Saturday, July 28, 2012

SIRITHU VAAZHVOM 2

 பக்கத்துக்கு வீடு சிறுவன் சொன்ன சிந்திக்கவைத்த நகைச்சுவை.


 ஒரு  குல்லா (CAP)  வியாபாரி  வியாபாரத்துக்கு சென்றபோது  ஓய்வு  எடுக்க எண்ணி ஒரு மரத்தடியில் உறங்கினான் . அவன் உறங்கியபோது மரத்தின் மேல் இருந்த குரங்குகள்  அவனிடம் இருந் தா குல்லா  அனைத்தையும் எடுத்து கொண்டு மரத்தில் மேல் அமர்ந்துகொண்டன . கண் விழித்த வியாபாரி குல்லா க்களை  காணமல் திகைத்து  பின் மரத்தில் குரங்குகள் வைத்திருப்பதை கண்டான்.  உடனே சமயோசிதமாக தான்  அணிந்திருந்த குல்லா வை வீசி எறிந்தான் . உடனே குரங்ககளும் தங்களிடம் இருந்த குல்லாக்களை வீசி எரிந்து விட்டன . வியாபாரியும் குல்லா க்களுடன் வீடும் திரும்பினான் . 


ஆண்டுகள் ஓடின . வியாபாரி நோயுற்றான் . அவன் தன மகனை அழைத்து 
வியாபாரத்தை அவனை தொடர சொன்னது மட்டுமன்றி  குரங்குகளின் சேட்டைகள் பற்றியும் சொன்னான். அப்போது எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்றும் சொன்னான். 


வியாபாரத்துக்கு சென்ற மகனும் ஓய்வுக்கு மரத்தடியில்  தூங்க  குரங்குகளும் குல்லா வை திருட  ஒரு நமுட்டு சிரிப்புடன் குரங்குகளை பார்த்த வியாபாரியின் மகன்  தன தந்தை சொன்னது போல குல்லா வை 
வீசி எறிந்தான் . பதிலுக்கு குரங்குகள்  குல்லா வை வீசவில்லை.   இதைகண்டு  திகைத்து நின்ற வியாபாரியின்  மகனிடம்  வந்த ஒரு குட்டி குரங்கு 


         ஒனக்கு மட்டும்தான் ஒங்கப்பா  சொல்லித்தருவாரா ?











    

No comments:

Post a Comment