Tuesday, December 11, 2012

bharathi

பாரதி            11.12 2012

 ஒப்பனை இல்லா  கவிஞன்
  ஒப்பற்ற கவிஞன்
  வீட்டை மறுதலித்து
   நாட்டை நேசித்த உத்தம கவிஞன்

   அடிமை  தேசத்தை  விடிவிக்க
    கவிதை ஆயுதம் எடுத்தான்
    கண்ணம்மா வை  காதலித்தான் 
    கயவர் மீது கவிதை சாட்டை வீசினான்
   
     தரித்திரத்தில் தவழ்ந்தான் ,
      சரித்திரத்தில் வாழ்கிறான்

       புதுவையின் தத்து புதல்வன்
       புதுமையின்  வித்தானவன் .

       அந்த அக்னி குஞ்சுக்கு இன்று பிறந்த நாள் .

        பாரதியை மறந்த  குருடர்களாய்  இருந்தாலும்
        பாரதியின்  பார்வையிலாவது  பாரதத் தை  பாப்போம் . 

No comments:

Post a Comment