Sunday, January 31, 2016

memes

அறிவுரை அல்ல  ஆதங்கம்தான்.

சமீப காலமாக இணையத்தில்  ஒரு   அரசியல் தலைவரை   அளவுக்கு  மீறி  கலாய்ப்பதை  காண்கிறேன். சமீபத்திய  கலாய்ப்பு    " லதா புருஷந்தானே  நீங்க    ஊர்ல  பத்மா புருஷன்னு  பேசிக்கிறாங்க  : என்று  கலாய் த்திருந்தாங்க.  அதுக்கு  பேரு  மீம்சாம் .


எழுபதுகளில்  ஒரு பிரதான  எதிர் கட்சி கூட்டங்களில் தரம் குறைந்து  காமராஜரை  கிண்டல்  செய்வார்கள்.  காமராஜர்  ஒரு பயணத்திற்கு தயாராக இருக்கும் போது  பத்திரிகை நிருபர் ஒருவர்  அவருடன்  ஆங்கிலத்தில்   ஆர் யு  ரெடி  என்று கேட்டதாகவும் , உடன் காமராஜர்   நோ  நோ ஐ  ஆம்  நாடார்  என்று சொன்னதாகவும்  கிண்டலடிப்பார்கள் .  தன்  அனுபவத்தினால்  காமராஜ்  ஆங்கிலம் அறிவார் என்பதை அறியாத  கூட்டம்  பட படவென கைத்தட்டும்.  . இன்றும்  மூன்றாவது கூட  படிக்காத  புதுவை  ரிக்க்ஷா தொழிலாளிகள்  ஆங்கிலம்  பிரெஞ்சு , ஜெர்மன்  ஹிந்தி மொழிகளை  சர்வ சாதாரணமாக  பேசுவதை  காணலாம் .

அது மட்டுமலாமல்  அவர்களின் கட்சி தலைவர்   வெளிநாடு சென்ற
போது  ஒரு பல்கலைகழகத்தில்  ஒரே வாக்கியத்தில்  ஒரே சொல்  மூன்று தடவை  தொடர்ச்சியாக  வருவது  போன்ற வாக்கியம்  ஆங்கிலத்தில்  சொல்லுங்கள்  என்ற உடன்  உடனே  அவர் சொல்லிவிட்டாராம்.  தங்களது  தலைவரின் ஆங்கிலப்புலமையை  கண்டு  வியந்து கை தட்டுவார்கள்.

நிகழ் காலத்திற்கு வருவோம். இன்றைய  இளைஞர்கள்  காமராஜரை  வியந்து பார்கிறார்கள்.  சமீபத்தில் நடந்த ஒரு கருத்து கணிப்பில்  தமிழகத்தின்  சிறந்த  முதலமைச்சர்  காமராஜர்  என்று  பெரும்பான்மையினர்  கருத்து தெரிவித்து  இருந்தனர்.  அன்று ஆங்கிலப்புலமை பெற்றிருந்த  அந்த அறிஞர்  அவர்கள் கட்சிகாரகளே  மறந்து  வருகிறார்கள்.

உடனே  காமராஜரும்   கிண்டலுக்கும்  கேலிக்கும்  உள்ளாகும்  இன்றைய  தலைவரும்  ஒன்றா  என்று  கேட்காதீர்கள்.

மீம்ஸ்  என்பது  ஒரு படத்தையோ  காட்சியையோ  சிறிது மாற்றம்  செய்து  நகைச்சுவையை  வரவழைக்க  செய்யும்  ஒரு காரியம்.

அரசியல் தலைவர்களை  அவர்களின் செயல்பாடுகளை  கிண்டல்  செய்யலாம் , கொள்கையை விமர்சிக்கலாம். ஆனால்   தாய்மொழி  அல்லாமல்  வேற்று மொழி தெரியாததூ  கிரிமினல்  குற்றம் இல்லை.

இதே  போன்று தான்  சர்தார்ஜி  ஜோக்  என்று  சொல்லி  சர்தார் ஜிகளை   கிண்டலடித்தார்கள்.   ஆனால்  சர்தார்ஜி  எங்காவது   பிச்சை எடுத்து பார்த்தது உண்டா.  கடும்  உழைப்பாளிகள் அவர்கள்.                                            


இனியாகிலும் நண்பர்களே  வரைமுறைகள்  வைத்துகொள்ளுங்கள் .தங்களின்  மீம்ஸ்களில் அறிவைபெருக்க்கும்  நகைச்சுவைகளை  தாருங்கள் .

மீண்டும் சொல்கிறேன்  இது அறிவுரை அல்ல  ஆதங்கம்தான்.

 ிஅள்ளிதெளியுங்கள். .

Sunday, January 17, 2016

kathakali thiraipaarvai

கதகளி    திரைப்பார்வை


சில வருடங்களுக்கு முன்  புள்ளி  ராஜாவுக்கு  எய்ட்ஸ்  வருமா  என்ற  சொற்தொடர்  பிரபலமாக  இருந்தது.   அதை போல  இந்த படத்தில்   தம்பாவை  போட்டு தள்ளியது  யார்  என்ற  கேள்வியே  பிரதானம். ஓரளவு விறுவிறுப்புடன்  கூடிய   மசாலா படம்.  விஷால்   சண்டை காட்சிகளில்  கத களி  ஆடி இருக்கிறார்.  பார்க்கலாம்.

Saturday, January 16, 2016

thaarai thappattai

தாரை தப்பட்டை  திரைப்பார்வை

மன்னிக்கணும்  பாலா  உங்க படத்தை மிக சுமார்  என்று சொல்ல மனமில்லை .  இருந்தாலும்  வேற வழியில்லை. ரொம்ப சுமார். .பாத்திர  படைப்பில் குழப்பம்  யுகிக்ககூடிய காட்சிகள்   தூக்கலான  வன்முறை  என்னமோ நெனச்சி என்னமோ எடுத்து இருக்கீங்க . இளையராசா  இளைசிடீங்கலே .   ஆனைக்கும்  அடி   சருக்கும்னு  சும்மாவா  சொன்னாங்க .



ரஜினி  முருகன் ====   சிவ கார்த்திகேயன்  சூரி  கூட்டணி  கலக்குது. மதுரையின்  இன்னொரு  பக்கம்  கலகலப்பாக .  சிரிக்க   மட்டும்னா  போங்க . 

Wednesday, January 13, 2016

thamizhar thirunaal

ஒரு வேதனை  வெளியாகிறது.


 நேர்மையாக  அரசியலில்  செயல்பட்ட   ஒரு தமிழன்  நிராகரிக்கப்பட்டான் .  நாம்  தூங்கினோம் .
 
  திரையுலகில்  திறைமையாக  செயல்பட்ட உலகறிந்த   ஒரு தமிழன் அவமானப்படுத்தப்பட்டான்   நாம் சிலையாக  இருந்தோம்

  தன்  உழைப்பால்  ஒரு  நாட்டின் வளர்சிக்கு  ஆணிவேராய்  இருந்த  ஒரு தமிழினம்     மாளாத்துயரில்  மூழ்கியது. நாம்  உயிரற்று  இருந்தோம் .

 நம் பாரம்பரிய   பொருள்களுக்கு  அந்நியர்கள்  காப்புரிமை  பெற முயற்சிக்கும்போதும்  நாம் பேச்சற்று இருக்கிறோம்

நம் கலாச்சாரத்தின்  ஒவ்வொரு அங்கமாக  சிதைக்கப்பட்டு  வருகிறது ஜல்லிக்கட்டு  காளையென  சீற   வேண்டிய நாம்   நத்தை என  சுருங்கி போனோம் .

 விவசாய நிலங்களை  தண்ணீர் உறிஞ்சவும்  நில வளங்களை சுரண்டவும்  மெளனமாக  பார்த்திருப்போம்


நண்பா  தமிழன் என்றொரு  இனமுண்டு  தனியே  அவனுக்கொரு  குணமுண்டு
என்று  நாம்  பழம் பெருமை பேசிக்கொண்டே  மிச்ச சொச்ச காலத்தையும்
மகிச்சியுடன் ???????   கடந்திடுவோம்.


இதையும்  மீறி       ஒரு நாள் உலகம்  நீதி  பெரும்  திருநாள்  நிகழும் சேதி வரும்   என்ற  நம்பிக்கையுடன்     அன்பு  உள்ளங்கள்  அத்தனைக்கும்  இனிய  தமிழர்  திருநாள்  வாழ்த்துகள்..

Monday, January 4, 2016

thamizh paesuvom.

இதை படியுங்கள் ==

வீட்டு கதவை  கள்ள சாவியால் திறந்து பீரோவில் இருந்த துட்டையும்  கோணிப்பையில்  இருந்த  பப்பாளி பழத்தையும் சப்போட்டாப்பழத்தையும் கொய்யாப்பழத்தையும் திருடிய  சுமார  இருபது வயதுடைய கில்லாடி  ஆட்டோ ரிக்ஷாவில் தப்பி  ஓடியபோது  தகவல் அறிந்த போலீஸ் ஏட்டு விரட்டி துப்பாக்கியால் சுட்டதில் தோட்டாக்கள் அவனை  தீர்த்து கட்டின. 

 மேலே உள்ளவை நாம் தமிழ் என்று நினைத்திருப்போம் .  ஆனால்  இது தமிழ் அல்ல பல்வேறு மொழி கலவைகளை தமிழில் சேர்த்து  தமிழ் என்கிறோம். 

              சாவி   =  போர்சிகீஸ்            பீரோ       பிரெஞ்சு 

              துட்டு       டச்சு                          கோணி     ஹிந்தி         பப்பாளி    மலாய் 

              சப்போட்டா      ஜப்பானியம்      கொய்யா  பிரேசிலியன் 

              சுமார்     பெர்சியன்       வயது   சமஸ்க்ரிதம்    கில்லாடி   மராத்தி  

              ஆட்டோ   கிரேக்கம்       ரிக்க்ஷா     ஜப்பானியம்     தகவல் - அரபி  

                போலீஸ்    லத்தீன்    ஏட்டு    ஆங்கிலம்    துப்பாக்கி   துருக்கி  

                தொட்ட   உருது .


  எப்போதோ  ஒரு புத்தகத்தில்  படித்தது.  ஆசிரியர்  பெயர்  தெரியவில்லை .  இருந்தாலும்  இந்த செய்திக்கு  அவருக்கு  ஒரு நன்றி.