Wednesday, January 13, 2016

thamizhar thirunaal

ஒரு வேதனை  வெளியாகிறது.


 நேர்மையாக  அரசியலில்  செயல்பட்ட   ஒரு தமிழன்  நிராகரிக்கப்பட்டான் .  நாம்  தூங்கினோம் .
 
  திரையுலகில்  திறைமையாக  செயல்பட்ட உலகறிந்த   ஒரு தமிழன் அவமானப்படுத்தப்பட்டான்   நாம் சிலையாக  இருந்தோம்

  தன்  உழைப்பால்  ஒரு  நாட்டின் வளர்சிக்கு  ஆணிவேராய்  இருந்த  ஒரு தமிழினம்     மாளாத்துயரில்  மூழ்கியது. நாம்  உயிரற்று  இருந்தோம் .

 நம் பாரம்பரிய   பொருள்களுக்கு  அந்நியர்கள்  காப்புரிமை  பெற முயற்சிக்கும்போதும்  நாம் பேச்சற்று இருக்கிறோம்

நம் கலாச்சாரத்தின்  ஒவ்வொரு அங்கமாக  சிதைக்கப்பட்டு  வருகிறது ஜல்லிக்கட்டு  காளையென  சீற   வேண்டிய நாம்   நத்தை என  சுருங்கி போனோம் .

 விவசாய நிலங்களை  தண்ணீர் உறிஞ்சவும்  நில வளங்களை சுரண்டவும்  மெளனமாக  பார்த்திருப்போம்


நண்பா  தமிழன் என்றொரு  இனமுண்டு  தனியே  அவனுக்கொரு  குணமுண்டு
என்று  நாம்  பழம் பெருமை பேசிக்கொண்டே  மிச்ச சொச்ச காலத்தையும்
மகிச்சியுடன் ???????   கடந்திடுவோம்.


இதையும்  மீறி       ஒரு நாள் உலகம்  நீதி  பெரும்  திருநாள்  நிகழும் சேதி வரும்   என்ற  நம்பிக்கையுடன்     அன்பு  உள்ளங்கள்  அத்தனைக்கும்  இனிய  தமிழர்  திருநாள்  வாழ்த்துகள்..

No comments:

Post a Comment