Saturday, July 14, 2012

LE QUATORZE JUILLET- RAJA PANDIGAI

le quatorze jullete -- raja pandigai  - வருடா  வருடம் கொண்டாப்படும் ஒரு திருவிழா . பாஸ்டில் சிறையுடைப்பு நாளே ராஜா பண்டிகை என்று கொண்டடபடுகிறது.  இந்த நாளே  பின் நாளில்  french  புரட்சிக்கு வித்திட்டது . இது பிரான்ஸ் நாட்டில் சிறப்பாக கொண்டாடப்படும் .


புதுவையிலும்  ஒருகாலத்தில் மிகசிறப்பாக கொண்டாடப்பட்ட இந்த திருவிழா இப்போதும் கொண்டாடப்படுகிறது .ஆனால் அன்றைய . நாளில் இருந்த உற்சாகம் இப்போது இல்லை .

இப்போது நேரு சிலை இருக்கும்  இடத்தில்தான் அப்போது பல்வேறு நிகழ்சிகள் நடைபெறும் .நிறைய போட்டிகளும் நடக்கும். அதில்  மிகவும் சுவாரசியாமான போட்டி  வழுக்கு மரம் ஏறுதல்...  ஒரு உயரமான கம்பத்தில் நிறைய பரிசு பொருட்கள் கட்டி தொங்க விடப்பட்டிருக்கும். கம்பத்தின் மீது வழுக்கும் வஸ்துக்களை தடவிஇருப்பார்கள்.நாம் அந்த வழுக்கு மரத்தின் மீது ஏறி பரிசுபோருட்களை எடுத்துகொள்ளலாம் . மரத்தில் ஏறும் பொது நாம் வழுக்கி வழுக்கி விழுவோம். பார்க்க மிகவும் சுவாரசியமாக இருக்கும்.

பள்ளி நாட்களில் நானும் ஒருமுறை கலந்த கொண்டேன் .  வெற்றிபெறவில்லை என்பது வேறு செய்தி, ஆனால் வீட்டில் விழுந்த அடி இன்றும் எனக்கு நினைவில் இருக்கிறது . காரணம் என்ன  என்றால்  அந்த வழுக்கு மரத்தில் பன்றி கொழுப்பு தடவி இருப்பதாக  எங்கள் வீட்டில் சொல்லப்படிருக்கிறது . அது மட்டுமில்லை  உடம்பில் உள்ள கொழுப்பு போகவேயில்லை.  நான் அறிந்தவரையில்  வாகனத்தில் பூசப்படும்  greese தான்  வழுக்கு மரத்தில் உள்ளது . இதுஎனக்கு நண்பர்கள் சொல்லி  உசுபேற்றிவிட்டு போட்டியில் கலந்துகொள்ள செய்து  உடம்பை ரணகளம் ஆக்கி விட்டார்கள்.

பிறகு நான் 3 நாட்கள்  செங்கல் கொண்டும், வைக்கோல் கொண் டும் உடம்பை தேய்த்து  தேய்த்து செங்கல்லும் வைக்கோலும் கரைந்ததுதன் மிச்சம்.

இன்று வரை வழுக்கு மரத்தில்  பூசப்படிருந்தது  பண்ணி கொழுப்பா அல்லது க்ரீசா என்று எனக்கு தெரியவில்லை.   உங்களில் யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்களேன் .  

No comments:

Post a Comment