சூர்யாவின் மாற்றான் படத்தை காண இன்று காலை முதலே தயாராகி விட்டேன் . சூர்யா காஜல் கே வீ ஆனந்த் கூட்டணி வலுவான கூட்டணி அல்லவா . நீண்ட நாட்களுக்கு பிறகு ரத்னா தியேட்டர் சென்றேன்.பரவாயில்லை ஒலி ஒளி அமைப்புகள் கச்சிதம்.
கதை சுலபமாக ஊகிக்க கூடியதுதான் . ஆனால் காட்சி படுத்தியிருக்கும் விதம் மிக அருமை. சூர்யா அப்பப்பா என்ன ஒரு ஈடுபாட்டுடன் உழைப்பு
நடனம் அமர்க்களம் என்றால் சண்டை காட்சியோ அனல் . குறிப்பாக ராட்சச
ராட்டினங்களில் நடைபெறும் சண்டை காட்சி அசத்தல் . ஏறக்குறைய அனைத்து காட்சிகளிலும் சூர்யாவே வியாபித்திருந்தாலும் துளி கூட அலுப்பு தட்டவில்லை . சிவாஜி எம் ஜி யார் கமல்போன்றவர்களுக்கு மட்டுமே இது சாத்தியம் . hats off soorya.
அடுத்து காஜல் . எந்த கோணத்தில் பார்த்தாலும் அழகு பதுமையாய் தெரிகிறார் . ஆபாசம் கவர்ச்சி இரண்டிற்கும் என்ன வித்தியாசம் என்பவர்கள்
இந்த படத்தில் KAAJALAI பாருங்கள். துளிகூட முகம் சுளிக்க வைக்காத அழகு.
கே வீ ஆனந்த் DHONI மாதிரி எலிகாப்டர் ஷாட் அடித்திருக்கிறார் .
PHOTOGRAPHY கலை இத்தனை அழகானதா . நாணி கோணி என்றொரு பாடல்
காட்சி . உலகின் மொத்த அழகையும் ஒருதிரைக்குள் கொண்டு வரும் ரசவாத
வித்தை செய்து காண்பித்திருக்கிறார் .
சோலை புஷ்பங்களே என் சோகம் சொல்லுங்களே பாடல் காட்சியில் நடித்தவரை நினைவிருக்கிறதா . அமாம் இங்கேயும் ஒரு கங்கை தாராதான் .அம்மா வேடத்தில் அசத்தியிருக்கிறார்.
இரண்டு சூர்யாக்களும் குழந்தையில் இருந்து பெரியவர் ஆகும் வரை ஒரு பாடல் காட்சி மிகவும் நயமாக செதுக்கபட்டிருக்கிறது. கலீல் கிப்ரான் , பாரதியார் பகத் சிங் , செல்போனில் CHE QUARA படம் என்று ஒரு சூர்யாவின் கேரக்டரை நளினப்படுதியிருக்கிறார் இயக்குனர்.
உயிர்ருக்கு போராடிக்கொண்டிருக்கும் சூர்யா உதவிக்கு காரில் செல்பவர்களை கூப்பிட யாரும் கவனிக்காமல் போக, ஒரு ஆட்டோ அருகில் வரும்போது சூர்யா அண்ணே காப்பதுங்கன்னே என்று கூற ஆட்டோ
டிரைவர் உதவிக்கு வரும்போது தியேட்டரில் எழுந்த ஆரவாரம் டைரக்டர்
சொல்ல வந்ததை அழகாக சுட்டிக்காட்டியது.
இன்னொரு அழகான காட்சி. ஒரு சூர்யா மங்காத்தா
படம் போக எத்தனிக்க
ஒட்டிக்கொண்டிருந்த இன்னொரு சூர்யா நண்பன் படம் பக்க இழுக்க இருவரும் சேர்ந்து கர்ணன் படம் பார்ப்பது சில நொடிகளே வரும் ஒரு ஹைக்கூ .. ஹோட்டலில் காஜல் சூர்யாவிற்கு இரண்டு ரூம் மேனேஜர் தர
ஒரே ரூம் போதும் என்று சூர்யா சொல்லிவிட்டு , உன் மேல் எனக்கு நம்பிக்கை இருக்கிறது என்று KAJALAI பார்த்து சொல்வத அழகு .
ஆனால் படம் முடிந்து வெளியில் வரும் போது , ஒரு பிரம்மாண்ட பொருட்காட்சியை கண்டு ரசித்து வெளியில் வரும்போது ஒரு வெறுமை தோன்றுமே அதை மாதிரியே ஒரு பீலிங் .
No comments:
Post a Comment