Sunday, August 30, 2015

தனி ஒருவன்


தனி ஒருவன்  ஜெயம் ரவி படம் ஒரு பார்வை===

படத்தின் ஆரம்ப  காட்சியே   ரசிகர்களின் கரவொலிஉடன்தொடங்கி விட்டது..
சவாலான  வில்லன்  சமாளிக்கும் கதாநாயகன் . விறு விறு என்று  கதை நகரத் தொடங்குகிறது. கதை களம் வித்தியாசமாக இருக்கிறது . ஒட்டு மொத்தமாக அருமையான டீம் வொர்க் .  அமர்களப்படுத்தி இருக்கிறார்  அரவிந்த்சாமி .
அருமையாக பொருந்தி இருக்கிறார் ஜெயம் ரவி.  துளி கூட போரடிக்கவில்லை. வசனங்கள் பளீச் . நீங்கள் துப்பறியும்  நாவெல்  படிப்பவர்  என்றால்  நிச்சயமாக பிடிக்கும் . கொடுத்த காசுக்கு வஞ்சனை இல்லாத படம்.


பி      கு. பதினைந்து வயதிலேயே  தமது  சாமர்த்தியத்தினால்  குறுக்கு வழியில்
வாழ்கையின் உச்சத்துக்கு போகும்  ஒரு பாத்திரம் , ஊரிலுள்ள   அத்தனை தொழில்களையும் தன் கட்டுபாட்டில் வைத்திருக்கும்  மகனின்   அரசியல் வாதி அப்பா   ஹவாலா மோசடி  மணல் கொள்ளை  இவைகளை படத்தில் பாக்கும்போது  ஏதோ  ஒரு குடும்பம் ஞாபகத்திற்கு வருது  ஆனால் படத்தின் ஆரம்பத்திலேயே  இவை கற்பனை பாத்திரங்கள் யாரையும் குறிப்பிடுவன அல்ல  என்று போட்டு விடுகிறார்கள்.  அதனால் என் எண்ணம் தப்பு ..

வாதி               அப்பா  

1 comment: