Thursday, July 26, 2012

valimai ullavan vaichathu ellam

கொச்சி மங்களூர் பெங்களூர்  இடையே குழாய் வழியே ஏரி வாயு கொண்டு செல்லும் திட்டத்தை மத்திய அரசின்  கெயில் நிறுவனம் செயல்படுத்த உள்ளது . இத் திட்டத்திற்காக தமிழ்நாட்டின் சேலம் கோவை கிருஷ்ணகிரி நாமக்கல் தருமபுரி திருப்பூர் போன்ற மாவட்டங்களின் வழியாக குழாய் பதிக்கபடவுள்ளது . இதனால் அப்பகுதிகளில் நிலம் கைய கப்படுதபடுகிறது .
அப்பகுதி மக்கள் தங்களின் நிலம் கைய கபடுத்தகூடாது என்று போராடி வருகின்றனர் .  இந்நிலையில்  கெயில் நிறுவனம்  தங்களின் குழாய்  பதிக்கும் பணிக்கு காவல் துரையின் பாதுகாப்பு வேண்டும் என உச்ச நீதி  மன்றத்தில் மனு செய்தனர்.

வழக்கை விசாரித்த உச்ச நீதி மன்றம்  ஒரு  ஆரோக்கியமான  தீர்ப்பை  வழங்கியுள்ளது . அதன் சுருக்கமான விபரம் இது .

          தங்களின் விவசாய நிலத்திற்கு பாதிப்பு ஏற்படும் சூழ்நிலையில்  விவசாயிகள் போராடுவது இயல்பான ஒன்று. அதை உத்தரவு என்ற பெயரில் நசுக்க முடியாது. இதனை வெறும்  ஒரு சட்டம் ஒழுங்கு ப்ரசினையாக பார்க்க
முடியாது . விவசாயிகள் எழுப்பும் நியாயமான கேள்விகளுக்கு பதில் அளித்து
அவர்கள்  ஏற்றுகொள்ளும் வகையில் தீர்வுகளை ஏற்படுத்தும் கடமை அரசுக்கு  உண்டு . எனவே  கெய்லின் மனுவை ஏற்க முடியாது .

           மேலும் அந்த தீர்ப்பில் நந்திகிராமம்  சிங்கூர் போன்ற நிலைமை வேண்டாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

இம்மாதிரி தீர்ப்புகளை பார்க்கும்போது  நம் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை அதிகரிக்கிறது ..  இந்த நேரத்தில் புரட்சி தலைவர் ஒரு படத்தில் பாடிய பாடல்தான் நினைவுக்கு வருகிறது.
                                                                                                                                                                                       
   வலிமை உள்ளவன் வச்சவன் எல்லாம் சட்டம் ஆகாது தம்பி
    பிறர் வாழ உழைப்பவன் சொல்லுவது எல்லாம் சட்டம் ஆகணும் தம்பி.

     




No comments:

Post a Comment