Thursday, September 17, 2015

ganesanai enakku romba pidikkum

கணேசனை எனக்கு  ரொம்ப பிடிக்கும்.  

கண  என்றால் குழு  என்றும்   பதி  என்றால்  முதன்மையானவன்   என்றும்  சமீபத்தில் இணையத்தில் படித்தேன் .

கணேசன்  குழுக்களின்  முதல்வன்  அன்றும் இன்றும் என்றும்.

கணேசன் சிலையை   போற்றவும்  செய்வர்  தூற்றவும் செய்வர். எதை பற்றியும் கவலை இன்றி தன்  வழி செல்லும்  நம்பிக்கைக்கு உரியவர்.

எல்லோர் இதயங்களிலும்   கொலுவிருக்கும்  கணேசன்   சிலையை  உடைத்தொரும் உண்டு  அகற்ற  நினைத்தொறும்  உண்டு.

 தாயை போற்றிய கணேசன்   தாயை    அன்னை இல்லத்தில் வைத்து பூசித்தார்.

கணேசன் படமாகவோ  சிலையாகவோ  வெளி வருகிறார் என்றால்  திருவிழா கோலம்தான் .

 தோரணங்கள்  வாத்தியங்கள்  மக்கள்  கூட்டம்  மகிழ்ச்சி வெள்ளம் .

கணேசன் கலைஞர்களுக்கு  வரப்ரசாதம் . அவரை எப்படி வேண்டுமானாலும் பார்க்கலாம் .  இசை கருவிகளை வாசிப்பவனாக ,  விளையாட்டு வீரனாக
எப்படி வேண்டுமானாலும் தோன்றுவார்.

கலைஞருக்கு மிகவும் பிடித்த கணேசன்.

கணேசன் எளிமையானவர்.  

கணேசன்  குழந்தைகளுக்கு பிரியமானவர் . கணேசன் பெரியவர்களுக்கு
நம்பிக்கை நாயகன் .

இனம் மதம்  நாடு கடந்து கணேசன் எல்லார்க்கும்  பிடிக்கும்

எனவே எனக்கு  கணேசனை பிடிக்கும். .

இன்று  பதிவிட்டிருக்கிறேன்   எந்த கணேசன்  உங்கள் யுகத்திற்கு. நீங்கள் எந்த கணேசனை  நினைத்தாலும்  எனக்கு மிகவும் பிடித்தமானவரே .


No comments:

Post a Comment