Thursday, September 13, 2012

IRUBATHIN THODAKKAM

இன்று மதியம்  LIC  புதுவை கிளை ஒன்றில் பணி புரியும் நண்பர்கள் (இரு பாலரும்)  தாம் பணியில் சேர்ந்த இருபதாம் வருட தொடக்க நாளை  மிக விமரிசையாக  அனைவருக்கும்  மதிய  உணவுடன்  சிறப்பித்து மகிழ்ந்தனர் .

 அந்த  மகிழ்வில் நானும் பங்கு பெற்றேன்.  என்ன ஒரு சிறப்பான ஏற்பாடு .
  சுமார் 100 பேருக்கு மேல் கலந்துகொண்ட அந்த உணவு விருந்தில் சிறப்பு அம்சமே   பல்வேறு நிலைகளில் இருக்கும் பணியாளர்கள்  ஒரு சேர உணவு
உண்டது அதுவும் மகிழ்வுடன் கலந்துரையாடி உண்டது   LIC ல்  ஒரு  அற்புத
காட்சி.

 அனைவரின்  முகங்களிலும்  சந்தோஷ ரேகை . சாத்தியமாகுமா  என்பதை
சாத்தியமாகி இருக்கிறார்கள்  நண்பர்கள். சிட்டென பறந்து  உணவு பரி மாறுதல் ,  சட்டென  முகமலர்ந்து  வரவேற்ற பாங்கு  அழகான ஒருங்கிணைப்பு  அத்தனையும் நிகழ்ச்சிக்கு மெருகூட்டியது.

தாம்பூல பை கொடுத்திருந்தால்  அது நம் வீட்டு  திருமண நிகழ்ச்சி போல் இருந்திருக்கும் .

இதுபோன்ற நிகழ்வுகள் அடிக்கடி நிகழுமாயின்  குழுமனப்பான்மை பெருகி  தாம்  பணிபுரிகின்ற  நிறுவனம் நிச்சயம் மென் மேலும் வளரும்.

இரும்புகோட்டையை  போல் உள்ள நம் LIC   நிறுவனம் தற்போது திட்டமிட்டு
பல் வேறு தாக்குதலுக்கு ஆளாகிறது . இந்த கோட்டையின்  நம்பிக்கையை காப்பது  நம் அனைவரின் கடமை .  அதிகாரிகள், வளர்ச்சி அதிகாரிகள் ,முகவர்கள் , ஊழியர்கள்  என அனைவரும் இணைந்து  இப்படி ஒரு தொடக்கத்தை  துவங்க காரணாமாய் இருந்த  நண்பர்களே  நீங்கள் மேலும் மேலும் வளரவேண்டும் .


  உங்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி.

   இ து தொடரட்டும் சுகமாக ...






     

No comments:

Post a Comment