Monday, December 28, 2015

காக்கை  உட்கார  பனம்பழமா ==

இரண்டு நாட்களுக்கு முன் புதுவையில் இறுதி ஊர்வலம் பற்றி  ஒரு பதிவை முகநூலி ல் பதிவு  செய்திருந்தேன். அதில்  முப்பது வருடங்களுக்கு  புதுவையில்  இறந்தவருக்கு  போடப்பட்ட மாலைகள என்ன  செய்வார்கள்  என்றும்  தற்போது   இறுதிஊர்வலத்தில் வீசப்படும் மாலைகளால்  ஏற்படும்  அல்லல்களை  சொல்லி இருந்தேன்.. .

இன்றைய தினமலர்  நாளிதழில்  புதுவை நகராட்சி  ஆணையரின்  அறிவிப்பு  ஒன்று  வெளி வந்துள்ளது .  அது  உங்கள்  பார்வைக்கு

=========================================================================
===== உழவர்கரை நகராட்சி  ஆணையர்  வெளியிட்டுள்ள  செய்தி  குறிப்பு ========

             சவ  ஊர்வலத்தின் போது  மாலைகள்  மற்றும் மலர் வளையங்களையும்  உதிரியாகவும்  நார்களுடனும்  சாலைகளில்  வீசுகின்றனர்    இதனால்  பாதசாரிகள்  , இரு சக்கர வாகங்களில்  செல்வோர்  வழிக்கி  விழுந்து  விபத்துக்குள்ளாகி  காயமடைகின்றனர். சில சமயம்  உயிர்  சேதமும்  நேர்ந்துள்ளது .

எனவே  ஆபத்தான  சூழ்நிலைகளை  கணக்கில்  கொண்டு   சாலைகளில் மலர்கள்  மலர்  வளயைங்கள்  வீசுவதை  தவிர்க்க    அப்படியே  இடுகாடு, சுடுகாட்டில்  அவரவர்  சம்ப்ரதாயப்படி  வைத்து விட்டால்  அதை   நகராட்சி அப்பு ரப்படுத்தும்.

            இறந்தவர்  வீட்டில் குவியும்  மாலைகள்  மலர்  வளையங்கள் குறித்து  அணைத்து  நாட்களிலும்  காலை 9.00 மணி முதல்  மாலை  6.00  மணி  இயங்கும் இலவச தொலைபேசி எண்  18004255119 என்ற எண்ணில்   தெரிவித்தால்  அவற்றை சவ ஊர்வலம்  புறப்பட்ட  உடனே  இலவசமாக  அப்புறப்படுத்தப்படும் .============

======================================================================

என்பதிவு  கவனத்தை  ஈர்த்து  நடவடிக்கை எடுக்கப்பட்டதா  அல்லது  காக்கை உட்கார  பனம்பழமா என்று தெரியவில்லை   எது எப்படியாயினும்
உழவர்கரை நகராட்சி  ஆணையர்  அவர்களுக்கு   என்  நன்றியையும்  பாராட்டையும்  தெரிவித்துகொள்கிறேன்.  என் பதிவில் பின்னூட்டம்  அளித்த  நண்பர்களுக்கும்  நன்றி .




No comments:

Post a Comment