Wednesday, August 15, 2012

nalla nalla pillaigalai nambi



          அட்டைக்கத்தி திரைப்படம் இன்று காணப்போன  எனக்கு  ஒரு
          மகிழ்ச்சியான  அனுபவம் ஏற்பட்டது .

                  விடுமுறை தினம் ஆனதால் கொட்டகை இளைஞர்களால்
                  நிரம்பி வழிந்தது . திரைப்படம் இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை
                  இளைஞா  கூடினால்  அவர்களின் கொண்டாட்டம் எப்படி இருக்கும்
                  என்பது தெரிந்ததுதானே .  ஒரே கும்மளாம்தான்.விசில் சப்தமுடன்.

                   திடீரென்று  விளக்குகள் அணைக்கப்பட  படத்தை எதிர்பார்த்து
                   காத்திருந்த ரசிகர்களின் ஆரவாரம் மேலும் அதிகமாகியது.
                   ஆனால்  திரையில்  தேசிய கொடி  ஜனகன மன பாடலுடன்
                   தோன்றத் தொடங்கியது.

                   அப்போதுதான் அந்த வியப்புக்குரிய  காட்சி அரங்கேறியது
                   கூச்சலும் கொண்டாட்டமுமாக இருந்த திரை அரங்கு
                   திடீரென்று  அமைதி ஆனதுடன் நில்லாமல்  கூடவே  எழுந்து  நின்று
                    தேசிய கீதம் பாடியது.  இதை யாரும் சொல்லிதரவில்லை.
                 
                    தானாகவே  இளைஞர்களின் எழுச்சியை காண முடிந்தது.

                                                                                                                                             

                      நம் இளைஞர்கள்   தேசத்தின் மீது அக்கறை இல்லாதவர்கள்
                      அவர்களுக்கு  காதலும் சினிமாவும் குடிப்பதுவும் தான் தெரியும்
                      என்று நினைக்கும்  நெஞ்சங்களுக்கு  சவுக்கடி கொடுத்தது போல் 
                      இருந்தது அந்த நிகழ்ச்சி. 

                       இதை கண்ட எனக்கோ  விழிகளில் ஈரம் கசிந்தது . மனம் 
                        நெகிழ்ந்தது . 

                         இம்மாதிரி இளைஞர்கள்  இருக்கும் வரை இந்தியா என்னும் 
                          இரும்பு  கோட்டையை  எந்த சக்தியாலும்  அசைத்துக்கூட 

                          பார்க்கமுடியாது.




























                     

No comments:

Post a Comment