Sunday, September 22, 2019

மண்டை கொழம்புது  மகாதேவா ..

நீண்ட நாள் கழித்து என் நண்பன் ஒருவனை சந்தித்தேன். இருவருமே திரை இசையில் ஆர்வம் உள்ளவர்க. பேச்சு இசையை பறி வரும்போது  என்னமோ எனக்கு இளையராஜாவை ரொம்ப பிடிக்கும்  காரணம் அவர் பாடலில் நம் மண் சார்ந்த இசை இருக்கும் என்று சொன்னேன்.. பின் எங்கள் உரையாடல் வேறு தளத்திற்கு சென்றது . பிறகு நண்பன் உனக்கு பிடித்த அடிக்கடி முணுமுணுக்கும் பாடல்கள் சில யோசிக்காமல் சொல் என்றான்.  நான் சொல்ல ஆரம்பித்தேன்   . 
முதல் பாடல்  உன்னிடம் மயங்குகிறான் உள்ளத்தால் நெருங்குகிறான் என்ற பாடல் அதன் ஆர்ப்பாட்டமில்லாத இசையினால் பிடிக்கும். ஏழு சுவரங்களுக்குள் எத்தனை பாடல்  என்ற இனிமையான குரலுக்காகவும் கருத்துக்காகவும் பிடிக்கு.ம்       அடுத்து  கங்கை நதி ஓரம் ராமன்  நடந்தான்  என்ற பாடலும்  வைகை காற்றே நில்லு என்ற பாடலும் இனிமைக்காக பிடிக்கும்.  யார் அந்த நிலவு பாடல் சிவாஜி ஸ்டைலுக்காக பிடிக்கும்  இவையெல்லாம் தனிமையில் எப்போதாவது என்னையும் மீறி முணுமுணுக்கும் பாடல்கள் என்று சொல்ல  நண்பன் இடைமறித்து  இதில் இளையராஜா இசை அமைத்த பாடல் எது என்று கேட்க திரு திரு  என்று முழித்தான். எம் எஸ் வீ  கே வீ  மஹாதேவன்  இளையராஜா   போன்ற இசை மேதகைகளின் பாடல்கள் எனக்கு ரொம்பவே பிடிக்கும். ஆனால் இளைய ராஜாவின் இசை என்னை வேறு உலகிற்கு கொண்டு செல்லும் ,

அதை நண்பன் மறுத்து  எல்லோருடைய இசையும் சிறந்ததுதான் சில பாடல்கள் நம் உணர்வுடன் கலந்து விடுகின்றன . இதே மாதிரி நீ வேறு சிலரிடமும் கேட்டு பார். இப்படித்தான் இருக்கும் என்றான்.  நண்பன் சொன்னது சரியா.

எனக்கு மண்டை கொழம்புது.  உ ங்களுக்கு இது பற்றி கருத்திருந்தால் பதிவிடுங்கள்  .  

No comments:

Post a Comment