நண்பர் ஆரோக்கியராஜ் எனது தெறி படத்தின் விமர்சனத்தில் அரசியல் சார்பான கருத்தொன்றை வெளியிட்டு ருந்தார். நானும் அவருக்கு பதில் பதிவு செய்தேன். இருப்பினும் நான் பதிவில் கேட்ட கேளவிகளுக்கு பதில் சொல்லாமல் காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளை விமர்சித்து பதிவிட்டார். அது அவரின் இடது சாரி இயக்கத்தின் மீதுள்ள நம்பிக்கை காட்டுகிறது. பாவம் அவருக்கு சில விழயங்களை சொல்லி விளக்கம் கேட்க விரும்புகிறேன் ,
பால பாரதிக்கு தொகுதி ஒதுக்காமல் அல்வா கொடுத்து விட்டார்களே அது பற்றி சொல்லவும் .
மாநில குழு முடிவென்றால் ஐயா ஜோதி பாசு அவர்கள் நீண்ட காலம் பதவியில் இருந்தாரே . அப்போ மாநிலத்திற்கு மாநிலம் ஒரு கொள்கையா?
காங்கிரஸில் கோஷ்டி பூசல் என்கிறீர்களே . கேரளாவில் நடப்பதற்கு பெயர் என்ன .
பொதுத்துறையை காங்கிரஸ் பாதுகாக்கவில்லை என்று நீங்கள் சொல்லும்போது , அந்த பொதுத்துறையை உருவாக்கியதே காங்கிரஸ் அரசுதான் என்பது தங்களுக்கு தெரியுமா. எல் ஐ சி நேருவின் முயற்சியாலும் ஜி ஐ சி இந்திராவின் முயற்சியாலும் வந்தது .
ஏழைகளின் நிலத்தை புடிங்கி வசதி படைத்தோர்க்கு தாரை வார்த்தது (மேற்கு வங்கத்தில்} தானே அந்த மாநிலத்தில் நீங்கள் தோற்க காரணமாய் இருந்தது. . அது என்ன கொள்கை அது.
தமிழகத்தில் பூரண மது விலக்கு என்று கோஷமிடும் நீங்கள் கேரளாவில் உம்மன் சாண்டி அவர்கள் எடுத்த நிலை பற்றி உங்கள் கருத்தென்ன .
முல்லை பெரியார் அணைபிரச்சனயில் உங்களுக்கு எந்த மாநில கொள்கையில் உடன்பாடு. நீங்கள் கேரள தோழரா தமிழக தோழரா?
மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் உடன் உடன்பாடாமே . இது என்ன கொள்கை
நண்பரே ஒன்றை மட்டும் ஞாபகபடுத்த விரும்பிகிறேன் . நீங்கள் எந்த காங்கிரேசை விமர்சிக்கிறீர்களோ எந்த திராவிட இயக்கத்தை விமர்சிக்கிறீர்களோ நீ ன் ன் ன் ட வருடங்களாக அதற்கு சாமரம் வீசி கொண்டிருந்தீர்கள் என்பதை சுலபமாக மறந்து விட்டீர்களே ..
அப்புறம் தோழர் மார்க்ஸ் லெனின் சே குவாரா புரட்சி என்று எப்போதும் பேசும் நீங்கள் புரட்சி கலைஞரின் தலைமையை ஏற்றுகொள்வது அருமையான கொள்கையா. மாநில குழுவின் முடிவா.
நேற்று வரை புதுவை முதல்வர் ரங்கசாமியின் ஆட்சியை விமர்சித்து விட்டு பின் அக் கட்சி யுடன் கூட்டணியை எதிர்பார்த்ததாக செய்தி புதுவையில் பரவலாக பேசப்படுவது உங்களுக்கு தெரியுமா.
முக நூல் நண்பர்களே என்னுடைய பதிவின் பின்னூட்டத்தில் தேவையில்லாமல் அரசியலை நுழைத்ததால் , அவர் என்ன பதிவிட்டார் நான் என்ன பதில் சொன்னேன் என்பது பலருக்கு தெரியாமல் போகும். எனவேதான் இதை தனி பதிவாக செய்கிறேன்.
நண்பர் ஆரோக்கியராஜிற்கு தங்களிடம் இருந்து நேரடி பதிலை எதிர்பார்கிறேன்.
கடைசியாக ஒன்று எல்லா கட்சிகளும் கொள்கைகளை தூர வைத்து ரொம்ப வருஷமாச்சி. கவுண்டமணி சொல்வது போல் அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா. இனிமேலும் கொள்கை கோட்பாடு புரட்சி என்று பேசினால் சிரிப்புதான் வரும்.
.