Sunday, July 29, 2012

aadi maadham

ஆடி மாதம் ஒரு காலத்தில்  நினைத்தாலே இனிக்கும் திருவிழா.
மழைக்காலம் தொடங்குவதர்க்கான முன்னோட்டம். தென் மேற்கு பருவக்காற்று தேனி பக்கம் வீசும்போது சாரல் மழைச்சாரல் தெம்மாங்கு பாடிக்கொண்டு சிலி சிலு வென்று போடுதம்மா தூறல்.  ஆடிமாத சிறப்பினை  குறிப்பாக பதினெட்டாம் பெருநாள் திருநாளை கல்கியின் பொன்னியின் செல்வன்  நாவல் படித்தோருக்கு நன்றாக நினவு இருக்கும்.
எனக்கு நினைவு தெரிந்தே காவேரி ஆற்றின் ஓரத்தில்  சித்திரான்னமும் 
கூட்டஞ் சோறும் நாங்கள் அனைவரும் சாப்பிட்டது  பசுமரத்து ஆணி போல் நெஞ்சில் இருக்கிறது.  கிராமங்களில் குறிப்பாக ஆற்றின் ஓரமாக  அல்லது நதியின் ஓரமாக குடும்பம் குடும்பமாக  விழாவினை கொண்டாடுவார்கள்ஆ டியில் உழவுத்தொழிலை  துவக்கி தையில் அறுவடை செய்வார்கள் .  ஆடிமாதம் அம்மன் கூழ் ஊற்றும் படலம் இன்றும் தொடர்கிறது . ஊர்கூடி ஒன்றாகும் திருவிழா அது . ஆனால் 
இன்று ஆடிபண்டிகை அப்படியா நடக்கிறது . 

 தண்ணீரை விலை கொடுத்து வாங்கும் நகரத்து பக்தர்கள்  கொண்டாடும் 
ஆடி  திருவிழா ஒரு நேரடி பார்வை.

     சூரியன் உதிப்பதற்கு முன்னே   கன்ன்ன்னாத்தா  எங்க   செல்லாத்தா 
      கோயில் ஒலிபெருக்கியில் உச்சஸ்தாயில்  ஒலிக்கும். 

     நன்கொடை புத்தகத்தை  தூக்கிக்கொண்டு  மிரட்டலுடன் ஒரு கும்பல் .
      
     கோஷ்டி மோதல் - தன்மான பிரச்சனை,  வசூலில் கொள்ளை .

      கூத்து என்ற பெயரில்  கூத்தடித்தல் , மெல்லிசை  என்ற போர்வையில் 
       ஆபாச அங்க அசைவுகளுடன்  கருத்தாழமிக்க ???? கானங்கள். 

      எல்லாவற்றிற்கும் மேலாக  போக்கு வரத்து நெரிசல் . 

       ஒரே ஒரு நல்ல அம்சம்  பண்பாடு   காக்கும் நம்  பெண் இனம் 
         அன்றைய தினம் மங்களகரமாக இருப்பதுதான் . 

இத்தனை இருந்தாலும் திருவிழா திருவிழா தான். 

   சரி  சரி என்பங்கிற்கு நானும் ஆடி மாதத்தை கொண்டாட எனக்கு பிடித்த 
பாடல  கேக்கிரேன் .  நீங்களும் என்னைய திட்டிகிட்டே கேளுங்க .

ஆடி வெள்ளி தேடி உன்னை நானடைந்த நேரம்
கோடி இன்பம் நாடி வந்தேன் காவிரியின் ஓரம்
ம்ம்ம்ம்ம்ம்ம் காவிரியின் ஓரம்
ஆடி வெள்ளி தேடி உன்னை நானடைந்த நேரம்
கோடி இன்பம் நாடி வந்தேன் காவிரியின் ஓரம்
ஓரக்கண்ணில் ஊறவைத்த தேன் கவிதைச் சாரம்
ஓரக்கண்ணில் ஊறவைத்த தேன் கவிதைச் சாரம்
ஓசையின்றிப் பேசுவது ஆசையென்னும் வேதம்
ஆசையென்னும் வேதம் அஹ்ஹஹ்ஹா அஹ்ஹஹ்ஹா
ஆஆஆஆஆ ஆஆஆஆஆ ஆசையென்னும் வேதம்
வேதம் சொல்லி வேடமிட்டு மேடை கண்டு ஆடும்
மெத்தை கொண்டு தத்தை ஒன்று வித்தை பல நாடும்
வேதம் சொல்லி வேடமிட்டு மேடை கண்டு ஆடும்
மெத்தை கொண்டு தத்தை ஒன்று வித்தை பல நாடும்
நாடும் உள்ளம் கூடும் எண்ணம் பேசும் மொழி மௌனம்
ராகம் தன்னை மூடி வைத்த வீணை அவள் சின்னம்
வீணை அவள் சின்னம்
நம்தனம்த நம்தனம்த நம்தனம்த நம்தனம்த நம்தனம்த
நம்தனம்த நம்தனம்த நம்தனம்த நம்தனம்
அஆஆஅ ஆஆ ஆஆ ஆஆஆஆ ஆஆ ஆஆ
ஆஆஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆஆஆ
வீணை அவள் சி்ன்னம்
சின்னம் மிக்க அன்னக்கிளி வண்ணச்சிலை கோலம்
என்னை அவள் பின்னிக் கொள்ள என்று வரும் காலம்
காலம் இது காலம் என்று காதல் தெய்வம் பாடும்
கங்கை நதி பொங்கும் கடல் சங்கமத்தில் கூடும்
சங்கமத்தில் கூடும்
ஆடி வெள்ளி தேடி ஆஆ..
உன்னை நானடைந்த நேரம்
கோடி இன்பம் நாடி வந்தேன் காவிரியின் ஓரம்
காவிரியின் ஓரம்
ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ
 


                  



No comments:

Post a Comment