Thursday, July 5, 2012

konjam sindhikkalamae

பிரதோஷ வழிபாடு : கடந்த சில வருடங்களாகவே  புதுவையில்  பிரதோஷ வழிபாடு நாளுக்கு நாள்  ஆன்மீக அன்பர்களின் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது
வழிகிறது  கூட்டம் மட்டும் இல்ல  கடவுளுக்கு அபிஷேகம் செய்ய பாலும் தான் .  நான் வசிக்கும் பகுதியில் ஒரு கோயிலில் பிரதோஷ வழிபாடு சிறப்பாக நடைபெறும்.. கோவிலில் இருந்து சுமார் 600 மீட்டர் தொலைவில் எனது வீடு உள்ளது..  நான் வீட்டில் இருந்து கொண்டே பிரதோஷ பூஜை ஆரம்பித்தாகிவிட்டது என்பதை அறிந் து கொள்வேன் . இது என்ன பிரமாதம்  என்கிறீர்களா . நான்  கோவில் மணி அடிக்கும்  சப்தத்தை வைத்தோ  அல்லது வீட்டிலிருந்து பார்த்தோ அறிந்து கொள்ள மாட்டேன் . உண்மையை சொன்னால் எனக்கு என்று பிரதோஷம் வரும் என்றே தெரியாது..

ஆனால் என்னால் சரியாக பிரதோஷ நேரத்தை சொல்லமுடியும்..

எப்படி என்றால்  எங்கள் வீதியில் உள்ள வடிநீர் வாய்க்காலில்  ஓடும் தண்ணீர்
அன்று மட்டும்   பாலாராக ஓடும்.. 600 மீட்டர் தொலைவில் உள்ள எங்கள் வீட்டு   வாய்க்காலில்  பாலாக மூடுகிறது  என்றால்  எத்தனை லிட்டர் பால் ஊத்த்தபட்டிருக்கும் , யாருக்கும் பயன் இன்றி .

நான் ஒன்றும் நாத்திகன் இல்லை.. ஆனால்  இதுபோன்ற  வழிபாடுகள்
மனதை என்னவோ செய்கிறது.  ஆன்மீக அன்பர்களே  தயவு செய்து  ஒரு
நிமிடம் யோசித்து பாருங்கள் . எத்தனை எத்த்தனை  இளம் சிறார்கள்  பாலின்றி தவிகின்றனர்.  இது போன்ற அபிஷேகங்கள் தேவையா..?
தேவையென்றால்  ஒரு குடத்தில் உள்ள பாலை மட்டும் அபிஷேகம் செய்துவிட்டு  மீதியை  பச்சிளம் குழந்தைகளுக்கு விநியோகம் செய்யலாமே --
தெய்வமே  குழந்தைக்கு பால்  கொடுத்ததை  நாம் புராணம் வாயிலாக   அறிவோம் . அந்த பாலை இப்படி வீனாக்கலமா .


     
  

No comments:

Post a Comment