Tuesday, August 14, 2012

vaazhga nee emman

இன்று சுதந்திர தினம்.   சுதந்திர தினம் வரும்போதெல்லாம் எனக்கு ஒரு சந்தேகம் கூடவே வரும்.   நாம் சுதந்திரம் பெற்ற அன்று மகாத்மா  ஏன் எந்த ஒரு  விழாவிலும் கலந்து கொள்ளவில்லை என்று. அதற்கான  விடை இன்று தான் பத்திரிகை வாயிலாக அறிந்து கொண்டேன். அதன் விவரம் கிழே .

         அந்த சமயத்தில் மகாத்மா கல்கத்தாவில் ஒரு முஸ்லிம் இல்லத்தில்
         தங்கி இருந்தார். அப்போது இந்து முஸ்லிம் கலவரம் .மிகப்பெரிய
         அளவில்கலவரம்   நடந்து கொண்டிருந்தது.  அங்கே அமைதி நிலவ
         மகாத்மா யாரும் போகாத இடத்திர்க்கெல்லாம் சென்று  பாதிக்கபட்ட
          மக்களுக்கு ஆறுதல் கூறியும் அஹிம்சையை வலியுறுத்தியும்
          பாத யாத்திரை மேற்கொண்டார்.   ஆகஸ்ட் 15  மகாத்மாவின் நிழல் போல
          இருந்து வந்த  தேசாய் என்பவற்றின் நினவு நாள். அந்த நாளில் மகாத்மா
          ராட்டினத்தில் நூல் நூற்று  மென் விரதம் இருப்பது வழக்கம். எனினும்
         அன்று இரவு நடைபெற்ற ஒரு  கூட்டத்தில்  பேசினார். அந்த கூட்டத்தில்
          இந்து முஸ்லிம் என சுமார் 30000 பேர்  மூவர்ணகொடியுடன் கலந்து
          கொண்டனர்.  மிகப்பெரிய கலவரத்திற்கு பின் அமைதியை  ஏற்படுத்தும்
          ஒரு நிகழ்வாக அது அமைந்தது.

            இந்திய நாட்டில் அனைத்து  மதங்களை சார்ந்தவரும்   ஒன்றாக
            இணைந்து  இந்திய இறையாண்மைக்கு  பாதுகாப்பாகவும்  நமது
            கலாசாரத்தை  பேணி காப்பதுமே மகாத்மாவின் தலையாய எண்ணமாய்
            இருந்த து .

தினமணி இதழில்  இன்று  வெளியான  இந்த கட்டுரையை முடிந்தால் படித்து பாருங்கள்.



இன்று வெளியான இன்று 

No comments:

Post a Comment