Wednesday, August 19, 2015

ஐயா பதில் சொல்லுங்க ஐயா

 நானொரு முட்டாளுங்க ....

தெரியாம சில கேள்விகளை கேட்டா   முட்ட்டாபயன்னு  திட்றாங்க .

என்ன கேள்வின்னு கேக்கறீங்களா ?  இதோ கேள்விகள்


ஒரு தியாகி  மது கூடாதுன்னு  ரொம்ப வருஷமா போராடிக்கிட்டு இருந்தாராம்  அறவழியில.   ஆனா திடீர்னு  செல்போன் டவர்லே  ஏறி
போராட்டம் பண்ணும்போது செத்து போயிட்டாராம்.  நோக்கம்  போராட்டம் எல்லாம் சரிதான். செல்போன்  டவர்ல ஏறலாமா ?  கேட்ட்ட என்ன முட்டாப்பயன்னு  சொல்றாங்க ==


மதுவை விட  புகைபிடிப்பது ஒன்னும் பெரிய பாதிப்பு இல்லைன்னு  ஒருத்தர் சொல்றாராம்.  பின்னே புகை பிடித்தால் புற்று நோய் வரும்னு
ஏன் சொல்றாங்க  கேட்டா என்ன முட்டா பயனு சொல்றாங்க

ஆட்சிக்கு வந்து கடையை திறந்தவரே   நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால்
கடையை மூடுவோம் என்கிறாரே - கேட்டா  என்ன முட்டா பயன்னு சொல்றாங்க ==

முன்னெல்லாம்  வர்க்கப்போராட்டம்   முதலாளி தொழிலாளி  அப்படின்னு பேசியவங்க எல்லாம்  இப்ப  தீண்டாமை , மது விலக்கு  மக்கள் நல கூட்டணி  என்று  பாதையை மாற்றி விட்டார்களே என்று கேட்டால்  என்ன முட்டா பயன்னு
 சொல்றாங்க .

 நாம குடிக்க கூடாத  மது உற்பத்தி செய்யற முதலாளியும் , பிடிக்கவே கூடாத சிகரெட்டை  விக்கிற முதலாளியும்  செழிப்பா  வாழறாங்க  ஆனா  நாம் சாப்பிட்டே ஆகவேண்டிய  உணவு பொருட்களை  உற்பத்தி செய்யற  விவசாயி  ஏன்  வறுமையிலே வாடராங்கனு  கேட்டா  முட்டா பயனு என்னை திட்றாங்க.

ஏங்க நான் முட்டாபயனாங்க ..

No comments:

Post a Comment