Monday, December 22, 2014

kakkanji

இவர் யாரென்று தெரிகிறதா===

சத்தியமூர்த்தி  காமராசரை அரவணைத்து கொண்டது போல்  மதுரை வைத்திநாத ஐயர்  இவரை அரவணைத்தார்..

தோழர் ஜீவாவின் தலைமையில்  திருமணம் செய்து கொண்டவர்.

காமராசரின் காலத்தில் உள்துறை, பொதுபணித்துறை, விவசாயம் , மது விலக்கு  அரிசன நலம் போன்ற முக்கிய அமைச்சர் பதவிகளை வகித்தவர்.
(இவருக்கு பிறகு  திராவிட கழக ஆட்சியில்  ஒரு தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்தவருக்கு  இவ்வளவு முக்கியமான துறைகள் கொடுக்கப்பட்டது இல்லை. )

சுமார் பத்தாண்டு காலம் தொடர்ந்து பதவிகளில் இருந்தாலும் சொந்த வீடில்லாதவர்.

நோயுற்றபோது அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றவர். ( இவரின் நிலை கண்டு  பதறிய  மக்கள் திலகம் வேண்டிய உதவிகளை செய்ததாக செய்தி-- ஆனால் கக்கன் அதை உறுதியாக மறுத்து  மக்கள் திலகத்திற்கு நன்றி செலுத்தினார்.                                                                                                                                        

பொது வாழ்வில் நேர்மையின் இலக்கணமாய் வாழ்ந்தவர். -- திரு கக்கன். அவர்கள்.

ஐயா என் போன்றவர்களால் உங்களை மறக்க முடியுமா.  நீங்கள் பயணித்த பாதையில்  ஒரு சில அடிகளாவது  நாங்களும் பயணிக்க  ஆசி கூறுங்கள்.  





No comments:

Post a Comment