சிப்பி இருக்குது முத்து இருக்குது திறந்து பாக்க நேரமில்லைடி ராஜாத்தி
என்ற பாடலை இன்று கேட்க நேர்ந்தது .
சில பாடல்கள் கேட்க நன்றாக இருக்கும் காட்சி அமைப்பு சகிக்காது .
சில பாடல்கள் காட்சி ய மைப்பு பிரமாதமாக இருக்கும் . பாடல் சொதப்பி விடும். ஆனால் மேலே கூறிய பாடலில் இசை, காட்சி அமைப்பு, நடிக நடிகையின் திறமை, பாடல் வரிகள் அத்தனையும் சரிவிகித கலவையாக
சேர்க்கப்ப்பட்டு இருக்கும்.
இந்தப்பாடலில் கமழும் ஸ்ரீதேவியும் தூள் கிளப்பி இருப்பார்கள். பாடலை ஒரு முறை கேட்டு பாருங்கள். கொடுத்த சந்தங்களில் என் மனதை நீயறிய நான் உரைத்தேன் என கமல் பாடும்போது அதுவரை உற்சாக மூடில் இருந்த ஸ்ரீதேவி சட்டென்று மௌனமாகி கண்ணில் நீர் தளும்ப கமலின் மீது சாய்வார் . பின் விரல் கோர்த்து நடப்பார் . கண்ணியமான நயமான காதல்
காட்சி .
No comments:
Post a Comment