Friday, December 7, 2012

viswaroopam

கமல் திறைமையான கலைஞர் தான்  அதில் சந்தேகம் இல்லை.  ஆனால்  திரையுலகில் இப்போது வருகிறவர்கள் கூட அவரை தாண்டி உயரமான இடத்துக்கு சென்று கொண்டிருகிராகர்கள் வியாபார ரீதியான வெற்றி படங்களை தருவதி.ல் ..

ஒரே நாளில் தொலைகாட்சியிலும்  திரை அரங்கங்களிலும்  தனது விஸ்வரூபம் படம் வெளியாகும் என்ற அதிர்ச்சி செய்தியை கசிய விட்டிருக்கிறார்.(அதிர்ச்சி நமக்கல்ல )கமல்.

சினிமா வட்டாரத்தில்  மாஸ் ஒபெனிங் என்ற  சொல் வுண்டு . அதாவது படம் திரையிடப்பட்ட அன்று  மிகப்பெரிய ஜனத்திரள் இருக்கும்  முதல் மூன்று நாட்களில்லேயே  கணிசமான வசூலை தயாரிப்பாளர் பெற்றிடுவார் . ஆனால் இந்த மாஸ் ஒபெனிங்  எல்லா நடிகர்களுக்கும் கிடைக்காது,

மாஸ் ஒபெனிங்  உள்ள நடிகர்கள்  முதலிடம் ரஜினி , பின் அஜீத் விஜய் சூர்யா  தான். இதில் கமலுக்கு இடம் கிடையாது.  கமல் படம்  முதல் நாள் அவரது ரசிகர்களால் நிரம்பி வழியும் பின் படத்தின் ரிசல்ட்  பொறுத்து  வசூல் அமையும்.  கமல் உலக நாயகனாய் இருந்தாலும்  இதுதான் படத்தின்  வசூல் நிலை.

சரி விழயத்துக்கு வருவோம் . விஸ்வரூபம் மிக நவீன தொழில்  நுட்பம் பயன்படுத்தப்பட்டு  மிக அதிகமான் பொருட்செலவில்  தயாரிக்கப்பட்ட படம்  .
கமல் இதில்  தான் சம்பாதித்தது அனைத்தையும்  முதலீடு செய்திருக்கிறார் .
கமலின் செலவை பார்த்து இரு விநியோக கம்பனிகள்  அதிலிருந்து விலகிவிட்டன  அதில் ஒன்று ஜெமினி கம்பெனி . போட்ட பணத்தை சிறிது  லாபத்துடன்  எடுக்க வேண்டுமானால்  வேறு எதோ வகையில் தான்  திரையிட வேண்டும்.  எனவே தான் கமல் ஒரே நேரத்தில் டிவி மற்றும் திரை அரங்குகளில் திரையிட எண்ணியுள்ளார் . இது சம்பந்தம்மாக டாட்டா  SKY
நிறுவனத்திடம்  ஒரு இணைப்புக்கு ஆயிரம் ரூபாய்  என்று பேசி இருப்பதாக தகவல் .

சுயநலத்திற்காக செய்தாலும்  ஒரு புதிய பாதைக்கு வழி வகுத்துள்ள  கமலுக்கு  நம் பாராட்டுதல்களை தெரிவிப்போம் 

No comments:

Post a Comment