Monday, December 24, 2012

dhariyaimaai sol nee manithan thaanaa

தைரியமாய் சொல்  நீ மனிதன்தானா ???.

        டில்லி கற்பழிப்பு சம்பவம்  நாட்டையே உலுக்கி கொண்டிரிக்கிறது .
         ஒவ்வொருத்தர்
ஒவ்வொன்று சொல்லி கொண்டிருக்கிறார்கள்.
       
         நம்ம தத்து பித்து  உளறுவாயன்  மன்னிக்கவும் ஓலக நாயகன்  அவரும்
         அவர் பங்கிற்க்கு  செப்பியிருக்கிறார்.  எப்படி தெரியுமா ?  பத்திரிக்கையில்
          அவர் சொன்னபடியே

                          அந்த பஸ் என்னுடைய பஸ்  --  அந்தப்பெண்  என்னுடைய
                           சகோதரி   --  கற்பழித்த -- அந்த நபர் என்னுடைய சகோதரன் .
                            கற்பழிப்பு குற்றத்திற்கு தூக்கு தண்டனை  தேவையில்லை .


          அடப்பாவி  மக்கா -   பெற்ற தாயே   குற்றப்பின்னணி உள்ளவனை
           தன மகன் என்று சொல்ல கூச்சப்படுவாள் .  ஆனால் அதி மேதாவி நீயோ
           அவனை உன் சகோதரன் என்று சொல்கிறாயே  வெட்கமாயில்லை.

            நடை பெற்ற சம்பவம்  சினிமா ஷூட்டிங்  அல்ல . பாதிக்கப்பட்ட
பெண்ணின்  உறுப்புகள்  சிதைக்க  பட்டிருக்கிறது .  கடந்த சில நாட்களாக
உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறாள்  அந்த பெண்.

 இன்று எதேச்சையாக கேபிள் டிவியில்  நாடோடி மன்னன் படம் பார்த்தேன் .
50 வருடங்களுக்கு முன்னாள் எடுத்த படம் . அதில் ஒரு காட்சியில் மக்கள் திலகம்   அரசனாக ஒரு சில அறிவிப்பை வெளியிடுவார். அதில் முக்கியமான
ஒன்று

                         கற்பழிப்புக்கு தூக்கு  தண்டனை . மற்ற குற்றங்களுக்கு
                         மன்னிப்பு உண்டு . கற்பழிப்பு குற்றத்துக்கு மன்னிப்பே கிடையாது
                          என்பார் .

அந்த மக்கள் திலகம் எங்கே . எதோ தன்னை அறிவு ஜீவியாக  பாவித்துக்கொண்டு  தனக்கும் புரியாமல் மற்றவருக்கும் புரியாமல் பேசிக்கொண்டிருக்கும்   நீ எங்கே .  நாளை  பாவங்களை ரட்சிக்கும் ஏசு பிறந்தநாள்.   அந்த ஏசுகூட இந்த பாவத்தை மன்னிக்க மாட்டார்

   பரலோகத்தில் இருக்கும் எங்கள் பிதாவே  இந்த பாவிகளை
   மறந்தும் கூட மன்னித்து விடாதே . ஆமென் .


No comments:

Post a Comment