Tuesday, August 4, 2015

traffic lights

நாங்கெல்லாம்  எப்பவும் அப்படித்தான்.

டிராபிக் சிக்னல்ஸ்  இன்று நூற்றாண்டு விழா  கானுகிரதாம் . தகவல் உபயம் வழக்கம்போல் இணையம்தான்.    ம் ம் ம்  ஒன்னுமில்லீங்கோ  எங்க ஊரை நெனைச்சி   ட்ராபிக் சிக்னலை  நினைச்சிதாங்க  பெருமூச்சி.

நாங்க மனுசங்களுக்கு  தாங்க மரியாதை கொடுப்போம் .அக்றிணை களுக்கு  மரியாதை கொடுக்கலாமா.  நாங்க வாகனம் ஓட்டும்போது  சிக்னலை பாக்கமாட்டோமுங்க . பதிலா போலீஸ்காரர் எங்க இருக்கார்னு பாப்போம் .அவரு இல்லன்னு வச்சிகுங்க  ஒரே ஜாலிதான் சும்மா சர் புருன்னு  சர்க்கஸ் மாதிரி வண்டி ஓட்டுவோம் பாருங்க . அட போங்க அதுக்கு ஒரு  தில் வேனுங்க.                                                                                                                                  

போலீஸ்காரங்கன்ன  சும்மாவா .  அவங்க சிக்னலா யாரும் பாக்காத இடத்துல  நின்னுகிட்டு கபால்னு  வந்து மடக்குவாங்க பாருங்க  சூபேரா இருக்கும் .

சமயத்துல வேற வழியில்லாம  சிக்னல்ல நிக்கறோம்னு வச்சிக்கிங்க
உயிரை கைல பிடிச்சிக்கிட்டு  நிப்போம் பாருங்க . அப்ப பீ  பி   டெஸ்ட் எடுத்தீங்க   ரீடிங்  எப்படி இருக்கும் தெரியுமா . வாணாம் உடுங்க  அத பாத்தாலே மறுபடியும்  ரீடிங் ஏறும்.

சிக்னல்ல நிக்கும்போது நிச்சயமா நம்மள  உரசின மாதிரி  ஒரு பஸ்சோ , லாரியோ, அல்லது  குப்பை வண்டி லாரியோ பக்கத்துல நிக்கும் . பின்னாடி ஒரு இநோவாவோ  தவேராவோ  மோதுவதற்கு தயாராக நி க்கும் . இதெல்ல பாத்துகிட்டு இருக்கும்போதே  சர்ருன்னு  ஒரு இளவட்டம் வித்தியாசமான
ஒலி எழுப்பிக்கொண்டு  எந்த பக்கம்  போகப்போரானு தெரியாமலே குறுக்க நிப்பான்.  திடீரென்று வண்டி எல்லா ம் ஓட ஆரம்பிக்கும்  ஆனா சிக்னல்ல  சிகப்பு விளக்கு எரிஞ்சிகிட்டே இருக்கும். நீங்க விதிகளை மதிச்சி பச்சை விளக்கு வரட்டும்னு காத்திருந்தீங்க  உங்க விதி முடிஞ்சிடும். நீங்க உலகத்தோட ஓட்ட ஒழுகினால் தா ன்  ஒழுங்க வீடு போக முடியும் .

இதெல்லாம் பாத்துகிட்டு  நூற்றாண்டு காணுகிற  சிக்னல் லைட்டு  ஏ வீ எம் சரவணன்  கையை கட்டிக்கிட்டு அமைதியாய் இருக்கிற மாதிரி  தேமேன்னு நிக்கும்.

ஆனா ஒன்னு மட்டும் புரிய மாட்டேங்குதுங்க . சிக்னலோ  போலிசோ இல்லாத இடத்துல  ட்ராபிக் மிக அழகாக இருக்குதுங்க.  

No comments:

Post a Comment