Sunday, July 17, 2016

kaatril unthan geetham


பாடல் ஓர் நூறு  பேசும் இவர்  பேரு ==

இலங்கை வானொலி கேட்டோர்க்கு     பிறந்த நாள்  இன்று பிறந்த  நாள்  நாம்  பிள்ளைகள் போலே தொல்லைகளை மறந்த  நாள்   இந்த வரிகளை  மறக்க  முடியுமா.

வானமெனும்  வீதியிலே  குளிர் வாடையெனும்  தேரினிலே   ஓடி  வரும்  மேகங்களே  கொஞ்சம்  நில்லுங்கள்   உறவுக்கு  யார்  தலைவன்  என்று கேட்டு சொல்லுங்கள்   மாதாவை  கேட்டு சொல்லுங்கள்  -  அமுத வரிகள் அல்லவா==

உங்கள்  கைகளில்  கனத்திடும்  பணப்பை    வந்த காரணம் உழவனின்  கலப்பை   எங்கள் தோழர்கள்  வழங்கிய  உழைப்பை  உண்டு கொழுத்தது உங்கள்  இரைப்பை     அனல்  தெறிக்கிறதா ...


மூன்றாம்  பிறையில்  தொட்டில்  கட்டி  முல்லை  மல்லிகை  மெத்தையிட்டு ===   இதமாக  இருக்கிறதா --

கற்பனை என்றாலும்  கற்சிலை  என்றாலும்  கந்தனே உனை  மறவேன் =
பத்தி பரவசம் தோன்றுகிறதா ==

வாழ்வில்  சௌபாக்கியம் வந்தது  வந்தேன்  என்றது  தேன்  தந்தேன்  என்றது ====  இனிப்பாக  இருக்கிறதா

சிலர்  ஆசைக்கும்  தேவைக்கும்  வாழ்வுக்கும்  வசதிக்கும்  ஊரார்  கால் பிடிப்பார்   ஒரு  மா னமில்லை   அதில்  ஈனமில்லை  அவர்  எப்போதும்
வால் பிடிப்பார்.    அரசியல் அவலங்களை  கண் முன் நிறுத்துகிறதா ==

இந்த வரிகளின்  சொந்தக்காரர்  யார்   =  வாலியை  தவிர  வேறு யார்.

புதுவை நகரின் புரட்சி கவியின் குயிலோசைதான்  உன் வாய்மொழியோ  என்றும் பவளக்கொடியிலே  முத்துக்கள்  பூத்தால்  புன்னகை  என்றே  பேரா கும்  என்ற வரிகளுக்கு  இன்னொரு கவிஞன்  சொந்தக்காரன்  என்று நாம் நினனைத்துள்ளோம்   ஆனால் இது வாலியின் வரிகள்..

அந்த வாலிப கவிஞரின்  நினைவாக  இந்த பதிவு.

பல நூல் படித்து நீ அறியும்  கல்வி   பொது  நலம் நினைத்து  நீ வழங்கும் செல்வம்   பிறர் உயர்விலினிலே  உனக்கிருக்கும்  இன்பம்   இவை அனைத்திலுமே இருப்பதுதான்  தெய்வம்   என்று வாலியின்  அர்த்தமுள்ள வரிகளுடன்  முடிக்கிரேன் .