Monday, December 5, 2016

விழிநீர் துடைத்து வழி அனுப்புகிறோம்

 போய்  வாருங்கள்.  .

 தென்றலை நீங்கள் தீண்டியதை விட  தீயை நிறைய  தாண்டி உள்ளீர்கள்.

 கோவில் கூடாது என்று சொல்லவில்லை  ஆனால் அது  அன்னதான  கூடாரமாக  இருக்க வேண்டும் என்று  நினைத்தீர்கள்  செயல் படுத்தினீர்கள் .

உங்களின் அம்மா உணவு திட்டம்  காகிதப்பூ மண மில்லை  காண்போர் வியக்கும்  கற்சிற்பம் .

அம்மா இந்த ஒரு வார்த்தை   கோடான கோடி மக்களின்  வார்த்தை  மட்டுமல்ல   கம்பீரம்  துணிச்சல்  எதிர்நீச்சல்  அத்தனைக்கும் அடையாளம். பெண்மைக்கும்  பெருமை  சேர்க்கும் .

கடுமையாக எதிர்த்தோர்  நெஞ்சில் மட்டுமல்ல   உன்னை மறுத்தோர்  மனதில் கூட  உன் ஆளுமை திறமை  வியக்கப்படுகிறது.  ..

அந்த உலகிற்கு   பணி  செய்ய    காலம்   உங்களை அழைத்திருக்கிறது .

போய்  வாருங்கள்  விழி நீர் துடைத்து  வழி  அனுப்புகிறோம்.  

No comments:

Post a Comment