Tuesday, March 24, 2015

ennaparavai

நினைவோ ஒரு பறவை ===

வழக்கம்போல்  பத்திரிகைகளை  படித்துகொண்டிருந்தபோது  ஒரு செய்தியை காண நேர்ந்தது.  சுவாரசியமாய் கூட இருந்தது.   GBBC   கேள்வி பட்டிருகிரீர்களா ?  ஒவ்வுறு ஆண்டும் பெப்ரவரி  மாதம்  பதிமூன்றாம் தேதி முதல் பதினைந்தாம் தேதி வரை உலகெங்கும் நடக்கும் ஒரு நிகழ்வு.  GREAT BACKYARD BIRD COUNT (GBBC).   இது என்னவென்றால்  மேலே கூறிய தினங்களில் ஒரு பதினைந்து நிமிடம்  ஒதுக்கி , நம் வீட்டின் புழக்கடையில் அமர்ந்து  எத்தனை வகையான  பறவைகள் வருகிறது என்று கணக்கெடுத்து  அதன் கணக்கை  அதற்கென்று  உள்ளை இணையத்தில் பதிவிட வேண்டும் .இது உலகம் முழுதும் உள்ள பறவை ஆர்வலர்களும் இயற்கையை ரசிப்போரும்  கொண்டாடும் ஒரு திரு விழா  சென்ற வருட விழாவின் போது  ஒரு ஆச்சர்யமான செய்தி  அதிக அளவு பல்வேறு வகையான பறவைகள் இந்தியாவில் இருந்துள்ளன , இவ்வளவு இயற்கை சீரழிவுக்குபின்னரும் ..

சரி  நாமும் அப்படி ஒரு முயற்சியில் இறங்கலாமே  என்று  இறங்கியதன் விளைவு== சோகம்தான் மிஞ்சியது.

நம்புங்கள் நண்பரே  காக்கையை தவிர  ஒரு பறவையை கூட காணோம்.

முப்பது  வருடங்கள்  பின்னோக்கி பார்கிறேன்  வழக்கம்போல். =

புதுவை நகரின் மையப்பகுதியில்தான் வீடு.  இருந்தாலும் எத்தனை
எத்தனை  பறவைகள்.

தத்தி தத்தி தாவிப்பறக்கும் சிட்டுகுருவி  அதன் கீச் கீச் சத்தம்  எவ்வளவு இனிமை.

மாடி  வீடுகளிலே  ஒய்யாரமாக  வாலாட் டிகொண்டிருக்கும் கருப்பும் வெள்ளையும் கலந்த ஒரு குருவியும் பழுப்பும் மஞ்சளும் கலந்த ஒரு குருவியும்  பார்க்க எவ்வளவு அழகு. அந்த குருவிகளுக்கு பெயரே  வாலாட்டிகுருவி.

சட்டென்று பச்சை பசேலென்று  கூட் டமாக கொஞ்சி விளையாடும் பச்சைகிளிகள் .

ஆனைச்சாத்தான் குருவிகள். கேள்விப்பட்டதில்லையா  நம்ம ரெட்டைவால் குருவிதான்தாங்க.  மின் கம்பிகளின் மேல் ஒரு ஒழுங்குடன்  வரிசையாக அமர்ந்திருக்கும்  காட்சி .

இன்னும் தேன் சிட்டு குருவி,   சிட்டான் குருவி   அப்ப்புறம் மஞ்ச குருவி.
வெ ப்ப மரத்தில்  அதிகமாக வசிக்கும் ..

ஹூம்  கொட்டிகொண்டே இருக்கும் குருவியை இன்றைய தலைமுறையினர்  பார்திருப்பாகளா என்பது சந்தேகம்.. அதுக்கு பேறு கனான் குருவி .

மனதை வருடும் ஒரு லயத்தோடு மரத்தை கொத்தும மரங்கொத்தி பறவை .

அப்புறம் இருக்கவே இருக்கிறது  மணிபுறா  மாடப்புறா .

அப்போதெல்லாம்  காராசேவ்  முறுக்கு  பகோடா போன்றவைகளை  மனதார இலையில் கட்டி தருவார்கள்.  நாம் கடையிலிருந்து வீட்டிக்கு வருவதற்குள்

நம்மை பின்தொடர்ந்து வரும்  பருந்துகள் அசந்த நேரத்தில் கையில் உள்ளதை பிடுங்கி  விறென்று பறக்கும். அவைகள் எங்கே.

வியாழக்கிழமை  கருடனை பார்த்தால்  கன்னத்தில் போட்டுக்கொள்ள வேண்டும் என்றும்  அதனுடனே

  குங்குமான்கித  வர்ணாய  குந்தேந்து தபலாயஸா
   விஷ்ணு வாஹந    விச்துப்யம்  பட்சிராஜா நமஹா

என்ற ஸ்லோகத்தை சொல்லவேண்டும்  என்று பெரியவர்கள் சொல்லி யிருந்தார்கள் .  அந்த சுலோகம் நான் சரியாக சொல்லிருக்கேனா  அதன் அர்த்தம் என்னவென்று  எனக்கு தெரியாது.  அனால் இப்போது தப்பாக இருந்தாலும் பரவாயில்லை  சுலோகம் சொல்ல தயாராய் இருக்கிறேன்.
கருடனைதான் காணோம்.

 ஒன்று மட்டும் உண்மை  இயற்கையிலிருந்து விலகி வெகு தூரம் நாம்  வந்துவிட்டோம்.

என் ஜோடி மஞ்ச குருவி ,  பூஞ்சிட்டு குருவிகளா ,  அந்த கானன்காத்த குருவிக்குத்தான் கழுத்துல வெள்ள ,  தூக்கணாம்  குருவி எல்லாம் தானறிந்த
பாஷையிலே  ,  பொன் பட்டாடை  மூடிசெல்லும்  தேன் சிட்டோடு மெல்ல,
 சிட்டான்  சிட்டான்  குருவி  உனக்குத்தானே   என்ற பாடல்கள் மூலமாவது
இவைகளை அறிவது  ஒரு நல்ல விழயம் தான்.







Monday, March 9, 2015

andru arasukku indru thaniyaarukku

அன்று அரசுக்கு  இன்று தனியாருக்கு ---

முதலிலேயே சொல்லி விடுகிறேன் இது அரசியல் பதிவல்ல.

விஜய்  டிவியின்  சூப்பர் சிங்கர் முடிந்து வாரங்கள் சில ஓடிய பின்னும் அது பற்றிய சர்ச்சைகள்  இணையத்தில் இன்னும் ஓய்ந்த பாடில்லை.  இவருக்குதான் முதல் பரிசு கொடுத்திருக்கணும்  இல்ல இல்ல இவர்தான் சூப்பர் , ஐயோ எல்லார விட இவர் தூள்  என்று  ஏகப்பட்ட  கண்டன குரல்கள் .

இதை பார்க்கும்போது  நான் படித்துகொண்டிருக்கும்போது  நடந்த ஒரு பரிசு போட்டி  ஞாபகத்திற்கு  வருகிறது.

ஒரு வெற்றிபெற்ற திரைப்படத்தை பற்றிதான் போட்டி.  என்னவென்றால்
அந்த படத்தில் வரும் கதாபாத்திரங்களில்  சிறந்த  நடிப்பை நல்கிய கதா பாத்திரம் எது  அதை வரிசைபடுத்த வேண்டும் என்பதே போட்டி . படக்குழுவினர்  ஏற்கனவே  வரிசை படுத்தியுள்ள   வரிசையுடன்  நாம் அனுப்பும்  வரிசையும் ஒத்துப்போனால்  நமக்கு பரிசு . கேட்பதற்கு  சுலபமாக இருக்கும் இந்த போட்டி  மிக கடினமானது . நாம் வரிசைபடுத்திய  கதா பாத்திரங்கள் போஸ்ட் கார்டில் தான் அனுப்ப  வேண்டும். அப்போது மின்னஞ்சல், குறுஞ்செய்தி  வலைத்தளம்  போன்றவைகள் கனவில் கூட வந்திராத காலம் .

நாங்கள் ஒரு நண்பர்கள் குழு ஆரம்பித்து  ஒவ்வொரு நண்பனும் ஒவ்வுறு பாத்திரத்தின் நடிப்பை வரிசைபடுத்தி  தபால் கார்டில் போஸ்ட் செய்தோம் . அப்போது அது மிக கடினமான வேலை என்று எங்களுக்கு தெரியாது. நாங்கள்  பத்து பேர்  ஒன்பது விதமாக வரிசைபடுத்தி  பத்தாவது போஸ்ட் கார்டில் குருட்டாம்போக்கில் கதா பாத்திரத்தின் நடிப்பை  வரிசை படுத்தினோம். பரிசு நிச்சயம் எங்களுக்குத்தான் என்று இருந்தோம்  ஆனால் அது சுலபமானது அல்ல என்பது போட்டியின் முடிவை பார்த்த போதுதான் தெரிந்து கொண்டோம் . ஏனென்றால்  ஆயிரக்கணக்கில் கடிதங்கள்  வேறு வேறு மாதிரி  வரிசைபடுத்தப்பட்டு.

எந்த படம்  எந்த காதாபாத்திரம் என்று நீங்கள் சரியாக ஊகித்திருந்தால்  நீங்களே உங்களுக்கு ஒரு சபாஷ் போட்டுகொள்ளுங்கள்.

தெரியாதவர்குக்கும் இன்றைய தலைமுறையினருக்கும்   விடை : படம்  நவராத்திரி   வரிசைபடுத்தவேண்டியது  நடிகதிலகம் நடித்த ஒன்பது வேடங்களில்  எந்த பாத்திரம் சிறப்பாக இருந்தது.

அந்த ஒன்பது கதா பாத்திரங்கள்  விபரம்:  கதாநாயகன் , அற்புதராஜ், முரடன் ,
குடிகாரன், டாக்டர், நாடக நடிகன், விவசாயி , போலீஸ் அதிகாரி  தொழுநோயாளி .

எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறது  நான் வரிசைபடுத்தியது.  அவைகள்
1) டாக்டர்     2)  விவசாயி   3  தொழு நோயாளி       போலீஸ் அதிகாரி      நாடக நடிகன்   குடிகாரன்     முரடன்    அற்புதராஜ்     கதாநாயகன்

எதற்கு பரிசு கிடைத்தது என்று ஞாபகம் இல்லை . யாராவது தெரிந்தால் சொல்லுங்கள்.

சரி விழயதிர்க்கு வருவோம்.  முடிவு வெளியானவுடன்  இதே போன்று   சர்ச்சைகள்  அப்போதெல்லாம்  இதை விமரிசிக்க     நமது கருத்தை வெளிபடுத்த  இவ்வளவு   வாய்ப்பும்  வசதியும் அப்போது இல்லை . இருந்தாலும்  நண்பர்களுக்குள்  இது சரியில்லை  அது சரியில்லை  என்ற விவாதங்கள்  தொடர்ந்து கொண்டே இருந்தது.

இதில் தெரிந்தது என்னவென்றால் ஒரு முடிவு என்றால் எந்த காலமாய் இருந்தாலும்  அதிருப்தி  என்பது இருக்கத்தான் செய்யும்.

ஒரே நடிகர் நடித்து ஒன்பது பாத்திரங்களிலேயே   சிறந்தது எது எனும், முடிவை  அறிவிக்கும் போது  விமர்சனத்திருக்கு  ஆளாகும்போது , ஆறு போட்டியாளர்கள்    வேறு  வேறு  மாநிலங்களை  சேர்ந்தவர்கள்  கலந்து கொண்ட போட்டியின் முடிவுகள் அனைவரும் ஒத்து  போகும்  படியாகவா இருக்கும்.

அந்த போட்டியினால்  தபால்  துறைக்கு .  நல்ல வருமானம் . நிறைய  தபால்  விற்றல் லாபம் தானே .

இப்போது போட்டிகளில் முடிவை தீர்மானிக்க மினஞ்சல் , குறுஞ்செய்தி ,வலைத்தளம் என்ற  வாய்ப்பு  இருந்தாலும்  வருமானம் என்னவோ தனி யாருக்குத்தான் .

உங்களில் நவராத்திரி படம்பார்தவர்கள்  இன்றைய சூழ்நிலையில்  அதில் நடிகர் திலகத்தின்  எந்த பாத்திரத்தின்  நடிப்பு  முதல் இடம்  இரண்டாம் இடம்  .என்று  வரிசை படுத்துங்களேன்  

 
ஆயுள் காப்பீட்டு கழகத்தின் வருமானம் தற்போது நாட் டு நலன்களுக்காக  செலவ செய்யப்படுகிறது.   அதில் அந்நிய முதலீட்டை அதிகபடுத்தினால்  அது சாத்தியமா.  இன்று நாடெங்கிலும் உள்ள  எல் ஐ சி ஊழியர்கள்  அந்நிய முதலீட்டை கண்டித்து ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்கிறார்கள்.  இதற்கும் மேலே உள்ள பதிவின்  தலைப்புக்கும் சம்பந்தம் இல்லை. . தோன்றியது  எழுதினேன் .



Tuesday, March 3, 2015

antha varisail ippothu santhiyum.

அந்த வரிசையில் இப்போது சாந்தியும் ===

பழமை புதுமையாய் மாறும்போது  எண்ணங்கள் எப்படியெல்லாம் பயணிக்கிறது.  சென்னை சாந்தி தியேட்டர்  பொழுதுபோக்கு வளாகமாக மாறப்போகிறது  என்ற செய்தி  என் நினைவுகளை பின்னோக்கி செலுத்துகிறது.

கட்டிடங்கள் வெறும் கற்கள் அல்ல அவைகள் எத்தனையோ ஆச்சர்யங்களையும் , சாதனைகளையும், வரலாறுகளையும் , சோகங்களையும் ,இனிப்புகளையும்  சோர்வுகளையும்  இ ன்னும் எண்ணற்ற  உணர்சிகளை தன்னகத்தே கொண்டுள்ளது.  அதை அதில் உணர்ந்து பார்த்தவருக்குத்தான்  உண்மையான வீச்சு புரியும்.

இப்படி ஒரு-- அல்ல அல்ல -- சில அனுபவங்கள்  எனக்கும் உண்டு.

முதலில்  35 A  செட்டி தெரு   பாண்டிச்சேரி , எங்கள் வீட் டு விலாசம். . அரவிந்தர்   ஆஸ்ரமம்  இந்த தெருவில்தான் உள்ளது. நூறு ஆண்டுகளுக்கு மேலாக  எங்கள் முன்னோர்  காலத்திலிருந்தே  அதுதான் எங்கள் வசிப்பிடம்.
எண்பதுகளில் மாறிவரும் சூழ்நிலைகளுக்கு ஏற்பவும் குடும்பம்  பெரிது ஆனதினாலும்  அந்த வீட்டை விற்று விட்டு சகோதரர்கள் அனைவரும் தனி தனியாக வீடு வாங்கி விட்டோம் . என்னதான் இப்ப்போது என்னுடைய வீடு சற்றேறக்குறைய  வசதிகளுடன் இருந்தாலும்  செட்டி  தெரு வீடு  வீடுதான்.
காரணம்  திண்ணை , ரேழி , முற்றம்  தாவாரம்  வீட்டின் பின்புறம்  கிணறு.
என்று சகல் அம்சங்களுடன்  ஓடு எப்போது தலையில் விழும் என்ற நிலையுடனும் ஒரு நிம்மதி வாழ்கை அங்கே இருந்தது.  அது மட்டுமல்ல
மகா பெரியவா  புதுவை வந்த போது  எங்கள் இல்லத்தில் அவருக்கு சொர்ண அபிஷேகம்  நடந்ததாக எங்க தாத்தா சொல்ல கேட் டிருக்கிரேன். . புரட்சிக்கவி பார திதாசன் எங்கள் வீட்டில்  எங்கள் அப்பாவுடன் பேசிகொண்டிருப்பதை பார்த்திருக்கிறேன்.

எங்கள் வீட்டை வாங்கியவர் அதை புதுப்பிக்க வேண்டி இடித்த  போது  மனம் அழுதது  முதல் முறை..

அஜந்தா தியேட்டர்  புதுவையின் பெருமைக்குரிய திரை அரங்கம் . ஏனெனில்
அந்த காலத்தில்   BENHUR,  TEN COMMANDMENTS, PHSYCO,  HATARI ,மற்றும்  JERRY LEWIS  நடித்த  அத்தனை படங்களும்,  CHRISTOPHER LEE  நடித்த  டிராகுல படங்கள் என வரிசை கட்டி அடித்த திரை அரங்கம். எங்க வீட்டு பிள்ளை படத்திற்காக மக்கள் திலகம் இங்கு வந்ததும் , பாவை விளக்கு படத்திற்கு நடிகர் திலகம் இங்கு  வந்ததும்   இன்னொரு மகுடம் .  அறுபதுகளிலேயே  கண்ணாடி போட்டுகொண்டு அனைவரும் பார்த்த படம்  13 GHOSTS என்ற ஆங்கில படம். எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தாற்போல்  இந்த திரை அரங்கில்  metro goldwyn mayor (MGM)  என்று  ட்ரைலர்  போடுவார்கள் . எதற்கு இவ்வளவு பீடிகை என்றால்  எனது தந்தையார்  இந்த தியே டேரில்தான்  ஆரம்பம் முதல் இறுதிவரை மேலாளராக பணி  புரிந்தார்..

அந்த தியேட்டர்  நவீன சொகுசு ஓட்டலுக்காக  இடிக்கப்பட்டபோது  இரண்டாம் முறை இதயம் வலித்தது.

கலவை கல்லூரி == நான் படித்த பள்ளி =நூறாண்டு பாரம்பரியம் உள்ள பள்ளி.
ஆங்கில வழியில் அரசு பள்ளி . மிகவும் பழமை வாய்ந்த கட்டிடம் என்பதினால் அரசு  இதை புனரமைப்பு  செய்ய வேண்டி  தற்காலிகமாக வேறு இடத்திற்கு மாற்றப்பட்டு இருப்பதாக செய்தி. வானளாவிய மரங்களுடன்  நகரின் மைய்யபகுதியில் கொத்து கொத்தாக  மாணவர்கள் அருகில் உள்ள திடலுக்கு உடற்பயிற்சி செய்ய  P.T. PERIODல்  வெளியே செல்ல திரும்ப வரும்போது பாதி மாணவர்கள் எஸ்கேப் ஆகி இருப்பது  மறுநாள் ரகளையான ரசனையாக மாறும்.

அந்த பள்ளியை புதுப்பிக்க இடிக்கும்போது  எனக்கும் வலிக்கும்தானே.

சாந்தி  தியேட்டர் :   மாணவ பருவத்திலே  நாங்கள் பெருந்தலைவர்  ஐயாவை
காண செல்லும்போதெல்லாம்  அன்னை இல்லத்திற்கு விஜயம் என்பது கட்டாயம்.  அந்த சிங்கம் படப்பிடிப்பிற்காக  வெளியூர் சென்று இருந்தால்  எங்கள் அடுத்த இடம் சாந்தி  திரை அரங்க வளாகம்தான் . சிவாஜி ரசிகர்களின் அறிவிக்கப்படாத அரங்கமாக இருந்தது  சாந்தி திரை அரங்கம். அங்கு அப்போது தினசரி ஆஜராகும்  சென்னை மருத்துவ கல்லூரி மாணவர்  மகாதேவன் (மகாதேவா இப்ப எங்க இருக்க ?))  துபாய்க்கு போக முயற்சி செய்து கொண்டிருந்த  அன்சாரி பாய்  இன்னும் நாகர் கோயில் அண்ணாச்சி என்று ஏராளமான நண்பர்கள்.

நான்  LIC EMPLOYEE    ஆன பின்பும் சென்னைக்கு செல்லும்போதெல்லாம்  சாந்தி திரை அரங்கிற்கு  அருகில் உள்ள எல் ஐ சி கிளையில் உள்ள நண்பர்களை  பார்த்து விட்டு சாந்தி திரை அரங்கிற்கு வருவேன். அப்போதும் நான் ரசிகர்களை பார்ப்பது  உண்டு.

சில மாதங்களுக்கு முன் சென்னையில்  என் மகள் ஒரு தேர்வு எழுத வேண்டி இருந்ததால்  நானும கூட  சென்றேன்.  அப்போது வா சரவணா பவனில் சாப்பிடலாம் என்று கூறி  சாந்தி திரை அரங்க வளாகத்திற்கு  விஜயம் செய்தேன்.

உண்மையை நான் சொல்லியிருந்தால்  என் மகள் என்னை விநோதமாக பார்திருப்பாள் . காரணம்  இன்றைய தலைமுறைகளுக்கு எல்லாமே சாதாரணமாக போய்விட்டது.

உங்களில் சிலர் கூட என்னை திட்டலாம்  ஆனால்  சட்டென்று  உணர்வுக்குள் மூழ்கிடும் 
சராசரி மனிதன் தானே நான்.

DAVINCI CODE படித்த நான்தான்  TED MARKAIYUM  படித்தேன். சே குவரா படித்த நான்தான்  சத்திய சோதனையும் படித்தேன். சுஜாதா ஈர்த்தார் என்றால்
ஜெயமோகனை  தவிர்க்க வேண்டுமா. ?  கம்பனும் ஆழ்வார்களும்  தமிழ் சொல்லி கொடுத்தனர். நான் ஏ நாத்திகனானே என்று கேட்டுகொண்டே  அர்த்தமுள்ள  இந்து மதம் படிக்கிறேன்.  எனக்கு எத்தனை முகமூடிகள்.

ஆனாலும் நான் நானேதான்  என்று உணர்சிகள் சொல்கிறதே.



.