Thursday, November 26, 2015

parinaama valarchi

பரிணாம வளர்ச்சியா=  பரிதாப தளர்ச்சியா?  

ஆரஞ்ச் டே  கொண்டாடப்பட்டதாக   முக நூலில்   பார்த்தேன்..  முதலில்  அது என்னவென்றே   தெரியவில்லை. பின்  வழக்கம் போல் இணையத்தில் தேடி  . தெரிந்து கொண்டேன்.  நவம்பர் 25  முதல்  டிசெம்பர்  10  ஆம் தேதிவரை  ஆரஞ்ச்  டேவாம் . பெண்களுக்கு  ஆதரவான  நாளாம் . 

80களில்   பாண்டி  கிளையில்  பணி   புரிந்தபோது  நவராத்திரி  விழா  கொண்டாடப்பட்டது . ஒவ்வுறு  நாளும்  மாலை  பூஜை  நடந்து  பிரசாதம்   வழங்கப்படும். அதற்கான செலவை  ஒவொரு   நாளுக்கு ஒவ்வொரு  துறை ஏற்றுக்கொள்ளும் . மகளிர் தோழர்கள்  சம்ப்ரதாய  பாடல்களையும்  பக்தி பாடல்களையும்   பாடுவார்கள் . பெண்மையை  சக்தியை    போற்றும் நாளாக  அந்த  தினங்கள்  கொண்டாடப்பட்டது


பின்பு  பல வருடங்கள் கடந்த  பின்  மார்ச் 8 ஆம் தேதி  மகளிர் தினம்  என்று  கொண்டாடப்பட்டது.  இந்த நாளில்  பெண்மையை போற்றும் விதமாக  கருத்தரங்கங்கள்  கவிதைகள்  கோல போட்டிகள்  நடத்தப்பட்டன.  அந்த கொண்டாட்டங்களில்  ஒரே மாதிரியான  நிறம்கொண்ட  ஆடைகளை  மகளிர்  தோழர்கள்  உடுத்தி வந்தது  அப்போது   பெரிய செய்தியாக  பேசப்பட்டது.

இப்போது  பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களை  தடுக்கும் விதமாக  ஆரங்ஜ்  டே  கொண்டாடப்படுவதாக  அறிந்தேன்.   மகளிர் தோழர்கள்   ஆரஞ்ச்  பலூனுடன்  ஆரஞ்ச் நிற உடை உடுத்திய  படத்தினை முக நூலில்  பார்த்தேன்..

இன்னும் எத்தனை  தினங்கள்  மகளிர்க்காக  உருவேடுக்கப்போகிறதோ  தெரியவில்லை.

எது  எப்படியோ  புரட்சி தலைவர்  பாடியது  போல்  திருடனா  பார்த்து  திருந்தா விட்டால்  திருட்டை  ஒழிக்க  முடியாது.




Wednesday, November 11, 2015

vaedhaalam

வேதாளம்  திரைப்பார்வை

சந்தேகமே இல்லாமல்  தல தலைதான்.  படத்தை பற்றி அப்புறம் பாப்போம்
படம் பார்த்த  அனுபவத்தை  பகிர்கிறேன்.   சாதாரணமாக  திரை உலக பாஷையில்  ஒபெநிங் ( அதாவது முதல் காட்சிக்கு வரும் ரசிகர்கள் ) பிரமாதம் என்று சொன்னால் பெரும்பாலும்  அது ரஜினி , கமல்  விஜய்  அஜீத் படமாக இருக்கும். இதில் எப்போதுமே  அஜீத்திற்கு  ஒபெநிங்   நன்றாக இருக்கும்.  ஆனால் இந்த வேதாளம் படத்திற்கு  ஒபெநிங்  இருக்கிறதே  அது அத்தனை   நடிகர்களின் படத்தையும்  தூக்கி  சாப்பிட்டு விட்டது.. புதுவையில் ஏறக்குறைய  அணைத்து பெரிய திரை அரங்குகளிலும் வெளியிடப்பட்ட  வேதாளம்  படம்  மிகப் பெரிய  கூட்டத்தை  ஈர்த்தது.  திரை அரங்கினுள்  படம் தொடங்கியதும்   தல ரசிகர்களின்  ஆர்பரிப்பு  என்னை மிகவும் ஆச்சர்ய பட  வைத்தது. 

இம்மாதிரி  ஆரவாரம் ஆர்பாட்டம்  எல்லாம்  நான்  சிவந்த மண் , உலகம் சுற்றும் வாலிபன்  போன்ற படங்களுக்கு தான்  பார்த்து  இருக்கிறேன்.

அதிகம் பேசாத , ஊடகங்களில்  தலை காட்டாத, விளம்பர படங்களில்  நடிக்காத  சர்ச்சைகளுக்கு  ஆளாகாத  ஒரு  நடிகனாக  மட்டுமே தன்னை வெளிப்படுத்தி கொள்ளும்   அஜீத்திற்கு  எப்படி இப்படி ஒரு மாஸ்.
எத்தனை  காரணங்களை யோசித்தாலும்  புரியாத புதிராக இருக்கிறது.

சரி  இனி படத்தை பற்றி பாப்போம் .
  அடிதடி   அலம்பல்,ஆக்ரோஷம்   ஸ்டைல், அவயங்களை அதிர வைக்கும்  பாடல்கள்  பாச மலர் செண்டிமெண்ட்  பளீச்  ஒலிப்பதிவு  பர பர  காட்சிகள்   பஞ்ச் வசனங்கள்  . மொத்தத்தில்  சரி விகித  மசாலா கலவை.
 சுவையான  மசாலா.


thoongaavanam

தூங்காவனம்  திரைப்பார்வை==


கமல் படம் = போதை பொருள் கடத்தல் = ஹீரோ  அதை பிடித்தல் . அதற்காக  வில்ல ன்   ஹீரோவின் மகனை கடத்தல். கெட்ட  மனிதருக்கான ஹோட்டல்  அதில் டமால்  டுமீல்  சண்டை . ஹீரோ ஜெயித்தல் . சுபம் --  ஆபரேஷன்  வெற்றி   நோயாளி ???  

பொங்கலுக்கு  ஏதாவது  தொலைகாட்சியில் பாத்துகலாங்க.  

கமல் அடுத்த  படம் உங்க  படமா கொடுங்க .