Saturday, October 27, 2012

pizza thiraipadam oru paarvai

இன்று மாலை என் நண்பன் போன் செய்து  pizza padam paarthu vaa  என்று கட்டளை
இட்டான். நானும் அவனும்  வித்தியாசமான படங்களை தேடி பார்க்கும் குணம்
கொண்டவர்கள் . உலக படம் முதல் உள்ளூர்  படம் வரை  பார்த்து விடுவோம்.
சில படங்கள் வித்தியாசங்கள் என்ற பெயரில் கழுத்தறுத்து தொலையும் .
சிலபடங்கள்  காட்சி அமைப்பில் வித்தியாசம் கொண்டிருக்கும்.

நண்பன் இட்ட கட்டளையை சிரமேற்கொண்டு  மாலை காட்சிக்கே சென்று விட்டேன்.  நானும் பேய் படத்தில் என்ன வித்தியாசம் இருக்கப் போகிறது என்று  நினைத்து கொண்டே  படத்திற்கு சென்றேன்.  ஆனால் படம் பார்க்காமல் இருந்திருந்தால் ஒரு யூகிக்க முடியாத கதையையும் கிளைமாக்ஸ்  காட்சியையும்   காணத் தவறியவனாய் இருந்திருப்பேன் .

நகைச்சுவை இல்லை, பிரபலங்கள் இல்லை, களியாட்டங்கள் இல்லை
இருந்தும் நம்மை திகிலுடன் படம் முழுக்க கை பிடித்து அழைத்து செல்லும்
இயக்குனருக்கு ஒரு சபாஷ் நிச்சயமாய் போடலாம்.

மசாலா மனம் இல்லாத இந்த pisssa  எருமைதயிரில் சாதம் பிசைந்து வத்தக்குழம்பு  ஊற்றி  சாப்பிட்டது போல்  இருந்தது.

அசைவ பிரியர்களுக்கு  வைரமுத்து பாஷையில் சொல்ல வேண்டும் என்றால் உப்பு கருவாடு ஊற வைத்த சோறு ..

No comments:

Post a Comment