Wednesday, August 15, 2012

neelakkarayin orathil

நீலக்கரையின் ஓரத்தில்  ---

சமீப காலமாக புதுவை கடற்கரையில் அறிய வகை மீன்கள் மற்றும் கடல் வாழ் உயிரினங்கள் மீனவர்களின் வலைகளில் சிக்குகிறது . இதற்கு பருவ மாற்றம் காரணம் என்று கூறப்படுகிறது .  பருவமாற்றம் காரணமாக இருந்து விட்டு போகட்டும்  ஆனால் நாம் உன்னிப்பாக கவனிக்க வேண்டியவிஷயம்  ஒன்று உள்ளது . எந்த உயிரினமும் தாம் வாழ்வதற்குரிய சூழல் இருந்தால் தான்  அந்த இடத்தை  தான் வசிக்கும் இடமாக தெரிவு செய்து கொள்ளும் .
அப்படி இருக்க  அறிய வகை  கடல் வாழ் உயிரினங்கள் புதுவை நோக்கி
வருகிறதென்றால்  நாம் கண்டு கொள்ளாமல் இருக்கலாமா .

நம் கடல்வாழ் உயிரினங்களை ஆராய்ச்சி செய்யும் துறை என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் .  சில நாட்களுக்கு முன் புதிய வகை மீன் ஒன்று வலையில் சிக்கியபோது  அது என்ன வகை மீன் என்று தெரியவில்லை என்று
மீன்வளத்துறை  தன தலைமையகத்துக்கு செய்தி அனுப்பியதாக தகவல்.

நாம் காலத்தோடு செயல்பட்டால் சுற்றுலாத்துறையை மேம் படுத்த
பல்வேறு நடவடிக்கையை எடுக்கலாமே.
அறிய வகை மீன்களின்  வாழ்வாதாரத்தை நாம் புதுவையிலேயே  உருவாக்கலாமே . இதற்கு சுற்றுப்புற சூழல் ஆர்வலர்களும்  மீன்வள துறையும் நம் போன்றவர்களும் நம்மால் ஆனா பங்கை ஆற்ற வேண்டாமா .
குறைந்தபட்சமாக ஒரு விழிப்புணர்வை  உருவாக்க வேண்டாமா.

கொசுறு செய்தி:  பத்திரிகையில் வந்திருப்பதாக  ஒருவர் சொன்ன செய்தி.

 இலங்கை போலீசார்  சீனாவை சேர்ந்த  ஒரு குழுவினரை  தனது கடல் எல்லையில் கைது செய்ததாம்.  அனால் அன்று மாலையே அவர்கள் விடுதலை செய்யப்பட்டனாராம் .  விஷயம் என்னவென்றால்  அந்த குழு
சீன அரசாங்கத்தால்  இலங்கையின் அனுமதி பெற்று  கடல் சார்ந்த ஆராய்ச்சிக்காக வந்த குழுவாம் . மிக ரகசியமாய் இருந்த விஷயம் உள்ளூர்
காவலர்களுக்கே தெரியாதாம்.





No comments:

Post a Comment