Thursday, August 30, 2012

solla solla

நேற்று நான்  SRI MANAKULA VINAYAGAR ENGINEERING COLLEGE  சென்றிருந்தேன் .  இப்போதுதான் முதல் முறையாக அங்கு செல்வதால்
வழி விசாரித்துக்கொண்டே சென்றேன் .  அப்போது வந்து கொண்டிருந்த
சில மாணவர்களிடம்  கல்லூரிக்கு வழி கேட்க அதில் ஒருவன் , சார் அந்த மரத்தை தாண்டியவுடன்  கல்லுரி  தான் என்றான் .  நான் சும்மா இருந்திருக்கலாம் .   தம்பி என்னால மரத்தை எல்லாம் இந்த வயசில தாண்ட முடியாது  வேற ஏதாவது வழி இருந்த சொல் என்றேன் .

அப்ப ஆரம்பிச்சாங்க பாருங்க பசங்க  நொந்து நூலாகிடேங்க .  அவங்க பாஷையிலேயே  சொல்றேன் கேளுங்க .

       மச்சி இன்னிக்கு பெருசுதான்  நமக்கு  ஜிலேபி . சார்  எப்பநீங்க  எங்களை
       மொக்கையா   சொரண்டிடீங்கலோ   அப்பா எங்கள் மொக்கையையும்
        நீங்க கேட்டுதான் ஆகணும்.

        1.  பஸ்  ஸ்டாப்பிலே  பஸ்  வரும் --  full  ஸ்டாப்பிலே  FULL வருமா ?

        2.   பஸ் போனா  பஸ் ஸ்டான்ட்  போகாது
              ஆட்டோ போன ஆட்டோ  ஸ்டாண்ட்  போகாது   ஆனா
               சைக்கிள் போன  சைக்கிள் ஸ்டாண்ட்  கூடவே போகும் .

         3.    காசு இருந் தா   call taxi   காசு இல்லேன்னா  நம்ம  கால்தான்  டாக்ஸி

          4.   மொட்டைக்கு  helmet  போடலாம்  ஆனா  helmettukku  மொட்டை போடா முடியுமா

           5.     SUNDAY la   சண்டைபோடலாம்  ஆனா
                    MONDAY la மண்டையை போடமுடியுமா


            6       என்னதான்  வாய்க்கால்லே   வாயும் காலும் இருந்தாலும்
                      அதால பேச முடியுமா இல்ல நடக்கத்தான் முடியுமா

             7.    வாயாலே நாம் நாய்ன்னு சொல்ல முடியும்  ஆனா நாயாலே  வாய் ன்னு  சொல்ல முடியுமா

          பசங்க சொல்ல்லிகிட்டேபோக  அப்பா போதும்டா சாமி இனிமே
          தப்பி த்தவறி கூட  மொக்கை போடமாட்டேன்னு  சத்தியம் செய்யாத
           குறையோடு தப்பி ஓடினேன் .
          

No comments:

Post a Comment