Friday, February 13, 2015

ambala manasu

ஆம்பள மனசு .-


ஏங்க ஏழு மணிக்குதனே உங்க  கல்லூரிகால நண்பர்கள் சந்திப்பு . இப்ப மணி  ஒன்னுதானே . ஏன் இன்னிக்கு பறக்கறீங்க.

ஒனக்கு தெரியாதா  பழைய   நண்பர்களை முப்பது வருஷம் கழிச்சு சந்திக்கிறது  எவ்வளவு பெரிய விழயம் . அதிலும்  ரம்யா வேற வரா.
மகேஸ்வரி உனக்கு  ரம்யாவை  பத்தி சொல்லியிருகேன்ல .

என்னது  ரம்யாவை பத்தியா  இதனை வருஷத்துல அவளை பத்தி சொல்லாத நாட்கள்தான் கம்மி.  நீங்க ஒரு பலகீனமான நேரத்திலே  ரெண்டு பேரும் லவ் பண்ணினதா கூட சொல்லி இருக்கீங்க.

சரி சரி அதை விடு  . மீட்டிங்குக்கு  கிரே கலர்  டி ஷர்ட் போட்டுக்கவா. ரம்யாவுக்கு அந்த கலர் ரொம்ப பிடிக்கும்.   ரமேஷ்  நண்பர்கள் சந்திப்ப்பிற்கு
கிளம்புவதற்குள்  நூறு முறையாவது   ரம்யா  பெயரை உச்சரித்து இருப்பான்.

சரி மகேஸ்வரி மணி ஆருஆயிடுச்சி  நான் கிளம்பறேன்.

ஏங்க ஒரு நிமிஷம்   அங்க  சங்கரை பாத்தீங்கனா  மகேஸ்வரி உங்களை விசாரிச்சான்னு  சொல்லுங்க.  .

தலை வலிக்குது  நான் நண்பர்கள் சந்திப்பிற்கு போகலை  என்றான் ரமேஷ். .