Monday, October 1, 2012

solla thudikkuthu manasu

 நேற்றைய நீயா நானா  நிகழ்ச்சி -- எது   சந்தோசம் என்ற கேள்விக்கு  பலர் பலவிதமான  பதில்களை கூறினர் . அத்துடன் அவர்கள் பெற்ற  உச்சகட்ட
சந்தோசம் பற்றியும் கூறினார்.  ஆனால் ஒரு நண்பர் சொன்ன செய்தி என்னை
அதிர்ச்சியின்  உச்சத்திற்கே  கொண்டு  சென்றது .

தன் மகளின் மஞ்சள் நீராடு விழாவை  சிறப்பாக நடத்தியது குறித்து அவர் மிகவும் சந்தோஷப்பட்டார் . பொதுவாக ஒரு பெண்  பூப் பெய்து விட்டால்
அவளின்குடும்பதினர்  சடங்கு என்கின்ற பெயரில்  ஊரை கூடி  விழா  எடுப்பது
வழக்கமான ஒன்றுதான் . அதன்  உள் அர்த்தம்  எனது மகள் திருமண பந்தத்திற்கு தயாராகி  விட்டாள்   என்பதுதான்

காலப்போக்கில் மஞ்சள் நீராடு விழா  என்பது தன்  அந்தஸ்தை வெளிப்படுத்தும்  ஒரு நிகழ்வாக மாறி விட்டது.

ஆனால் இந்த நண்பர்  அந்த விழாவை , தன் பெண்ணை  helicopter ல்
அழைத்து வந்து  விழாவை நடத்தினாராம். அதற்க்கு அவர் பட்ட சிரமங்களையும்  சொன்னார்  helicopter வாடகை   fire service permission, helipad
pondravaigalukka  மெனக்கட்டதையும்  சொன்னார்.  எனக்கு அட பைத்தியக்கார
என்றுதான் சொல்ல தோன்றியது.  டி வீ யில்  அந்த  வீடியோ   காட்சியையும்
காண்பித்தார்கள் .

உளவியல் ரீதியாக பிஞ்சு மனங்கள்  சஞ்சலத்தில் இருக்கும் போது
இப்படி ஒரு விழா தேவை இல்லை என்பதே என் கருத்து . இதில்  helicopter ல்
வைத்து விழாவை நடத்தி அதில் சந்தோசம் கண்டார் என்று சொன்னால் ????

எங்கே போய் கொண்டிருக்கிறோம்  நாம்?

No comments:

Post a Comment