Monday, September 23, 2019

 புதுச்சேரி வானொலி நிலையம்.....   காலங்கள் மாறி விட்டன  வானொலி கேட்பது குறைந்து விட்டது. இருப்பினும்  நான் இன்னும் வானொலியின் ரசிகன்தான்.

நினைத்து பார்க்கிரேன் . புதுவை கடற்கரை  சாலையில்  வானொலி நிலையம். அது ஒலி  பரப்பும் நேயர் விருப்பமும் பக்தி பாடல்களும்  மனதில் பசுமரத்து ஆணி போல் பதிந்துள்ளது.

காலையில் நம் மண்டையி அடித்து எழுப்பி விடும்  பக்கத்தின் பாடல்களில் சில....தட்டுங்கள் ர்    முக்காடு போட்டுக்க முஸ்லீம் பெண்னே      கந்தன்  திருநீறணிந்தால் கண்டா பிணி ஓடி விடும் ... மனசை விட்டு அகலா பாடல்கள். 

நேயர் விருப்பம்  மதியம் ஒரு மணி முதல் ஒன்று முப்பது வரை . வயிற்றுக்கும் செவிக்கும் உணவு / 

நிறைய பேருக்கு தெரியாது  காலையில் அரை மணி நேரம் ஹிந்தி வகுப்பு நடை பெரும் . புது வை தமிழ் அறிஞர்களின் ஒருவரும் பட்டிமன்ற  பேச்சாளருமான  திரு ராமசாமி அவர்கள் வகுப்பு  எடுப்பார். எனது சகோதரன் சீனுவாசன் ஒரு மாணவனாக அதில் பங்கேற்றான். 

அப்போது நிலையத்தில்  இருந்த ரேடியோ அண்ணா  சிதம்பரம்  திருமதி கங்கா  மணி  பாலு மற்றும் சிலர் எங்கள் குடும்ப நண்பர்கள். மேலும் நிலைய கலைஞர்கள்  திரு வைத்தியநாதன்  ஆணையம் பட்டி கணேசன் ஆகியோரும் பழக்க்கம். ஒரு கொசுறு செய்தி  திரு வைத்தியநாதன் அவர்களின் புதல்வர்கள் தான் பிக் பாஸ் மோகன் வைத்யா  வீணை இசை கலைஞர் ராஜேஷ் வைத்யா

புதுவை எல் ஐ சி கிளையில்  அப்போது கதிரவன் என்று ஒருவர் இருந்தார். இலக்கியத்தில் மிகுந்த ஆர்வம் ம்கொண்டவர். அவர் புதுவை வானொலிக்கு ஒரு நாடகம் எழுதி அது ஒளிபரப்பாகியது. அவர் என்னையும் ஊக்கப்படுத்தி ஒரு நாடகம் எழுக சொன்னார். நானும் எழுதினேன். என்னால் கூட அதை நாடகம் என்று ஏற்க மனமில்லை. இன்னும் அது அப்படியே இருக்கிறது.  இன்னொரு கொசுறு செய்தி  அந்த கதிரவன் சார் வைரமுத்து திரைக்கு வருவதற்கு முன் என்னை அவரிடம் அறிமுக படுத்தி வைத்தார்.. 

இப்போதுகூட  நான் பணியாற்றியபோது உடன் பனி புரிந்த திருமதி ஸ்ரீ ப்ரியா கணவரும் வானொலியில் பனி புரிகிறார்.  மற்றொரு இடது சாரி சிந்தையாளர் ராம் ம்குமார் கூட அங்கு பனி புரிகிறார்ட்.    என்னுடைய புதுச்சேரி  வானொலி நிலையத்தின் தொடர்பு நீடித்து கொண்டிருக்கிறது.  வாழ்க புதுச்சேரி வானொலி நிலையம்  .. 


    . 

No comments:

Post a Comment