Saturday, October 20, 2012

50th year indo china warindo china war 50th year

இந்தியசீனப்போர்  1962 ஆம் ஆண்டு நடைபெற்றது. ஏறக்குறைய ஒரு மாதம் நடந்த இந்த போர்  நவம்பர் மாதம்  முடிவுற்றது.

அப்போது நாங்கள் பள்ளி மாணவர்கள். இந்தியர்களை சீனர்கள் தாக்க்குகிரார்கள்  என்பது மட்டுமே எங்களுக்கு தெரியும் , அதன் காரணம் 
எதுவும் தெரியாது. எங்களுக்கு தெரிந்தது எல்லாம்  நேரு,  சூ என்  லாய் 
தலை லாமா ஜான்  கென்னடி  என்றசில தலைவர்களின்  பெயர்கள் மட்டுமே. 

ஆனால் தேச பக்தி என்ன என்பது பற்றி அப்போது உருவான எழுச்சி 
என் கண் முன்னே இப்போதும் பளிச்சென தெரிகிறது. 

சிங்க நாதம் கேட்குது சீன நாதம் ஓடுது  என்ற பாடலை நாங்கள் 
அனைவரும் பாடிக்கொண்டு வீதிகளில் வளம் வந்தது, அனைவரிடமும் 
உண்டி ஏந்தி  காசு கேட்டு அந்த காசை  பாது காப்பு அதிகாரிகளிடம் கொடுத்தது  ஒரு சீனனாவது  கிடைத்தால்  உடைக்க வேண்டும் என்ற எண்ணம் உதித்தது போன்றவை  நெஞ்சில் என்றென்றும் நீகாத  நினைவுகள். 

 சீனா   commun ist country. அதனால் தானோ  என்னவோ  communist  களை 
 இன்றுவரை  என்னால் ஏற்க  முடியவில்லை.

No comments:

Post a Comment