Thursday, November 1, 2012

ippadiyum kooda

இன்றுமாலை  உறவினர்கள் சிலர் எங்கள் வீடிற்கு வந்திருந்தனர் .
அவர்களுடன் உரையாடியதில் சில  விஷயங்கள்  எனக்கு பிடிபடவே இல்லை.

அவர்கள் இரண்டு நாள் மழையை பற்றியும்,நீலம் புயலை பற்றியும் பேசியபோது  அவர்கள்எடுத்த முன் எச்சரிக்கை  நடவடிக்கை பற்றி 
ஒவ்வுருவரும்  கூறினர் . 

தானே புயல் அனுபவத்தை கொண்டு  தான் முதலிலேயே 6 பாக்கெட் 
பால் வாங்கி விட்டதாகவும், இன்னொருவர்  5 பாக்கெட் மெழு வர்த்தி 
வாங்கி வைத்துவிட்டதாகவும், மற்றொருவர்  வண்டிக்கு பெட்ரோல் 
மொத்தமாக போட்டு விட்டதாகவும் , மேலும் ஒருவர் இன்வேர்ட்டர் ஐ  சரி செய்து விட்டதாகவும்  என்று ஒவவொருவரும்  ஒரு முன் எச்சரிக்கை 
நடவடிக்கை பற்றி கூறினார். நான் கூட பரவாயில்லையே  மக்கள் தெளிவாகத்தான் இருக்கிறார்கள் என்று நினைதேன். 

ஆனால் அடுத்து பேசியதுதான்  என்னை  அதிர்ச்சி அடைய செய்தது.

நாம் இவ்வளவு பாடு பட்டது  வீணாபோச்சே . கொஞ்சம் கூட சேதம் இல்லாமல் புயல்  எங்கோ  போய்  விட்டதே . பால் பாக்கெட் வேஸ்ட் .
பெட்ரோலில் காசைமுடக்கி விட்டேன் . கடன்காரங்க வழக்கமா  போற 
கரண்டை கூட  கொஞ்ச நாழி மட்டும் நிறுத்தி  மத்தபடி சரியா கொடுத்துட்டானே .  நான் டிவி க்கு  கரண்ட் இருக்கதுன்ன்னு  தேடிபிடித்து 
என் பழைய ரேடியோவை கண்டுபிடித்து அதுக்கு நாலு battery  வேறு போட்டு  ம்  ம்   எல்லாம் சுத்த வேஸ்ட்என்று    இந்த ரீதியில் புலம்பல்கள்  

அப்ப்பாடா  ஒரு வழியாக புயல் கடந்தது என்று ஒருசாரார்   மகிழ்ந்து  கொண்டு  இருக்க இன்னொருபக்கம் .  இப்படி ஓர்  விசாரம்.

எனக்கு மண்டை கொழம்புது  நீங்களாவது ஏதாவது சொல்லுங்களேன் .


    


No comments:

Post a Comment