Thursday, July 30, 2015

abdul kalam

அந்த விஞ்ஞானி  வின்னுலகிர்கே  சென்று விட்டார் . மண்ணில் அவர் பணி  முடிந்துவிட்டது. . 

இரண்டு நாள் நிகழ்சிகளை மனம் அசை போடுகிறது. 

இப்படி ஒரு அஞ்சலியா?   திரும்பிய பக்கமெல்லாம்  கலாம் கலாம் . இது காசு கொடுத்து நடந்ததா.  அன்றாடம் காய்ச்சி முதல்  அரசு வரை  ஆத்மார்த்தமான அஞ்சலியை  செலுத்தியது  எப்படி சாத்தியம்.  அவர் மிகபெரிய திரை  நட்ச்சத்திரமா . பெரிய அரசியல் கட்சி தலைவரா  அல்லது மதத்தலைவரா . எது அவருக்கு  இம்மாபெரும்  புகழை ஈட்டி தந்தது.  ஒரே பதில்   அவர் ஒரு சாதாரண மனிதர். இயல்பாக பழகக்கூடியவர். நல்லவர் .குழந்தைகளை நேசிப்பவர், இளைஞர்களின் உந்து சக்தி  எல்லாவற்றிக்கும் மேலாக  மனித நேயம் மிக்கவர். 

பதவி அவர் தலையை  வீங்கச்செய்யவில்லை .  படிப்பு அவரை பாமரர்களிடமிருந்து  அந்நிய படுத்தவில்லை.  மெய்ஞானம் கலந்த விஞ்ஞானி . மாசற்ற தேசிய உணர்வு , தாய்  நாட்டை  உயர்த்தி காட்டுவதிலே 
தீராத அர்பணிப்பு.  

இவை எல்லாவற்றிக்கும் மேலாக   நல்லவர், நம்மவர், நம்பிக்கைக்கு உரியவர்  என்ற அனைவரின் உள்ளத்திலும்  உள்ள அழுத்தமான  கருத்தின் பிரதிபலிப்பே  இப்படி ஓர் அஞ்சலியை சாத்தியமாக்கியது. 

ஆனால் இணையத்திலும் ஊடகங்களிலும்  சிலர் எதிர் மறை கருத்துக்களை எழுதியதை பார்த்தேன்.  அதே போல  தூக்கு கைதியை அப்பாவி போல சித்தரித்து  தூக்கு தண்டனை வேண்டாம்  என்ற தொனியில்  சில கட்டுரைகளையும் கண்டேன்.  அது அவரவர்  கருத்து . நாம் சொல்வதற்கு ஒன்றும் இல்லை . 

ஆனால் எனக்கென்று ஒரு கருத்து இருக்குமல்லவா.  கலாமை விமர்சிப்பவர்கள்   தேசத்தில் அவரின் பங்களிப்பில்   ஒரு சதவிகி தமாவது 
பங்கலளி த்திருப்பார்களா ? 

எதற்கு இறக்கிறோம்  என்று தெரியாமலேயே  தீவிரவாதத்திற்கு பலியான குடும்பத்தினரின் இழப்புக்கு காரணமான  குற்றவாளியை  ஒன்றும் தெரியாத அப்பாவி  போல் சித்தரித்து   எழுதுகிறார்களே   அவர்கள் இறந்தவர்களின் குடும்பத்தை நினைத்து பார்க்க மாட்டார்களா. 

வீரபாண்டிய கட்ட பொம்மன் படத்தில் ஒரு வசனம் வரும் 

     கட்டபொம்மனும்  எட்டப்பனும்  ஒரே  மண்ணில்         என்று . அதுதான் எனக்கு நினைவுக்கு வருகிறது. 
 

1 comment: