Thursday, November 22, 2012

intha yosanai saathiamaa

இது சாத்தியமா?

 சமீபத்தில் ஒரு பத்திரிக்கை செய்தி பார்த்தேன்.
 ஒரு வருடதிற்கு  சுமார் ஒரு லட்சம் மாடுகள்  தமிழகத்திலிருந்து  அண்டை மாநிலத்திற்கு இறைச்சிக்காக  கடத்தப்படுகின்றன  என்பதுதான் அந்த செய்தி.

பயோ கேஸ்  மூலம் எரிவாயு  கிடைக்கும் என்பது நம் அனைவருக்கும் தெரியும்.

மின் தட்டுப்பாடு இப்போது நம் முன் உள்ளமிகப்பெரிய பிரச்சினை . அணு நிலையங்களை பயன்படுத்துவது நிலக்கரியை பயன் படுத்துவது ஆகட்டும்
அது ஒரு பக்கம் நடக்கட்டும் .  மாட்டின் சாணத்தின் மூலம்  எரிவாயு பயன்படுத்துவது  சாத்தியம்தானே .

இறைச்சிக்காக மாடுகளை விற்பதை விட  அரசே அதைபராமரித்தால்
ஒரு லட்சம் மாடுகளின் சாணம் சிறிது அளவாவது  எரிபொருள் பயன் பாட்டை  குறைக்கும் அல்லவா.

மேலும் அரசே கால்நடை வளர்ப்பை  ஊக்க்கப்படுத்தினால் .  இன்னமும்
எரிவாயுவை சேமிக்கலாம் அல்லவா .

No comments:

Post a Comment