இந்தியாவில் புதுச்சேரியை சிறந்த பிரதேசமாக ஆக்குவது
மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய .................... அவர்களே சான்றோர்களே
அமர்ந்திருக்கும் அன்பு உள்ளங்களே உங்கள் அனைவருக்கும் என் அன்பு வணக்கத்தை கூறி என்னுடைய கருத்தை பதிவு செய்கிரேன் .
யோசனையோ அறிவுரையோ கூறும் அளவிற்கு எனக்கு தகுதி இருக்கிறதா என்று எனக்கு தெரியாது ஆனால் சிறு துரும்பும் பல் குத்த உதவும் என்ற ஆன்றோர் வார்த்தைக்கு ஏற்ப என் உரை யை தொடங்குகிரே ன்.
தாகத்தை தனித்தவருக்கு ஆயி மண்டபம், சுதந்திர தாகத்தை தணிக்க கவி பாடிய மீசை முண்டாசுக்காரனின் இருப்பிடம் , நெருப்பு கவி பாவேந்தரின் பிறப்பிடம் , முஸ்லிம் முருகன் கோயில் என்பதில் இருந்தே அறியும் மத நல்லிணக்கம் ஆன்றோர்கள் வசித்த ஆன்மீக பூமி நிறையான மருத்துவம் அறிவுடன் கூடிய கல்வி என ஏராள பெருமையும் அழகையும் கொண்ட நம் புதுவை பிரதேசத்தை மேலும் எப்படி முதன்மை மாநில ஆக்குவது.
புதுச்சேரியை சிறந்த பிரதேசமாக ஆக்குவது எப்படி .. அழகுக்கு அழகூட்டுவது எப்படி.
சொர்கமே என்றாலும் அது நம்மூரு போலாகுமா . இது மேலும் மேலும் சொர்கமாக்க நாம் எப்படி சிந்திக்க வேண்டும் என்று என்னுள் தோன்றிய சிறு பொறியை எண்ண ஓட்டத்தை பேச்சு வடிவில் உங்கள் முன் பகிர்கிறேன்.
முதலில் புதுச்சேரியின் முக்கிய பிரச்சனை போக்கு வரத்து . இதை சீர் செய்ததாலே பாதி பிரச்சனை தீர்ந்து விடும் . அழகும் அதிகரிக்கும் புதுவையோ சிறு மாநிலம்
வாகனங்களின் பயன்பாடு அதிகம் வீதிகளின் அகலம் குறைவு.
மேம்பாலம் கட்டுவதற்கு சாத்திய கூறு உள்ளதா என்று தெரியவில்லை.
ரோப் கார் முறையை புதுவையில் செயல் படுத்த முயற்சி எடுக்கலாம். அதாவது தரையிலிருந்து ஒரு முப்பது நாப்பது அடி உயரத்தில் புதுவையை சுற்றி உள்ள புல்வார்களில் ரோ ப் கார் அமைக்கலாம் ஒரு கிலோ மீட்டர் இடைவெளி விட்டு ஒவ்வொரு பகுதியிலும் ரோப் கார் மேல் ஏற சாய் தள படிக்கட்டு அல்லது தானியங்கி படிக்கட்டு அமைக்கலாம். இதன் மூலம் கணிசமான அளவு நெரிசலை தவிர்க்கலாம்.
வெளிநாடுகளில் உள்ளது போல் போக்கு வரத்தை கண்காணிக்க சி சி டி வி
கேமராவை வீதிக்கு வீதி அமைத்து அதன் மூலம் போக்கு வரத்து விதி மீறல்களையும் குற்ற செயல்களையும் கணிசமாக குறைக்கலாம்.
கடல் வழி போக்கு வரத்தை சிறிய அளவில் தொடங்கலாம் .
சுற்றுலாத்துறையை மேம்படுத்த கடலுக்குள் அருங்காட்சியகம் அமைக்கலாம். ஏனென்றால் நான் சென்ற வருடம் பத்தரிகையில் வந்ததாக ஒரு செய்தி கேள்வி பட்டேன். புதுவை கடலில் அறிய வகை வெளிநாட்டில் வளரக்கூடிய மீன்கள் தென்படுவதாகவும் பருவ நிலை சூழ்நிலை இம்மாதிரி அறிய வகை மீன்களுக்கு புதுவை கடல் சாதகமா க இருக்கிறது என்ற செய்தியும் அறிந்தேன். .
சூரிய மின்சக்தி பயன்பாடு புதுவையின் அழகை பலமடங்கு ஒளியூட்டும் .
பார்கிங் முறை படுத்தப்பட்டால் புதுவை அழகாக காட்சியளிக்கும். சென்னை
போன்ற நகரங்களில் உள்ள மால்களில் ஒன்பது அடுக்கு மாடியில் சாய்தள கார் பார்கிங் முறை உள்ளது அதே போல் புதுவையின் முக்கிய இடங்களை கண்டறிந்து அதே போன்று நாமும் கட்ட முயற்சிக்கலாம் .
ஆக்கிரமிப்புகளை முறைபடுத்துதல் நகரின் அழகை மேலும் மெருகூட்டும்
புதுவை சிறிய மாநிலமாக இருப்பதால் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை முயற்சிக்கலாம் .
இப்போது நான் சொல்லுவது சிரிப்பாக கூட இருக்கலாம். ஆனால் நடை முறை சாத்தியமே. அதாவது முக்கிய சாலைகளுக்கு அல்லது நகருக்குள் சைக்கிளில் மட்டுமே செல்ல வேண்டும் , இதன் மூலம் சைக்கிள் வாடகை கடை பெருகும் . வேலை vaaiப்பு அதிகரிக்கும் பெட்ரோல் டீசல் பயன்பாடு குறையும் எல்லாவற்றிகும் மேலாக உடல் ஆரோக்கியம் காக்கப்படும்.
இப்பெல்லாம் சூப்பர் டூப்பர் தல தளபதி எல்லாம் நம்மூர்ல சண்டை போட்டுட்டு பாட்டு பாடிட்டு போயிடறாங்க . சினிமா ஷூட்டிங்க தாங்க சொல்றேன். அவங்க வேற இடத்துல ஆடரதுக்கு பதிலா ஒரு திரைப்பட நகரை உருவாக்கி அங்கே ஷூட்டிங்கை வச்சுக்கலாம் ,. பிரெஞ்சு இந்தியா கலாச்சாரத்தை உள்ளடக்கிய வகையில் திரைப்பட நகரை உருவாக்கலாம்
பொது மக்களை எல்லா செயல்பாடுகலிலும் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி கொள்ளும் வகையில் திட்டமிட்டால் நிச்சயம் புதுவை ஒரு முன்மாதிரியாய் திகழும்.
அரசாங்கத்தையே எல்லாவற்றிகும் எதிர்பார்க்காமல் நாமே நம் பகுதியை அழகு படுத்தி கொள்ளலாம் . புதுவை பிரதேசத்தில் ஏராளமான குட்டிகுட்டி நகர்கள் உதயமாகிறது. அவர்களுக்கென ஒரு சங்கமும் செயல் படுகிறது.
அவைகள் தங்கள் பங்களிப்பை அளிக்கலாம்.
சமீபத்தில் நான் வியந்த செய்தி ஒன்று . மீதமான உணவுகளை ஒரு பொது இடத்தில் பிரிட்ஜில் வைத்து விடுவார்களாம். அது தேவை படுபவர்கள் எடுத்து கொள்வார்களாம். ஒரு தனி மனிதன் செய்யும் இந்த செயலை குடியிருப்போர் நல சங்கங்கள் செய்ய முடியாதா. இது உணவு பொருட்களுக்கு மட்டுமல்ல
முருந்து மாத்திரை துணி மணிகள் போன்றவைகளுக்கும் பொருந்தும் .
தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்ற ஆவேசத்தை குறைக்க நம்மால் முடிந்த சிறு முயற்சி தானே இது
அத்தியாவசிய அரசு துறைகள் இருபத்து நான்கு மணி நேரமும் ஷிப்ட் முறையில் இயங்க வழி செய்ய வேண்டும் . இதன் மூலம் வேலை வாய்ப்பு பெருகும் .
தன்னார்வலர்களும் பொது சேவை மனம் உள்ளவர்களும் இணைந்து எந்தெந்த வழியில் சின்ன சின்ன விழயங்களில் கவனம் செலுத்தலாம்.
உதாரணமாக. குழாய் உடைத்து கொண்டு தண்ணீர் வெளியேறும்போது நாம் பார்த்து கொண்டே செல்கிறோம் . நிறைய பேருக்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லை. அரசியல் வாதிகள் மேடை போட்டு பேசுகிறார்கள். இணையத்தில் இயலாமையை சிலர் பகிர்கிறார்கள். இம்மாதிரி தருணங்களில் யாரை தொடர்பு கொள்ள வேண்டும் என்று ஒவ்வொரு தெரு முனையிலும் விவரம் இருந்தால் நாம் சும்மா கடந்து செல்லாமல் அந்த துறைக்கு தகவல் தெரிவித்து விடலாம்.
புதுவையில் சண்டே மார்கெட் மிக பிரபலம் . இதையே பிரம்மாண்டமாக
நகரத்தின் வெளிபகுதிகளில் அ மைத்து அரசே நிர்வகிக்கலாம், அல்லது தனியாரிடம் ஒப்படைக்கலாம் . புத்தகங்கள் பழைய பொருட்கள் மற்றும் அனைத்து பழைய பொருட்களும் வாங்க விற்க ஒரு சந்தை அமைத்தால் போக்கு வரத்து குறையும் வியாபாரம் பெருகும் வேலை வாய்ப்பு . அதிகரிக்கும்..
குழந்தைகள் குதூகலிக்கும் வகையில் சின்ன சின்ன மிருக காட்சி சாலை அமைக்கலாம்.
எல்லாவற்றிக்கும் மேலாக இது நம் மாநிலம் இதன் வளர்ச்சியில் என் பங்கும் உண்டு என்று நினைத்து ஒவ்வொரு குடிமகனும் நினைத்து செயல் பட்டால் .
சொர்கத்தின் சொர்கமாகவே புதுவையை மாற்றலாம்.
நல்லதொரு வாய்ப்புக்கு நன்றி பாராட்டி இதற்கு காரணாமான. சான்றோர்களுக்கு வணக்கம் கூறி விடை பெறுகிறேன்..
மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய .................... அவர்களே சான்றோர்களே
அமர்ந்திருக்கும் அன்பு உள்ளங்களே உங்கள் அனைவருக்கும் என் அன்பு வணக்கத்தை கூறி என்னுடைய கருத்தை பதிவு செய்கிரேன் .
யோசனையோ அறிவுரையோ கூறும் அளவிற்கு எனக்கு தகுதி இருக்கிறதா என்று எனக்கு தெரியாது ஆனால் சிறு துரும்பும் பல் குத்த உதவும் என்ற ஆன்றோர் வார்த்தைக்கு ஏற்ப என் உரை யை தொடங்குகிரே ன்.
தாகத்தை தனித்தவருக்கு ஆயி மண்டபம், சுதந்திர தாகத்தை தணிக்க கவி பாடிய மீசை முண்டாசுக்காரனின் இருப்பிடம் , நெருப்பு கவி பாவேந்தரின் பிறப்பிடம் , முஸ்லிம் முருகன் கோயில் என்பதில் இருந்தே அறியும் மத நல்லிணக்கம் ஆன்றோர்கள் வசித்த ஆன்மீக பூமி நிறையான மருத்துவம் அறிவுடன் கூடிய கல்வி என ஏராள பெருமையும் அழகையும் கொண்ட நம் புதுவை பிரதேசத்தை மேலும் எப்படி முதன்மை மாநில ஆக்குவது.
புதுச்சேரியை சிறந்த பிரதேசமாக ஆக்குவது எப்படி .. அழகுக்கு அழகூட்டுவது எப்படி.
சொர்கமே என்றாலும் அது நம்மூரு போலாகுமா . இது மேலும் மேலும் சொர்கமாக்க நாம் எப்படி சிந்திக்க வேண்டும் என்று என்னுள் தோன்றிய சிறு பொறியை எண்ண ஓட்டத்தை பேச்சு வடிவில் உங்கள் முன் பகிர்கிறேன்.
முதலில் புதுச்சேரியின் முக்கிய பிரச்சனை போக்கு வரத்து . இதை சீர் செய்ததாலே பாதி பிரச்சனை தீர்ந்து விடும் . அழகும் அதிகரிக்கும் புதுவையோ சிறு மாநிலம்
வாகனங்களின் பயன்பாடு அதிகம் வீதிகளின் அகலம் குறைவு.
மேம்பாலம் கட்டுவதற்கு சாத்திய கூறு உள்ளதா என்று தெரியவில்லை.
ரோப் கார் முறையை புதுவையில் செயல் படுத்த முயற்சி எடுக்கலாம். அதாவது தரையிலிருந்து ஒரு முப்பது நாப்பது அடி உயரத்தில் புதுவையை சுற்றி உள்ள புல்வார்களில் ரோ ப் கார் அமைக்கலாம் ஒரு கிலோ மீட்டர் இடைவெளி விட்டு ஒவ்வொரு பகுதியிலும் ரோப் கார் மேல் ஏற சாய் தள படிக்கட்டு அல்லது தானியங்கி படிக்கட்டு அமைக்கலாம். இதன் மூலம் கணிசமான அளவு நெரிசலை தவிர்க்கலாம்.
வெளிநாடுகளில் உள்ளது போல் போக்கு வரத்தை கண்காணிக்க சி சி டி வி
கேமராவை வீதிக்கு வீதி அமைத்து அதன் மூலம் போக்கு வரத்து விதி மீறல்களையும் குற்ற செயல்களையும் கணிசமாக குறைக்கலாம்.
கடல் வழி போக்கு வரத்தை சிறிய அளவில் தொடங்கலாம் .
சுற்றுலாத்துறையை மேம்படுத்த கடலுக்குள் அருங்காட்சியகம் அமைக்கலாம். ஏனென்றால் நான் சென்ற வருடம் பத்தரிகையில் வந்ததாக ஒரு செய்தி கேள்வி பட்டேன். புதுவை கடலில் அறிய வகை வெளிநாட்டில் வளரக்கூடிய மீன்கள் தென்படுவதாகவும் பருவ நிலை சூழ்நிலை இம்மாதிரி அறிய வகை மீன்களுக்கு புதுவை கடல் சாதகமா க இருக்கிறது என்ற செய்தியும் அறிந்தேன். .
சூரிய மின்சக்தி பயன்பாடு புதுவையின் அழகை பலமடங்கு ஒளியூட்டும் .
பார்கிங் முறை படுத்தப்பட்டால் புதுவை அழகாக காட்சியளிக்கும். சென்னை
போன்ற நகரங்களில் உள்ள மால்களில் ஒன்பது அடுக்கு மாடியில் சாய்தள கார் பார்கிங் முறை உள்ளது அதே போல் புதுவையின் முக்கிய இடங்களை கண்டறிந்து அதே போன்று நாமும் கட்ட முயற்சிக்கலாம் .
ஆக்கிரமிப்புகளை முறைபடுத்துதல் நகரின் அழகை மேலும் மெருகூட்டும்
புதுவை சிறிய மாநிலமாக இருப்பதால் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை முயற்சிக்கலாம் .
இப்போது நான் சொல்லுவது சிரிப்பாக கூட இருக்கலாம். ஆனால் நடை முறை சாத்தியமே. அதாவது முக்கிய சாலைகளுக்கு அல்லது நகருக்குள் சைக்கிளில் மட்டுமே செல்ல வேண்டும் , இதன் மூலம் சைக்கிள் வாடகை கடை பெருகும் . வேலை vaaiப்பு அதிகரிக்கும் பெட்ரோல் டீசல் பயன்பாடு குறையும் எல்லாவற்றிகும் மேலாக உடல் ஆரோக்கியம் காக்கப்படும்.
இப்பெல்லாம் சூப்பர் டூப்பர் தல தளபதி எல்லாம் நம்மூர்ல சண்டை போட்டுட்டு பாட்டு பாடிட்டு போயிடறாங்க . சினிமா ஷூட்டிங்க தாங்க சொல்றேன். அவங்க வேற இடத்துல ஆடரதுக்கு பதிலா ஒரு திரைப்பட நகரை உருவாக்கி அங்கே ஷூட்டிங்கை வச்சுக்கலாம் ,. பிரெஞ்சு இந்தியா கலாச்சாரத்தை உள்ளடக்கிய வகையில் திரைப்பட நகரை உருவாக்கலாம்
பொது மக்களை எல்லா செயல்பாடுகலிலும் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி கொள்ளும் வகையில் திட்டமிட்டால் நிச்சயம் புதுவை ஒரு முன்மாதிரியாய் திகழும்.
அரசாங்கத்தையே எல்லாவற்றிகும் எதிர்பார்க்காமல் நாமே நம் பகுதியை அழகு படுத்தி கொள்ளலாம் . புதுவை பிரதேசத்தில் ஏராளமான குட்டிகுட்டி நகர்கள் உதயமாகிறது. அவர்களுக்கென ஒரு சங்கமும் செயல் படுகிறது.
அவைகள் தங்கள் பங்களிப்பை அளிக்கலாம்.
சமீபத்தில் நான் வியந்த செய்தி ஒன்று . மீதமான உணவுகளை ஒரு பொது இடத்தில் பிரிட்ஜில் வைத்து விடுவார்களாம். அது தேவை படுபவர்கள் எடுத்து கொள்வார்களாம். ஒரு தனி மனிதன் செய்யும் இந்த செயலை குடியிருப்போர் நல சங்கங்கள் செய்ய முடியாதா. இது உணவு பொருட்களுக்கு மட்டுமல்ல
முருந்து மாத்திரை துணி மணிகள் போன்றவைகளுக்கும் பொருந்தும் .
தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்ற ஆவேசத்தை குறைக்க நம்மால் முடிந்த சிறு முயற்சி தானே இது
அத்தியாவசிய அரசு துறைகள் இருபத்து நான்கு மணி நேரமும் ஷிப்ட் முறையில் இயங்க வழி செய்ய வேண்டும் . இதன் மூலம் வேலை வாய்ப்பு பெருகும் .
தன்னார்வலர்களும் பொது சேவை மனம் உள்ளவர்களும் இணைந்து எந்தெந்த வழியில் சின்ன சின்ன விழயங்களில் கவனம் செலுத்தலாம்.
உதாரணமாக. குழாய் உடைத்து கொண்டு தண்ணீர் வெளியேறும்போது நாம் பார்த்து கொண்டே செல்கிறோம் . நிறைய பேருக்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லை. அரசியல் வாதிகள் மேடை போட்டு பேசுகிறார்கள். இணையத்தில் இயலாமையை சிலர் பகிர்கிறார்கள். இம்மாதிரி தருணங்களில் யாரை தொடர்பு கொள்ள வேண்டும் என்று ஒவ்வொரு தெரு முனையிலும் விவரம் இருந்தால் நாம் சும்மா கடந்து செல்லாமல் அந்த துறைக்கு தகவல் தெரிவித்து விடலாம்.
புதுவையில் சண்டே மார்கெட் மிக பிரபலம் . இதையே பிரம்மாண்டமாக
நகரத்தின் வெளிபகுதிகளில் அ மைத்து அரசே நிர்வகிக்கலாம், அல்லது தனியாரிடம் ஒப்படைக்கலாம் . புத்தகங்கள் பழைய பொருட்கள் மற்றும் அனைத்து பழைய பொருட்களும் வாங்க விற்க ஒரு சந்தை அமைத்தால் போக்கு வரத்து குறையும் வியாபாரம் பெருகும் வேலை வாய்ப்பு . அதிகரிக்கும்..
குழந்தைகள் குதூகலிக்கும் வகையில் சின்ன சின்ன மிருக காட்சி சாலை அமைக்கலாம்.
எல்லாவற்றிக்கும் மேலாக இது நம் மாநிலம் இதன் வளர்ச்சியில் என் பங்கும் உண்டு என்று நினைத்து ஒவ்வொரு குடிமகனும் நினைத்து செயல் பட்டால் .
சொர்கத்தின் சொர்கமாகவே புதுவையை மாற்றலாம்.
நல்லதொரு வாய்ப்புக்கு நன்றி பாராட்டி இதற்கு காரணாமான. சான்றோர்களுக்கு வணக்கம் கூறி விடை பெறுகிறேன்..