Wednesday, October 24, 2012

pothysil oru pozhudhupothysil oru pozhudu

விஜயதசமி அன்று நாங்கள் தீபாவளிக்கு புது துணிகள் எடுப்பது எங்கள் குடும்ப வழக்கம். அதன்படி இன்று காலை சுமார் 10 மணி அளவில்  குடும்பத்தினர் அனைவருடன்  போத்திஸ்  கடைக்கு சென்றோம். 
 போக்குவரத்து  நெரிசலை எதிர்பார்த்து சென்ற எங்களுக்கு  அண்ணா சாலையில் போக்கு வரத்து சீராக   ஒழுங்குபடுத்த பட்டிருந்தது  மிகுந்த ஆச்சரியத்தை கொடுத்தது. 

உள்ளே நுழைந்ததும்  கனிவான வரவேற்பு.  யாருக்கு என்ன தேவை 
என்பதை கேட்டு அந்த பிரிவிற்கு அனுப்புவதில் தொடங்கி  கவுண்டரில் பில் போடுவது வரை ஒரு அழகான ஒழுங்கு முறை கடை பிடிக்கபடுகிறது .  
நூற்றுக்கனக்கான  மக்கள் உள்ளே இருந்து ம்  துணிவகைகளை தேர்வு 
செய்வது  எளிதாக இருந்தது. வகை வகையான மாதிரிகள் நம்மை அசத்துவது என்னவோ  நிஜம்.  விலையும்  நியாயமாகவே  பட்டது.

இதற்கு முந்தைய  வருடங்களில்  நான்கு  அய்ந்து  கடைகளை தேடி 
செல்ல வேண்டும். அந்த கடைகளிலும்  ஓர்  அளவே  சரக்குகள் இருக்கும் .
கூட்டம் காரணமாகவோ அல்லது வேலை  பளு காரணமாகவோ  அல்லது முதலாளிகளின் மேல் உள்ள எரிச்சலின்  காரணமாகவோ  
ஊழியர்கள் நம் மீது  கடுப்பு கலந்த  அன்பினை பொழிவார்கள் . ஏதும் வாங்கவில்லை என்றால் நம் காதுபட வசவும் பொழிவார்கள் . 

இந்த   தொல்லைகள்  எதுவும் இல்லாமல் நிதானமாக தெரிவு செய்ய முடிந்தது.  வந்திருந்த அனைவருக்கும் சர்கரைபொங்கல்   வழங்கப்பட்டது , அதுமட்டும் இல்லாமல்  மாலை  வெண் பொங்கலாம் ,
இரவு கேசரியாம் .   அத்தனை வசதிகளையும் கொடுத்து  தன்  ஆக்டோபஸ் 
கரங்களை நீட்டி  அணைத்து மக்களையும் கபளீகரம்  சப்தமில்லாமல்  
செய்து கொண்டிருக்கிறது இந்த  மெகா ஷாப் . 


வெல்லக்கட்டியை எறும்புகள் மொய்ப்பது போல அண்ணா சாலையும் 
திருவிழா முடிந்த  திடலை போல நேரு வீதி காட்சி அளித்ததும்  மனதை என்னவோ  செய்தது.   

போதீசுக்கே  புதுவை இந்தகதி என்றால்  

. .

No comments:

Post a Comment