டேய் பசங்களா  மதிய உணவை வாங்கிட்டு போயடுங்கடா . வீணா  போய்டும்  எல்லாரும் நிறையா வாங்கிகிட்டு  வழிலே யாராவது சாப்பாடு  இல்லாம  இருந்தாங்கன்னா  அவங்களுக்கு கொடுங்கடா என்றும் சொல்லுவார். காய் கறிகளை திருடுவதோ  பொய் கணக்கு காண்பிப்பதோ அப்போது அறவே இல்லை.

எதுக்கு இவ்வளவு பீடிகை ??  ஒன்னும் இல்லீங்க  இப்ப  எப்படி இருக்குன்னு நெனைச்சேன்.   பசங்க  அப்பா டிவில  ரமணன் அங்கிள் என்ன சொல்றார்னு
பாருங்க . ஐயோ அவரு லோக்கல்  டிவில  வரமாட்டாரு  என்  ஒரு குரல் கத்த
தொலைக்காட்சி உள்ளூர்  ஒளிபரப்பிற்கு தாவ  பள்ளிகளுக்கு விடுமுறை  என்று செய்தி ஓடும். உடனே  கல்லூரிகளுக்கு  என்னாச்சி என்று  மறுபடியும் தொலைகாட்சிக்கு கண்கள் தாவ  குழப்பமோ குழப்பம். ஏன்னா  பள்ளிகல்விக்கு  ஒரு இயக்குனர். கல்லூரி  கல்விக்கு ஒரு இயக்குனர்  .

ஆனா பசங்க ரொம்ப தெளிவுங்க .  ரமண சொல்றதை  கேட்டுடாங்க  இவங்களே  முடிவு பண்ணிடுவாங்க. விஜய் டிவில சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியிலே  பாடகர்களை தயார்படுத்தி உடுவாரே   தாடி வச்சிக்கிட்டு  பேர்கூட ஆனந்த்துவோ என்னவோ அவருக்கு இருக்கிற  job security மாதிரி  ரமணன் சார்  வாக்கு அவ்வளவு  உத்தரவாதம். .

ஒரு வாரமாக ரமணண் சாரை காணவில்லையாம் . ரஜினி படம் ரிலீசாகாத  ரசிகன் மாதிரி பசங்க நொந்து  போய்ட்டாங்க .  இப்ப மறுபடியும் வந்துட்டாராமே .

அன்றும் இன்றும் என்றும் மற்றவர்களுக்கு எப்படியோ  பசங்களுக்கு மழை என்றாலே குதூகலம்தான்.




Wednesday, October 29, 2014

kavignar vaali

நண்பர்கள் சிலர் இன்று கவிஞர் வாலியை பற்றி பதிவு செய்திருந்தார்கள். இன்று அவருடைய பிறந்த  நாளாம்.                                                                                  எனக்கு என்ன்னவோ பாடலாசிரியர்களில்  என்னை மிகவும் கவர்ந்தவர் கண்ணதாசன்தான்.  ஆனாலும் வாலியின்  சில பாடல்களில்  என்னை இழந்து இருக்கிறேன்.. பாடலை கேட்கும்போது  கண்ணீர் விட்டிருக்கிறேன்.  அதில் சில பாடல்கள். 

1.         அம்மா என்றைழைக்கத உயிரில்லையே  என்ற பாடலில் வரும் 
             வரிகள்.      ஈரேழு ஜென்மங்கள் எடுத்தாலும் உழைத்தாலும் -- உனக்கிங்கு நான் பட்ட கடன் தீருமா -- இந்த வரி வரும்போது என்னை அறியாமலே கண்களில் நீர் கசியும்.  இந்த வயதிலும் கூட  எண்பத்தி  ஆறு வயதான என் அம்மா  அறுபத்தி இரண்டு வயதான என்னை  நீ சின்ன பையன்டா  ஒனக்கு ஒன்னும் தெரியாது , வேளா  வேளை க்கு சாப்பிடு  அப்படின்னு சொல்லும்போது வாலியின் இந்த பாடல் வரிகள்தான் ஞாபகம் வரும்.   இந்த பாடலின் வரிகளை ஒரு கோவில் சுவற்றில் கூட எழுதி வைத்தி ருப்பதாக  என் நன்ப ர்கள் சொல்ல கேட்டிருக்கிறேன். 


2.           இந்திய நாடு என்வீடு  என்ற பாடலில்    வருவதை பகிர்ந்து உண்போம்  வந்தே மாதரம் என்போம்  என்ற வரிகள் வரும்போது  என்னை அறியாமலேயே  என் கரங்கள் உணர்ச்சி மேலீட்டால்  நடுங்க தொடங்கும். 


3.            இதோ எந்தன் தெய்வம் முன்னாலே  என்ற பாடலில் == பல நூல் படித்து நீ அறியும் கல்வி - பொது நலம் நினைத்து நீ வழங்கும் செல்வம்  பிறர் உயர்வினிலே உனக்கிருக்கும் இன்பம்  இவை அனைத்திலுமே இருப்பதுதான் தெய்வம்  என்ற வரிகள் வரும்போது  சிந்தை  சிலிர்கிறது.

4.             கண்ணன் ஒரு கைக்குழந்தை   கண்கள் சொல்லும் பூங் கவிதை  .-
நிச்சயம் கேட்டிப்பீர்கள் இந்த பாடலை .  இளைய ராஜாவின் இதயத்தை வருடும் இசையில்  வாலியின் வரிகள்  இனிமையான தாம்பத்தியத்தை அழுத்தமாக எடுத்துரைக்கும்  .  ஏழ் பிறப்பும் இணைத்திருக்கும் சொந்தம் இந்த சொந்தம் அம்மா==  வாழ்விருக்கும் நாள் வரைக்கும் தஞ்சம் உந்தன் நெஞ்சம் அம்மா  --அன்ன மேவும் கைகளிலே ஆடி வரும் பிள்ளை இது == உன்னருகில் நான் இருந்தால் ஆனந்தத்தின் எல்லை அது.  அற்புதமான வரிகள்.  

5.                                                                                                                                                        ஆனந் த துள்ளலுக்கு  முக்காலா  முகாபுலா  லைலா 

 கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உன்னை  மறவேன் -பக்திக்கு. 

நானும் வாலியை நினவு கூறுகிறேன். 



.            

Tuesday, October 21, 2014

thanneer thanneer

  .  . 
  தண்ணீர தண்ணீர் .

இணையத்தில்  சமீ பத்தில் இரண்டு பதிவுகள்  என்னை சற்றே யோசிக்க வைத்தது. அட இப்படி கூட இருக்குமா , இருக்கும்   என்ற கருத்தை வலிமையாக பதிவு  செய்திருந்தது அந்த பதிவுகள் .

        1, எங்கள் வேலூர்  கோ ட்ட சங்கத்தின்  பொது செயலாளர்  தோழர்  ராமன் எழுதிய   பொலிவியா நாட்டின் அதிபர்   " இவா மொரசல்ஸ், " , அவர்களை பற்றியும்  அன்றைய ஆட்சியாளர்கள்  கோசாம்ப நதியை   பெக் டெல் கம்பனிக்கு  விற்றது பற்றியது. .

         ௨. முக நூல் நண்பர்  முத்துக்குமார் அம்பா சமுத்திரம்  அவர்கள் பதிவிட்ட  மறை நீர் (virtual water) மேலாண்மை .

இரண்டு பதிவுகலிலும் உள்ள விழயங்கள்  நான் இதுவரை கேள்விபடாதது. அநேகமாக நம்மில் பெரும்பாலானோருக்கு  தெரியாது என்று எண்ணுகிறேன்.

முதலில் தோழர் ராமன் எழுதிய பதிவின்  சாராம்சம். சுருக்கமாக.

பொலிவியா நாட்டின் அன்றைய ஆட்சியாளர்கள்  கோசம்ப என்னும் நதியை
பெக் டெல் என்ற கம்பெனிக்கு விற்று விட்டார்கள் . அந்த நதிகள் பல்வேறு தேவைகளுக்கு மக்கள் பயன்படுத்தி வந்தனர் . அந்த நதியை வாங்கியவர்கள் அதை யாரும் பயன் படுத்த தடைபோட்டனர். வெகுண்டு எழுந்த  இவா மொரசெல்ஸ்  அதை எதிர்த்து போராடி வெற்றி பெற்று அந்த நாட்டின் அதிபராக ஆனார். .


இப்போது நண்பர் முத்துக்குமார் அம்பாசமுத்திரம் எழுதிய பதிவு    


இந்தியா அறியாத மறை நீர் (Virtual water)மேலாண்மை .இந்திய மக்கள் எதிர் நோக்கியுள்ள ஆபத்தான சவால்.!
பாட்டிலில் அடைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட ஒரு லிட்டர் குடிநீரின் சராசரி விலை ரூ.20. தமிழகத்தில் சுத்திகரிக்கப்பட்ட அம்மா மலிவு விலை குடிநீரின் விலை ரூ.10. இது நமக்கு தெரியும். ஆனால், எத்தனைப் பேருக்கு மறை நீர் (Virtual water) விலை தெரியும்?
மறை நீர் என்பது ஒருவகை பொருளாதாரம். மொத்த உள்நாட்டு உற்பத்தியை (Gross domestic product) ஒரு நாட்டின் பணத்தைக் கொண்டு மதிப்பிடுவதுபோல ஒரு நாட்டின் நீர் வளத்தை கொண்டு மதிப்பிடும் தண்ணீர் பொருளாதாரம் இது. இதை கண்டுபிடித்தவர் இங்கிலாந்தை சேர்ந்த பொருளாதார வல்லுநர் ஜான் ஆண்டனி ஆலன். இந்த கண்டுபிடிப்புக்காக ‘ஸ்டாக்ஹோம் வாட்டர் -2008’ விருது பெற்றவர்.
ஒரு பொருளுக்குள் மறைந்திருக்கும் கண்ணுக்கு தெரியாத நீர் - இதுவே மறை நீர். இது ஒரு தத்துவம், பொருளாதாரம். ஒரு மெட்ரிக் டன் கோதுமை 1,600 கியூபிக் மீட்டர் தண்ணீருக்கு சமம் என்கிறது மறைநீர் தத்துவம். மறை நீர் என்பதற்கு ஆலன் தரும் விளக்கம், “கோதுமை தானியத்தை விளைவிக்க நீர் தேவை. ஆனால், அது விளைந்தவுடன் அதை உருவாக்கப் பயன்பட்ட நீர் அதில் இல்லை. ஆனால், அந்த நீர், கோதுமை தானியங்களுக்காகத்தானே செலவிடப்பட்டிருக்கிறது அல்லது மறைந்திருக்கிறது. இதுவே மறை நீர். கோதுமை தேவை அதிகம் இருக்கும் ஒரு நாடு, ஒரு மெட்ரிக் டன் கோதுமையை இறக்குமதி செய்யும்போது, அந்த நாடு 1,600 கியூபிக் மீட்டர் அளவுக்குத் தனது நாட்டின் நீரைச் சேமித்துக்கொள்கிறது'' என்கிறார் ஆலன்.
புத்திசாலி நாடுகள்!
நீரின் தேவையையும் பொருளின் தேவையையும் துல்லியமாக ஆய்வுசெய்து அதற்கு ஏற்ப உற்பத்தி, ஏற்றுமதி, இறக்குமதி கொள்கைகளை வகுக்க வேண்டும். சீனா, இஸ்ரேல் மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் அப்படித்தான் செய்கின்றன. சீனாவின் பிரதான உணவு பன்றி இறைச்சி. ஒரு கிலோ பன்றி இறைச்சி உற்பத்திக்கான மறை நீர் தேவை 5,988 லிட்டர். அதனால், சீனாவில் பன்றி உற்பத்திக்கு கெடுபிடி அதிகம். ஆனால், தாராளமாக இறக்குமதி செய்துகொள்ளலாம். ஒரு கிலோ ஆரஞ்சுக்கான மறை நீர் தேவை 560 லிட்டர். சொட்டு நீர் பாசனத்தில் கோலோச்சும் இஸ்ரேலில் ஆரஞ்சு உற்பத்தி மற்றும் ஏற்றுமதிக்கு கெடுபிடிகள் அதிகம். இவ்விரு நாடுகளும் ஒவ்வொரு பொருளுக்குமான மறை நீர் தேவையைத் துல்லியமாகக் கணக்கிட்டு அதன்படி ஏற்றுமதி, இறக்குமதி கொள்கைகளை வகுத்துள்ளன.
இது இந்திய நிலவரம்!
முட்டை உற்பத்தியில் இந்தியாவில் முதலிடம் வகிக்கிறது மகாராஷ்டிரம். நாமக்கல்லுக்கு இரண்டாவது இடம். நாமக்கல்லில் ஒரு நாளைக்கு மூன்று கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அதில் 70 லட்சம் முட்டைகள் தினசரி வளைகுடா நாடுகள், ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பா நாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன. இதன் மூலம் ஆண்டுக்கு 4.80 கோடி டாலர்கள் அன்னிய செலவாணி கிடைக்கிறது.
மூன்று ரூபாய் முட்டைக்கு 196 லிட்டர் மறை நீர்
வளைகுடா மற்றும் ஆப்பிரிக்க நாடுகள் தண்ணீர் பற்றாக்குறை கொண்டவை. ஐரோப்பிய நாடுகள் மறைநீர் தத்துவத்தைப் பின்பற்றுபவை என்பதை இங்கு கவனிக்க வேண்டும். சரி, சராசரியாக 60 கிராம் கொண்ட ஒரு முட்டையை உற்பத்தி செய்ய 196 லிட்டர் மறை நீர் தேவை. மூன்று ரூபாய் முட்டை 196 லிட்டர் தண்ணீரின் குறைந்தபட்ச விலைக்குச் சமம் என்பது எந்த ஊர் நியாயம்?முட்டையினுள் இருக்கும் ஒரு கிராம் புரோட்டீனுக்கு 29 லிட்டர் மறை நீர் தேவை. ஒரு கிலோ பிராய்லர் கோழிக் கறி உற்பத்திக்கான மறை நீர் தேவை 4325 லிட்டர்.
சென்னை கதைக்கு வருவோம். பன்னாட்டு நிறுவனங்கள் இங்கு ஆண்டுக்கு லட்சக்கணக்கான கார்களைத் தயாரித்து அவர்கள் நாடு உட்பட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றன. ஏன்? அவர்களின் நாடுகளில் அவற்றை உற்பத்தி செய்ய முடியாதா? இடம்தான் இல்லையா? உண்டு. இங்கு மனித சக்திக்கு குறைந்த செலவு என்றால், நீர்வளத்துக்கு செலவே இல்லை. 1.1 டன் எடை கொண்ட ஒரு கார் உற்பத்திக்கான மறை நீர் தேவை நான்கு லட்சம் லிட்டர்கள்.
இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் தோல் பொருட்களில் 72 % வேலூர் மாவட்டத்தில் இருந்தே ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்தியாவில் 2013-14-ம் ஆண்டில் தோல் பொருட்கள் ஏற்றுமதிக்கு 850 கோடி டாலருக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலிருந்து ஆண்டுக்கு சராசரியாக 5,500 கோடி ரூபாய்க்கு தோல் பொருட்கள் ஏற்றுமதியாகின்றன.
அன்னிய செலவாணி வருவாய் ஆண்டுக்கு சுமார் 10,000 கோடி ரூபாய். ஒரு எருமை அல்லது மாட்டின் ஆயுள்கால மறை நீர் தேவை 18,90,000 லிட்டர். 250 கிலோ கொண்ட அக்கால்நடையில் இருந்து ஆறு கிலோ தோல் கிடைக்கும்.
ஒரு கிலோ தோலை பதனிட்டு அதனை செருப்பாகவோ கைப்பையாகவோ தயாரிக்க 17,000 லிட்டர் மறை நீர் தேவை.
பனியன், ஜட்டி உற்பத்தியில் முதலிடம் திருப்பூருக்கு. ராக்கெட் தயாரிக்கும் வல்லரசுகளுக்கு ஜட்டி தயாரிக்க தெரியாதா? 250 கிராம் பருத்தி உற்பத்திக்கான மறை நீர் தேவை 2495 லிட்டர்கள். ஒரு ஜீன்ஸ் பேண்ட் தயாரிக்க 10,000 லிட்டர் மறை நீர் தேவை.
தண்ணீருக்கு எங்கு கணக்கு?
ஒரு பொருளின் விலை என்பது அதன் எல்லா செலவுகளையும் உள்ளடக்கியதுதானே? அப்படி எனில், பெரும் நிறுவனங்கள் எல்லாம் தண்ணீருக்கு மட்டும் ஏன் அதன் விலையை செலவுக் கணக்கில் சேர்ப்பது இல்லை. ஏனெனில், நம்மிடம் இருந்து இலவசமாகத் தண்ணீரைச் சுரண்டி நமக்கே கொள்ளை விலையில் பொருட்களை விற்கின்றன அந்நிறுவனங்கள்.
இப்படி எல்லாம் முட்டையில் தொடங்கி கார் வரைக்கும் கணக்கு பார்த்தால் நாட்டின் வளர்ச்சி என்னவாவது? நாம் என்ன கற்காலத்திலா இருக்கிறோம் என்கிற கேள்விகள் எழாமல் இல்லை. கண்ணை மூடிக்கொண்டு பொத்தாம்பொதுவாய் ஏற்றுமதி, இறக்குமதி செய்ய வேண்டாம் என்கிறது மறை நீர் பொருளாதாரம்.
மறை நீருக்கு மதிப்பு கொடுத்திருந்தால் உலகின் பணக்காரர்களிடம் பட்டியலில் என்றோ இடம் பிடித்திருப்பான் இந்திய விவசாயி. இனியாவது இந்திய அரசு மறை நீர் தத்துவத்தை உணர வேண்டும். ====

இப்படியெல்லாம் இருக்கும் என்று நமக்கு தெரியுமா ?  எனக்கு இந்த இரு பதிவுகளையும் பார்த்த பிறகுதான்  இப்படிப்பட்ட சூழ்நிலையிலும் பூமி இயங்கி கொண்டிருக்கிறது .  இயற்கை அன்னை தந்தெதெல்லாம்  எல்லோர்க்கும் சொந்தமடா , அள்ளி தந்த வானம் அன்னை அல்லவா  என்று பாட்டு பாடிகொண்டு நாம் நாட்களை ஒட்டி கொண்டிருக்கிறோம். 
 இதையெல்லாம் படித்தவுடன் எனக்கு தோன்றியது என்னவென்றால். இந்த நிலையை சரியாக எதி rகொண்டிட படித்த இளைஞர்களின் பங்கும்  ஆட்சியின் செயல்பாடுகளை 
அமலாக்கும் அதிகாரிகளும் இன்னும் நாட்டுக்காக சிந்திப்பவர்களின் பங்கும்  அதிகம் தேவை . 

அரசியல்வாதிகள் மக்களின் நம்பிக்கையை பெற்று ஆட்சி அமைக்கிறார்கள் . அவர்களுக்கு இம்மாதிரி எல்லாம் இருக்கு என்பது தெரியுமா என்பது சந்தேகமே.  இதில்விதி விளக்காக சிலர் இருக்கலாம் . ias, ips  ifs
இன்னும் பல மிகப் பெரிய படிப்புகளை கற்றவர்கள் இம்மாதிரி விழயகளில் அதிகமாக கவனம் செலுத்த வேண்டும். .  அரசியல்வாதிகளில் ஊழல் , அவர்கள்  ஆயிரம் கோடி , இவர்கள் ஆயிரம் கோடி  என்பது ஒரு பக்கம் இருக்கட்டும்.  பன்னாட்டு முதலாளிகள் அல்லது அந்நிய நாடுகள் எப்படி நம் பொருளாதாரத்தில் விளைவுகளை ஏற்படுத்துகிறார்கள்  என்பதை எளிமையாக வலிமையாக வெளிக்கொணரும் பொறுப்பு  அறிவுஜீவிகளுக்கும்  மெத்த படித்தவர்களுக்கும் உண்டு  . அரசியல்வாதிகள் எங்களை செயல்பட முடியாமல் முடக்குகின்றனர் என்ற குற்றச்சாட்டு அவ்வப்போது   எழுகிறதை நாம் கேள்வி படுகிறோம்..  அதை ஒரு புறம் தள்ளி விடுங்கள் .அல்லது புரியும் படி சொல்லுங்கள் . விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள். 

கொஞ்ச வருடங்களுக்கு முன் ஒரு நாட்டிலிருந்து கோதுமை நாம் இறக்குமதி செய்யும் போது அதன் வழியாக கிருமிகள் ஊடுரிவியதாக  கேள்விப்பட்டோம்.  . பார்தநீயம்  என்ற  விஷ செடி , கருவேல மரங்கள் , அணு ஆயுத கழிவுகள்  என்று பல்வேறு வகையான வகையில்  நாம் ஏமாற்ற படுகிறோமோ  என்ற எண்ணமே மேலோங்கிறது . சென்ற  வருடங்களில்  சீன பொருட்கள்   குறிப்பாக  பொம்மைகள்  அதிக அளவில் இந்தியாவில்  தாக்கத்தை உண்டாகியது .  இந்த ஆண்டு  சீன பட்டாசு   ஆன்லைன் வர்த்தகங்கள்  போன்றவைகள்  மிக பெரிய சவாலாக இருக்கிறது. 

 முந்தைய ஆட்சியாளர்கள் என்ன செய்தார்கள், இன்றைய ஆட்சியாளர்கள்  என்ன செய்ய போகிறார்கள் என்பது ஒரு பக்கம் இருக்கட்டும்  நாம் ஒரு இந்திய குடிமகனாக  இதை எப்படி எதிர் கொள்ள போகிறோம். 

ஆட்சியாளர்களும்  அதிகாரிகளும் தன்னலம் கருதாத சிந்தனையாளர்களின் கருத்தும் ஒரு சேர பயனிக்குமானால்  நம் மக்களுக்கு தினம் தோறும் deepaavalithaan


 பயனுள்ள வகையில் நம் பங்கை அளிப்போம் .  நாம ஆடுற ஆட்டமும் பாடுற பாட்டும் படிப்பினை உண்டாக்கணும் .   இந்திய ஒளிர  மென் மேலும் ஒளிர 
அனைவருக்கும்   தீப ஒளி  திருநாள் வாழ்த்துகள் .