Sunday, September 22, 2019

ஒருமுறை  எனது காரில் சென்னை  சென்று திரும்பி வந்து கொண்டிருந்தோம். ஒரு கேசட் போட்டு பாட்டு கேட்டுக்கொண்டே வந்தோம்.  . ஏன்  தெரியவில்லை டிரைவர் கடுப்படித்து கொன்டே வந்தார்/ பொறுத்து பொறுத்து பாத்தேன்  பின் அவரிடம் என்ன உங்களுக்கு பிரச்சனை  என்று கேட்டதும்  பின்ன என்ன சார்  இந்த பாட்டெல்லாம் போட்ட  நான் எப்படி வண்டி  ஓட்றது , ஒரே தூக்கமா வருது என்றா. நான் பாட்டை நிறுத்தி விட்டேன்

அந்த பாடல்கள்      காலங்களில் அவள் வசந்தம் ,  நிலவே என்னிடம் நெருங்காதே   பாடாத பாட்டெல்லாம் பாட வந்த ஆள் . பிறகு அவரே என்னிடம் சார்கோ ச்சிக்காதீங்க  எனக்கு பீ பீ சீனிவாஸ் பாட்டுன்னா உசுரு சார்  ஆனா வண்டி ஓட்டும் போது  அர்த்தமில்லாதம் லாப திபோன்னு கத்துற பாட்டுதான் சார் எங்களுக்கு தூக்கம் வராது இருக்கும் என்றா. இது எப்படி இருக்கு. 

 பீபி  சீ னுவாஸ் பாடல்களை  ரசிக்கும்போது  கிருஷ்ணா ஸ்வீட்ஸ்   மைசூர் பா  சாப்பிடும்போது  நாக்குல கரையுமே  அந்த மாதிரி  காதுல கரையும் . உண்மைதானே ..

No comments:

Post a Comment