Saturday, July 28, 2012

sirithu vaazhvom

நகைச்சுவை மனிதனுக்கு இன்றி அமையாத ஒன்று . வயிறு வலிக்க சிரிப்பவர்கள் மனித ஜாதி , பிறர் வயிர் எரிய சிரிப்பவர் மிருக ஜாதி என்ற ஒரு திரைப்பாடல்கூட உண்டு. சிரிப்பில் எத்தனை வகையுண்டு என்று கலைவாணர்  N.S.K.  ஒரு படத்தில் சிரித்தே  காண்பித்திருப்பார் . தினம் ஒரு நகைச்சுவை என்னும் சுவையை எந்த  வடிவிலாவது சுவைக்க நேர்ந்தால்  அந்த நாளே இனிமையாக இருக்கும்.  இப்போது நான் படித்த நகைசுவை ஒன்று உங்கள் பார்வைக்கு.


ஒரு அரசன் தன மந்திரியை ஒரு நாள் அழைத்து  இந்த நாட்டில் உள்ள மிகச்சிறந்த 5 முட்டாள்களை தன கண் முன் நிறுத்துமாறு கட்டளை இட்டான். மந்திரி செய்வதறியாது  திகைத்து பின் மனதை தேற்றிக்கொண்டு  ஒரு வாரத்தில் 5 முட்டாள்களை அழைத்து வருவதாக மன்னனுக்கு  வாக்களித்துவிட்டு  சென்றான்.


ஒரு வாரம் கழிந்தது . அரச சபை முன்னே மந்திரியும்   ஒவ்வொரு முட்டாளாக அறிமுகப்படுத்தினான். 


 அரசே  இவன் மாட்டு வண்டியின் மீது  அமர்ந்துகொண்டு கையில் பெரிய வைக்கோல் கட்டை  சுமந்துவந்துகொண்டிருந்தான்.  கேட்டதற்கு  மாட்டிற்கு வலிக்குமே என்றான்.  இவன் 5வது முட்டாள் .
                                                                                  
வேந்தே  தன் வீட்டின் கூரையில் முளைத்த புல்லை மேய  எருமை மாட்டை விட்டிருந்தான் . இவன்தான் 4வது முட்டாள்.                                                             


என்பணியை விட்டுவிட்டு முட்டாள்களை தேடி அலைந்தேனே  நான்தான் 
3வது முட்டாள். 


நாட்டில் எவ்வலோவோ பிரச்சனைகள் இருக்க  முட்டாள்களை கொண்டு வரச் சொன்னீர்களே  நீங்களே 2 வது முட்டாள் என்று கூற சபையே மிரண்டுபோய்  நின்றது.  ஆனால்  அரசரோ மந்திரியின் கூற்றை ரசித்தவாரே ஒப்புக்கொண்டு  சரி சரிமுதலாம்  இடத்தை பிடித்த முட்டாள் யார் என்று வினவ  ---     மந்திரி சிரித்துகொண்டே 


              வீட்டில, நாட்டுல , அலுவலகத்திலே , ஆன்மீகத்திலே , அரசியல்லே  இலக்கியத்திலே  சினிமாவிலே இன்னும் எது எதிவிலோ 
பிரச்சினகைகள்  இருக்க  வேலை மெனக்கட்டு இதை  படிக்கின்ற வர்களை  தவிர வேற  யார் இருக்க முடியும்    என்றார் 






       




No comments:

Post a Comment