Monday, September 3, 2012

punch punch

இன்று கடற்கரையில் என் பழைய நண்பர்களை பார்த்தேன். அனைவரும்
அமர்ந்து  சில மணி நேரம் நிறைய   விஷயங்கள்  பேசினோம் . இதில் என்ன
சுவாரசியம் என்கிறீர்களா? உரையாடல்களின் ஊடே திரைப்படங்களின்  பஞ்ச்
வசனங்கள் சரளமாக வந்து விழுந்து உரையாடல்களை உற்சாகமாக ஆக்கியது..    திரைப்பட வசனங்களுக்கு இவ்வளவு தாக்கமா.  அப்படி என்ன பஞ்ச் வசனம் என்கிறீர்களா.  இதோ  எங்கள் பேச்சின் இடையிடையே  வந்த
திரை வசனங்கள்.

1.   ஆணியே புடுங்க வேண்டாம்
2.    பத்த வச்சிட்டியே பரட்டை
3.    போகணும்னு மட்டும்தான் தோணுது எங்க போறதுன்னு தெரியலையே
4.     என் பேச்சை நானே கேட்க மாட்டேன்.
5.     அது
6.      நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்.
7.      சாந்தா ஏன் பாட்டை நிறுத்து விட்டாய்  பாடு  சாந்தா பாடு
8.      முருகன் ஒரு மா மேதை
9.       தெய்வமே கலங்கி நின்ன அதுக்கு யாரால மாமா ஆறுதல் சொல்ல
         முடியும்.
10.     பேச்சு பேச்சாத்தான் இருக்கணும்
11.     பிங்கலன் ஒரு அப்பாவி
12.     சித்தப்பா உடன் பிறந்தே கொல்லும்  வியாதி 
13.      நான் ஒரு தடவை  சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி
14       தமிழ்லே எனக்கு  பிடிக்காத வார்த்தை
15      மாப்பிள்ளை என்ன செய்றாரு  போண்டா   சாப்பிடுறாரு
16.     ஆனந்தா  என் கண்களையே உன்கிட்டே ஒப்படைக்கிறேன்
17.     வரும்  ஆனா வராது
18.     அவனனவன்  பத்து பதினைஞ்சு   friends ய்  வைச்சிக்கிட்டு  சந்தோஷமா
           இருக்கான்  நான் ஒரே ஒரு friend அ  வச்சிக்கிட்டு  ஐயையோ
19           ஆண்டவன் தடுக்கிறத யாராலும் கொடுக்க முடியாது.
20       நீயெல்லாம் நல்ல வருவடா
21       என்னத்த சொல்லி  என்னத்த செய்ய
22       எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்
 இதெல்லாம் நாங்கள் ஒருவரை பற்றி ஒருவர் விசாரித்துகொண்டு இருக்கும் போது  விழுந்த வார்த்தைகள் .  எந்த மாதிரி இன்னும் எத்தனை  வசனங்கள்  இருக்கோ  உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்களேன்.
மேலே உள்ளவைகள் எந்த படத்தில் வருது யார் பேசியது என்று உங்களால்
முடிந்தால் எனக்கு தெரிவிங்கலேன் .   

No comments:

Post a Comment