நான் அறிந்த சோ ===
பன்முக திறமையாளர் தெய்வ திரு சோ அவர்கள் துணிச்சல் காரர் ...
இதிகாச பாத்திர சகாதேவன் போன்றவர். துரியோதண னுக்கே
போருக்கு நாள் குறித்து கொடுத்தவன் அல்லவா சகாதேவன் . அதைப்போலவே நியாமான கருத்துக்களை விருப்பு வெறுப்பின்றி துணிச்சலுடன் வெளிப்படுத்துபவர்.
அவசரகால சட்டத்தை நேரடியாக துணிச்சலாக எதிர்த்தவர்.
கட்சி தலைவர்கள் மட்டுமன்றி திரை உலக கலைஞர்கள் மற்றும் பல பிரபலங்கள் சிக்கலான சூழ்நிலைகளை சந்தித்தபொழுதுகளில் சோவின் ஆலோசனைகளை நாடுவதுண்டு.
இவர் ஒரு அரசியல் மருத்துவர். ஒரு மருத்துவர் எப்படி நோயாளி நல்லவனா கெட்டவனா , உறவினனா , நண்பனா பணக்காரனா ஏழையா என்று பாக்காமல் நோயை மட்டுமே கண்டு சிகிச்சை அளி ப்பது போல் , இவரின் அரசியல் கருத்துக்கள் எந்த கட்சியாய் இருந்தாலும் தவறு செய்வோர் எத்தனை பெரிய பொறுப்பில் இருந்தாலும் பட்டென தவறை சுட்டி
காட்ட தயங்க மாட்டார்.
எப்படி சாத்தியம் என்று நான் வியக்கும் இவரது குணங்களில் ஒன்று எதிர்த்த விமர்சித்த அத்தனை பேரிடம் உண்மையான நட்பை தொடர்வது.
எப்படி என்பதுதான். ஒரே மேடையில் பா ஜா காவின் ராஜா , முஸ்லீம் கட்சியை சேர்ந்த ஜிஹாருல்லா , இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த
ராஜா என பல்வேறு கொள்கைகைகளை கொண்ட தலைவர்களை பேச
வைத்து விழா நடத்துவது என்பது சாதனமான விஷயமா . அதை அவர் செய்து காட்டினார்.
அரசியல் கட்சிகள் கூட்டணி அமைக்கும்போதெல்லாம் இவரின் பங்கு அதில் இருப்பது செய்தியாக வெளிவரும் .
பத்திரிகையாளர் பத்திரிகை தர்மத்தை மீறாதவர். எழுத்தாளர் எடுத்த கருத்தை ஆணித்தரமாக சொல்லுபவர் நடிகர் .கொடுத்த பாத்திரத்தை நையாண்டி அரசியல் வசனத்துடன் சிறப்பாக செய்தவர்.
விமர்சகர். யாரையும் தனிப்பட்ட முறையில் காயப்படுத்தாதவர்.
எல்லாவற்றிக்கும் மேலாக அரசியல் ஜாம்பவான்கள் , கலை உலகின் சூப் பர் ஸ்டார் கள் , அறிஞர் பெருமக்கள் , பத்திரிகை பெரு முதலாளிகள் என்று அத்தனை பேரிடமும் பழக்கம் இருந்தாலும் யாரிடமும் எதற்காகவும் சலுகைகளை எதிர்பார்காதவர்.
இவரின் முகமது பின் துக்ளக் நாட்டம் இன்றைக்கும் பொருந்தும்
அவரின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுரேன் . .