Saturday, December 1, 2012

நீர் பறவை  திரை விமர்சனம் .

       எதிர்பார்புகளுடன்  சென்ற எனக்கு ஏமாற்றமே.

        சுவாரசியமே இல்லாத திரைகதை.  கொட்டாவி விட செய்யும் காட்சி அமைப்புகள் . எல்லாவற்றிற்கும் ஒரே முக பாவம் காட்டும் கதாநாயகன் .
காதலை மைய்யப்படுத்துவதா , இலங்கை கடற்படையினரால்  தமிழக மீனவர்கள் சுடப்படுவதை பற்றியா ,  சிறுபான்மை மக்களை  பற்றியா,
கடல் வாழ் மீனவர்களை பற்றியா  இல்லை சாதீய பிரச்சனையா  எதை எடுத்துகொள்வது என்ற தடுமாற்றத்தில்  இயக்குனர்  எல்லாவற்றிலும்
கொஞ்சம் கொஞ்சம் எடுத்து  நம்மை பாடாய்  படுத்திஇருக்கிறார் .

சில நல்ல விழயங்கள் சொல்ல வேண்டுமானால்  ஒளிப்பதிவை  சொல்லலாம்.
 சரண்யா நடிப்பை சொல்லலாம்.

இப்படத்திற்கு வரி விலக்கு  கேட்டு இயக்குனர் உண்ணாவிரதம் இருந்ததாகவோ  அல்லது இருக்கப்போவதாகவோ  என் நண்பன் என்னிடம் கூறினான் .  அந்த செய்தி உண்மையாக இருந்தால்   அவரது கோரிக்கைக்கு
செவி சாய்த்து  இன்னும்   கூடுதல் சலுகையாக  படத்தை இலவசமாக
பார்க்க வழி செய்யலாம் .  என்னை போன்றவர்களின் பணமாவது மிச்சப்படும்.

இதனால் அறியப்படுவது யாதெனில்    அதி மேதாவித்தனம் ஆபத்தானது .

No comments:

Post a Comment